Just In
- 6 min ago படகு மாதிரி மிதந்து சென்ற ரூ2.44 கோடி கார்! இவ்வளவு வெள்ளத்துலயும் சின்ன டேமேஜ் கூட ஆகலயே!
- 53 min ago தஞ்சாவூரில் பிறந்து பாலிவுட்டை கலக்கி கொண்டிருக்கும் டைரக்டர்!! புதுசா வாங்கியிருக்கும் காஸ்ட்லீ கார்!
- 1 hr ago இந்த காரோட உடல் ரொம்ப நீளமா இருக்கும்! டெரிடரி பேருக்கு பதிவு செய்த ஃபோர்டு.. பெரிய சம்பவம் நடக்கபோகுது!
- 2 hrs ago ரூ.10,000க்கு இவ்ளோ சூப்பரான கேமராவா! இது பொருத்தினா திருட்டு, தேவையில்லா சிக்கல் எதுலையும் சிக்க மாட்டீங்க!
Don't Miss!
- Technology கடைசி நேர டிவிஸ்டு.. வாக்குச் சாவடியில் இந்த 11 ஆவணங்களில் எதை காட்டினாலும்.. ஒட்டு போடலாம்!
- Lifestyle வெயில் காலத்தில் உங்க இதயம் பாதுகாப்பாக இருக்கணுமா? அப்ப இந்த 5 விஷயங்களை ஒழுங்கா பண்ணுங்க...!
- News மதுரை எய்ம்ஸ்க்கு புது சிக்கல்.. இன்னும் கட்டுமான பணி தொடங்கலையாம்.. கிளம்பிய புகாரால் ‛அப்செட்’
- Finance ஏப்ரல் 19: உலகிலேயே காஸ்ட்லியான தேர்தல் இந்தியாவில் நடக்கிறது.. தலைசுத்தவைக்கும் பட்ஜெட்..!
- Sports PBKS vs MI : நம்ம ஹர்சல் படேலா இது.. கடைசி 5 ஓவரில் 5 விக்கெட்ஸ்.. மும்பையை கலங்கடித்த பஞ்சாப்!
- Movies Actress Sujitha: குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பாண்டியன் ஸ்டோர்ஸ் நாயகி.. சூப்பர்ல!
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
ஸ்கோடா ஆக்டேவியா ஆர்எஸ் கார் விபத்தில் சிக்கி இளைஞர் உயிரிழப்பு!
ஸ்கோடா ஆக்டேவியா ஆர்எஸ் கார் கோர விபத்தில் சிக்கியதில், ஓட்டல் அதிபர் மகன் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவத்தின் மூலமாக அனைத்து கார் ஓட்டுனர்களும் உணர்ந்து கொள்ள வேண்டிய விஷயத்தை இந்த செய்தியில் க
திருவனந்தபுரத்தில் ஸ்கோடா ஆக்டேவியா வஆர்எஸ் கார் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து விபத்தில் சிக்கியதில், 21 வயது இளைஞர் உயிரிழந்தார். இந்த விபத்து மூலமாக உணர்ந்து கொள்ள வேண்டிய விஷயத்தை இந்த செய்தியில் பார்க்கலாம்.
திருவனந்தபுரத்தை சேர்ந்த பிரபல ஓட்டல் அதிபரின் மகன் ஆதர்ஷ்[21]. கடந்த சில நாட்களுக்கு முன் இரவு 10 மணியளவில் தனது புத்தம் புதிய காரை எடுத்துக் கொண்டு, தனது தோழிகள் மூவருடன் ரவுண்ட் சென்றுள்ளார்.
இரவு 10.45 மணியளவில் திருவனந்தபுரம் ராஜ்பவன் சாலையில் அந்த கார் சென்றபோது, அங்கிருந்த சாலை சந்திப்பில் ஆட்டோரிக்ஷா ஒன்று யூ- டர்ன் அடிக்க குறுக்கே திரும்பி இருக்கிறது. அப்போது, அதிவேகத்தில் சென்ற ஆதர்ஷ் ஓட்டிச் சென்ற கார் கட்டுப்பாட்டை இழந்தது.
ஆட்டோரிக்ஷா மீது இடித்துத் தள்ளிய அந்த கார் அருகிலிருந்து மின் கம்பத்தில் மோதி விபத்துக்குள்ளானது. இதில், காரை ஓட்டிச் சென்ற ஆதர்ஷ் மற்றும் அவரது தோழிகள் மூவரும் படுகாயமடைந்தனர். ஆட்டோரிக்ஷா ஓட்டுனரும் காயமடைந்தார்.
இடிபாடுகளில் சிக்கிக் கொண்டிருந்த ஆதர்ஷ் மற்றும் அவரது தோழிகள், ஆட்டோரிக்ஷா ஓட்டுனரை போலீசார் மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். இதில், ஆதர்ஷ் பரிதாபமாக உயிரிழந்தார். தோழிகளும், ஆட்டோ ஓட்டுனரும் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.
ஸ்கோடா கார்கள் வலுவான கட்டமைப்புக்கு பெயர் பெற்றவை. ஆனால், இந்த விபத்தில் ஆக்டேவியா ஆர்எஸ் கார் மிக கடுமையாக சேதமடைந்தது.
ஆதர்ஷ் வாங்கிய ஸ்கோடா ஆக்டேவியா ஆர்எஸ் காரில் 8 ஏர்பேக்குகள் கொடுக்கப்பட்டு இருக்கின்றன. எந்த பக்கத்தில் மோதினாலும், பயணிகளை காப்பதற்கான ஏர்பேக்குகள் உள்ளன. பிரேக் பவரை தேவையான அளவு சக்கரங்களுக்கு சரிவிகிதத்தில் பிரித்து அனுப்பும் இபிடி நுட்பத்துடன் கூடிய ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம் உள்ளது.
அதுமட்டுமின்றி, அதிக நிலைத்தன்மையுடன் காரை செலுத்தும் எலக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி புரோகிராம், அவசர சமயத்தில் பயத்தில் பிரேக் பிடிக்கும்போது, தேவையான அளவில் பிரேக் பவரை செலுத்தி காரை உடனடியாக நிறுத்துவதற்கான பிரேக் அசிஸ்ட் நுட்பமும் இந்த மாடலில் இருக்கிறது.
கார் தரைப்பிடிப்பை இழந்து வழுக்கிச் செல்வதை தவிர்ப்பதற்கான டிராக்ஷன் கன்ட்ரோல் சிஸ்டமும் இந்த காரில் உள்ளது. இத்தனை இருந்தும், ஒன்றுகூட ஆதர்ஷ் உயிரை காப்பாற்றாதது துரதிருஷ்டம்.
இந்த கார் ஐரோப்பிய கிராஷ் டெஸ்ட்டில் அதிகபட்சமான 5 நட்சத்திர தர மதிப்பீட்டை பெற்ற மாடலும் என்பதையும் நினைவுகூற வேண்டிய விஷயம். ஆனால், இத்தனை விஷயங்களும் ஆதர்ஷ் விஷயத்தில் அர்த்தமற்றதாக மாறி இருக்கிறது.
ஆதர்ஷ் அதிவேகத்தில் காரை ஓட்டிச் சென்றதே, கார் கட்டுப்பாட்டை இழந்ததற்கு முக்கிய காரணமாக கூறப்படுகிறது. இதிலிருந்து, எத்தனை பாதுகாப்பு விஷயங்கள் இருந்தாலும், அதிவேகத்தில் காரை ஓட்டுவது உயிரையை பறித்துவிடும் என்பதை உணர்ந்து கொள்ளலாம்.
குறிப்பாக, நகர்ப்புறத்தில் கார் ஓட்டுபவர்கள் சீரான வேகத்தில் செல்வதே, விபத்துக்களை தவிர்க்க சிறந்த வழியாக இருக்கும். இரவு நேரத்தில் காலியாக இருக்கும் சாலைகளில் அதிவேகத்தில் செல்வது விவேகமான செயலாகவும் இருக்காது.
நம் காரில்தான் ஏகப்பட்ட பாதுகாப்பு விஷயங்கள் இருக்கிறதே, எப்படி வேண்டுமானாலும் என்று தாறுமாறாகவும், வேகமாகவும் ஓட்டுபவர்களுக்கு இது ஒரு பாடமாகவும் இருக்கும். அதிக சாலை சந்திப்புகள் உள்ள நகரப்புற சாலைகளில் ஓட்டும்போது மிகுந்த விழிப்புடன் செல்வதும், நிதான வேகத்தில் செல்வதும் அவசியம்.
கடந்த செப்டம்பர் 1ந் தேதி ஸ்கோடா நிறுவனத்தின் ஆக்டேவியா ஆர்எஸ் என்ற சக்திவாய்ந்த செடான் ரக கார் மாடல் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. அறிமுகம் செய்யப்பட்ட உடனே, இந்த காருக்கு முன்பதிவு வேகமாக முடிந்தது. முதல் லாட்டில் ஒதுக்கப்பட்ட 250 கார்களுக்கும் முன்பதிவு முடிந்தது.
இந்த புத்தம் புதிய காரை போட்டி போட்டு வாங்கியவர்களில் ஆதர்ஷ் தந்தையும் ஒருவர். ஆனால், ஆசைப்பட்டு வாங்கிய காரும், மகனையும் அவர் ஒரு மாதத்திலேயே இழந்து தவிப்பது பெரும் துயரம்தான். இரவு நேரங்களில் பிள்ளைகளிடம் காரை கொடுப்பதை பெற்றோர்கள் தவிர்க்க வேண்டும் என்பதையும் இந்த சம்பவம் உணர்த்துகிறது.
Tamil Car and Bike Fans Like Us On Facebook
Via- Bunnypunia