ராயல் என்பீல்டு பைக்கை பரிசளித்த மகன்... சந்தோஷம் தாங்காமல் தந்தை என்ன செய்தார் தெரியுமா? செம வீடியோ
ராயல் என்பீல்டு பைக்கை மகன் மிகவும் சர்ப்ரைஸாக பரிசளித்ததால், தந்தை செய்த காரியம் கவனம் பெற்றுள்ளது.

பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளுக்கு மோட்டார்சைக்கிள் அல்லது காரை பரிசளிக்கும் செய்திகளை பல முறை பிரசுரித்துள்ளோம். அதேபோன்று பிள்ளைகளும் தங்கள் பெற்றோர்களுக்கு மோட்டார்சைக்கிள் அல்லது காரை பரிசளிக்கும் செய்திகளையும் வெளியிட்டுள்ளோம். இந்த வரிசையில் தற்போது புதிய வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது.

இதில், மகன் ஒருவர் தனது தந்தைக்கு ராயல் என்பீல்டு கிளாசிக் 350 மோட்டார்சைக்கிளை பரிசளித்துள்ளார். தனது மகனிடம் இருந்து பரிசை பெற்றபின் அந்த தந்தை எப்படி வினையாற்றுகிறார்? என்பதையும் அந்த வீடியோ நமக்கு காட்டுகிறது. மெஷின் டைரிஸ் என்ற யூ-டியூப் சேனலில் இந்த வீடியோ வெளியிடப்பட்டுள்ளது.

இதில் தனது தந்தைக்கு என்ன செய்ய போகிறேன்? என்பதை மகன் ஒருவர் விளக்கும் காட்சிகளுடன் அந்த வீடியோ தொடங்குகிறது. அவர் தனது தந்தைக்கு பரிசளிப்பதற்காக, ராயல் என்பீல்டு கிளாசிக் 350 (Royal Enfield Classic 350) மோட்டார்சைக்கிளை, பெங்களூர் இந்திரா நகர் பகுதியில் உள்ள ஒரு ஷோரூமில் முன்பதிவு செய்திருந்தார்.

அவர் பைக்கை டெலிவரி எடுக்கும் காட்சிகளை நம்மால் வீடியோவில் காண முடிகிறது. நாங்கள் ஏற்கனவே சொன்னபடி அவர் தனது தந்தைக்காகதான் அந்த பைக்கை புக்கிங் செய்திருந்தார். அவரது தந்தை மைசூர் பகுதியில் வசித்து வருகிறார். அந்த டீலர்ஷிப்பில் இருந்து அவர் வசிக்கும் இடத்திற்கு சென்று சேர தோராயமாக 4 மணி நேரம் ஆகும்.

பைக்கை டெலிவரி எடுத்தபின் அவரது மகன் மைசூர் நோக்கி புறப்பட்டுள்ளார். தந்தையின் இருப்பிடத்தை அடைவதற்குள் இரவாகி விட்டது. பின்னர் பார்க்கிங் பகுதிக்கு வருமாறு தனது தந்தையை அவர் கீழே அழைக்கிறார். இதற்கிடையே தனது தந்தையின் காருக்கு முன்னால் அவர் பைக்கை நிறுத்தி விட்டார். பின்னர் அங்கிருந்த ஒரு பில்லருக்கு பின்னால் அவர் ஒளிந்து கொள்கிறார்.

தனது தந்தை கீழே வந்து எப்படி ரியாக்ட் செய்கிறார்? என்பதை பார்க்க வேண்டும் என்பது அவரது ஆவலாக உள்ளது. அவரின் தந்தை பைக்கை பார்த்தவுடன் காட்டிய முதல் ரியாக்ஸன் சந்தோஷமான சிரிப்புதான். அத்துடன் அவர் அந்த பைக்கை முத்தமிடவும் செய்தார். இதன்பின் அவர் அந்த பைக்கை பற்றிய கூடுதல் தகவல்களை தனது மகனிடம் கேட்கிறார்.

இதற்கு அவரது மகன், சில நாட்களுக்கு முன்பு பைக்கை புக்கிங் செய்ததாகவும், ஷோரூமில் இருந்து டெலிவரி எடுத்த உடன் நேராக இங்கு ஓட்டி வந்திருப்பதாகவும் கூறுகிறார். இதன்பின் அவரது தந்தை அந்த பைக்கில் சிறிய ரைடு சென்று விட்டு முகம் முழுக்க சந்தோஷத்துடன் திரும்பி வருகிறார். இதை எல்லாம் வைத்து பார்க்கையில், ராயல் என்பீல்டு பைக்கிற்காக அவர் பல ஆண்டுகளாக காத்திருந்தது போல் தெரிகிறது.
இந்த தந்தைக்கு பரிசாக கிடைத்திருப்பது ராயல் என்பீல்டு கிளாசிக் 350 பைக்கின் பிஎஸ்-6 வெர்ஷன் ஆகும். எலெக்ட்ரானிக் ப்யூயல் இன்ஜெக்ஸன், கார்பன் சென்சார் போன்ற மாற்றங்களுடன் இது வருகிறது. ராயல் என்பீல்டு நிறுவனம் ஏற்கனவே அனைத்து பிஎஸ்-4 மாடல்களையும் விற்பனை செய்து விட்டது. இந்த மைல்கல்லை இந்தியாவில் எட்டிய முதல் டூவீலர் பிராண்டு ராயல் என்பீல்டுதான்.


Click it and Unblock the Notifications








