100 சிசி மோட்டார் சைக்கிள் எஞ்சினில் லம்போர்கினி காரை வீட்டிலேயே தயாரித்த பலே விவசாயி..!!
100 சிசி மோட்டார் சைக்கிள் எஞ்சினில் லம்போர்கினி காரை வீட்டிலேயே தயாரித்த பலே விவசாயி..!!
தென் கிழக்கு ஆசிய நாட்டை சேர்ந்த ஒரு விவசாயி லம்போர்கினி நிறுவனத்தின் பிரபல அவென்டேடார் மாடலில் ஒரு காரை தன் வீட்டிலேயே தயாரித்து உலகையே ஆச்சர்யப்பட வைத்துள்ளார்.

ஸ்போர்டி திறன் கொண்ட மற்றும் சூப்பர் கார் மாடல்களில் பெரிய ஆர்வம் கொண்ட இந்த விவசாயி ஒரு சூப்பர் மாடல் கார் சொந்தமாக வாங்க பெரிய ஆர்வம் கொண்டுயிருந்தார்.

நிதிநிலை காரணமாக கார் வாங்கும் எண்ணத்தை விடுத்து தானே ஒரு கார் தயாரிக்கலாம் என்ற முடிவை எடுத்தார் அவர். அதற்கான திட்டம் வகுத்து கிட்டத்தட்ட லம்போர்கினி அவென்டேடார் தோற்றத்தில் இந்த காரை உருவாக்கி விட்டார்.
Recommended Video


100 சிசி திறன் பெற்ற மோட்டார் சைக்கிளின் எஞ்சினை இந்த காரில் பொருத்தியுள்ள அவர், காரின் ஒவ்வொரு வடிவமைப்பையும் லம்போர்கினி அவென்டேடாரை உணர்த்தும் வகையில் உருவாக்கியுள்ளார்.
தனது இந்த காருக்கு அவரே கட்டமைப்புகளை உருவாக்கியுள்ளார். மின்சாரத்தால் இயங்கும் காரின் கூரைப்பகுதி பார்க்கும் போது அசரடிக்கிறது.

மேலும் இந்த காருக்கு கருப்பு மற்றும் வெள்ளை நிறங்களில் பூச்சு வேலை செய்யப்பட்டுள்ளது. தவிர மாற்றியமைக்கப்படக்கூடிய ஹைட் சஸ்பென்ஷன், நகரும் வசதி கொண்ட ஸ்பாய்லர் உள்ளது.

தொடர்ந்து காரின் ப்ரொஜக்டர் விளக்குகள், டெயில் விளக்குகள் மற்றும் ஃபாக் விளக்குகள் ஆகியவை எல்.இ.டி திறன் கொண்டதாக பொருத்தப்பட்டுள்ளது.

கட்டமைப்புகள் மட்டுமில்லாமல், காரின் தொழில்நுட்ப செயல்பாடுகளும் அசரடிக்கும் வகையில் உள்ளதால் பல்வேறு ஊடகங்கள் விவசாயின் இந்த லம்போர்கினி அவென்டேடார் காரை சூப்பர் கார் என்றே குறிப்பிட்டுள்ளன.

லம்போர்கினி தயாரிக்கும் அவென்டேடார் கார்கள் 690 பிஎச்பி பவர் அளிக்கும் வி12 எஞ்சினுடன் தயாரிக்கின்றன.
ஆனால் விவசாயி தனது சூப்பர்காரில் 100சிசி கொண்ட அதுவும் மோட்டார் சைக்கிள் எஞ்சினை பொருத்தியுள்ளார்.

வெளிப்புறம் மற்றும் செயல்திறனில் மட்டுமில்லாமல், இந்த காரின் உள்கட்டமைகளையும் அதீத கவனத்துடன் தயாரித்துள்ளார். அந்த கட்டமைப்புகள் இந்த காரை அவென்டேடார் மாடலின் மாதிரி போலவே நமக்கு உணர்த்துகின்றன.

குறிப்பாக இந்த காரில் பொருத்தப்பட்டுள்ள இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டரும் ஒரு மோட்டார் சைக்கிளிலிருந்து எடுக்கப்பட்டது தான்.

இதுதவிர இந்த காரில் இருக்கைகள், பேடில் ஷிப்டர்ஸ் கொண்ட ஸ்டீயரிங் மற்றும் லம்போர்கினிக்கே உரித்தான ஜெட் ஃபிளைட்டர் ஸ்டைல் ஸ்டார்ட் பட்டன் ஆகியவை இதை ஒரு சூப்பர்காராகவே நம்ப வைக்கிறது.

கார்கள் மேல் உள்ள ஆர்வத்தால் இந்த விவாசியின் முயற்சிக்கு பல்வேறு பாராட்டுதல்கள் கிடைத்து வருகின்றன. உலகில் உள்ள பல வாகன ஆர்வலர்கள் இந்த செய்தியை வைரலாக்கி வருகின்றனர்.

இந்நிலையில் லம்போர்கினி நிறுவனம் இந்த செய்திக்கு என்ன மறுமொழி கூறவுள்ளது என்பது தான் ஆட்டோ துறை உலகம் எதிர்நோக்கி வருகிறது.
கார் பானட்டில் உட்கார்ந்துக்கொண்டு குடியிருப்பு பகுதிக்குள் உலா வந்த இளைஞர்...!!

இந்தியாவில் சராசரியாக ஒவ்வொரு நாளும் 55 விபத்துகள் நடப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இந்த விபத்துகளில் ஒருநாளில் ஒவ்வொரு மணிநேரத்திற்கும் 17 பேர் வரை உயிரிழக்கின்றனர்.

நிலைமை இப்படியிருக்க, சாலை விபத்துகள் நடப்பது இந்தியாவின் ஏனைய பெருநகரங்களில் அதிகரித்துக்கொண்டு தான் வருகின்றன.

போக்குவரத்து விதிகளை முறையாக பின்பற்றாமல் இருப்பதாலும், அஜாக்கிரதையாக வாகனங்களை ஓட்டுவதும் பெரும்பாலான விபத்துகளுக்கு காரணமாக உள்ளன.

போக்குவரத்து விதிகளை முறையாக பின்பற்றாமல் இருப்பதாலும், அஜாக்கிரதையாக வாகனங்களை ஓட்டுவதும் பெரும்பாலான விபத்துகளுக்கு காரணமாக உள்ளன.

சமீபத்தில் ஒரு இளைஞர் கார் பானட்டில் அமர்ந்துக்கொண்டு பயணிப்பது போன்ற வீடியோ வெளியாகி, பல்வேறு தரப்பு மக்களிடம் கண்டனங்களை பெற்று வருகிறது.

பெங்களூருவில் உள்ள ஹெச்.எஸ்.ஆர் லேஅவுட் என்ற இடத்தில் குடியிருப்பு பகுதிக்குள் இளைஞர் இதுபோன்ற காரில் அமர்ந்து சென்றுள்ளார்.

ஹூண்டாய் ஐ10 காரின் பானட்டில் இளைஞர் இவ்வாறு அமர்ந்துக்கொண்டு அதுவும் குடியிருப்பு பகுதிக்குள் வேகமாக சென்றது பலரின் கண்டனத்தை பெற்றுள்ளது.

ஹூண்டாய் ஐ10 காரின் பானட்டில் இளைஞர் இவ்வாறு அமர்ந்துக்கொண்டு அதுவும் குடியிருப்பு பகுதிக்குள் வேகமாக சென்றது பலரின் கண்டனத்தை பெற்றுள்ளது.

கார் பானட்டில் அமர்ந்திருக்கும் அந்த இளைஞரை தவிர ஹூண்டாய் ஐ10 காரை யார் ஓட்டியது மற்றும் காருக்குள் எத்தனை பயணிகள் இருந்தனர் என்பது தொடர்பான எந்த தகவலும் இல்லை.

இப்படி ஒரு காரில் அமர்ந்துக்கொண்டு பொதுவழி சாலையில் பயணிப்பது குதுகலமாகவும் விளையாட்டாகவும் தோன்றலாம். ஆனால் இது சட்டப்படி குற்றம்.
Note: images are representation purpose only

காரில் ஸ்டென்ட் செய்வது போல செல்வது , காரில் பயணிப்பவர் மற்றும் குடியிருப்பு வாசிகள் என இருவருக்கும் ஆபத்தானது தான்.

குறிப்பாக குடியிருப்பு பகுதிக்குள் இவ்வாறெல்லாம் வாகனத்தை செலுத்தக்கூடாது என்று அறிவுறுத்த காரணம் குழந்தைகள் தான். இப்படி காரில் சென்றுக்கொண்டு இருக்கும் போது குழந்தை ஏதாவது குறுக்கே வந்தால் விளையாட்டு விபரீதமாகி விடும்.
Note: images are representation purpose only

மேலும் இதுபோன்று போக்குவரத்து விதிகளுக்கு புறம்பாக பெரியவர்கள் நடந்துக்கொள்வதை குழந்தைகள் பார்த்தால், அவர்களின் மன ஓட்டம் தவறான வழியில் செல்ல வாய்ப்புள்ளது.
Note: images are representation purpose only

பெங்களூரு ஆக்ஸ்ஃபோர்டு கல்லூரி அருகே அமைந்துள்ள ஹெச்.எஸ்.ஆர் லே-அவுட்டில் முறைகேடான வகையில் வாகனம் ஓட்டுவது வாடிக்கையான ஒன்று தான் என்று கூறுகிறார் அங்கு வாழும் குடியிருப்பு வாசி ஒருவர்.
Note: images are representation purpose only

ஹெச்.எஸ்.ஆர் லே-அவுட்டில் உள்ள சாலைகளை பைக்கில் செல்லும் இளைஞர்கள் ஸ்டென்டிற்காக பயன்படுத்துவதும், காரில் செல்பவர்கள் ரேஸிங் டிராக்காக போதிப்பதும் தினமும் நடக்கும் நிகழ்வு தான் என்கிறார் அவர்.

பெயர் கூற விரும்பாத அந்த குடியிருப்பு வாசி, வாகனங்கள் ஓட்டுவதில் இளைஞர்கள் இவ்வாறு பொறுப்பின்றி நடந்துக்கொள்வது மிகவும் வேதனை அளிப்பதாக தெரிவிக்கிறார்.

பெங்களூரை பொறுத்தவரை குடியிருப்பு பகுதிகள் உட்பட ஏனையை எல்லா சாலை போக்குவரத்து வசதிகளும் குறைந்தபட்சம் தகுந்த முறையில் கட்டமைக்கப்பட்டுள்ளன. அதனால் அந்நகரத்தை சுற்றி இதுபோன்ற பைக் மற்றும் கார் ஸ்டென்ட் நடக்கும் சம்பவம் அதிகமாக உள்ளன.

மேலும் பெங்களூர் காவல்துறை இதுதொடர்பாக கடுமையான நடவடிக்கைகள் எடுத்தவரும் நிலையில், பைக் மற்றும் கார் ஸ்டென்ட் செய்வது நடைபெற்றுக்கொண்டு தான் இருக்கின்றன.

பெரும்பாலான பைக் ஓட்டிகள், தங்களது வாகனங்களை வேகமாக ஓட்டுவதில் தான் ஆர்வம் காட்டுகின்றனர். ஆனால் அவற்றை முறையாக கையாளும் திறன் ஒருசிலருக்கு தான் உண்டு. இதுதான் பெங்களூர் நகர பகுதி மக்களின் கவலையாக உள்ளது.

டிரைவ்ஸ்பார்க் தளம், வாகன ஓட்டிகளை பாதுகாப்பாக முறையில் செயல்பட கேட்டுக்கொள்கிறது. முறைகேடாக வாகனங்களை ஓட்டுவதும், முறையின்றி சாலைகளில் செல்வதையும் எப்போதும் டிரைவ்ஸ்பார்க் அனுமதித்தது கிடையாது.

மற்றவர் உயிரை மதிக்காமல், போக்குவரத்து விதிகளை மீறி பொதுமக்களுக்கு தொந்தரவு அளிக்கும் வகையில் செயல்படும் வாகன ஓட்டிகளுக்கு கடுமையான சட்டங்கள் காத்திருக்கின்றன.

சாலைகளில் பொறுப்பின்றி செல்லும் வாகன ஓட்டிகள் மற்றவருக்கு இடையூறாக நடந்துக்கொள்வதை நீங்கள் பார்த்தால், அது தொடர்பான வீடியோ அல்லது புகைப்படங்கள் உள்ளிட்ட விவரங்களை [email protected] என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள். நாங்கள் அவற்றை முறையாக ஆவணம் செய்து, போக்குவரத்து துறை காவலர்களுக்கு தகுந்த வழியில் புகார் அளிப்போம்.


Click it and Unblock the Notifications