Just In
- 4 hrs ago இந்த ஒரு காருக்கு மட்டும் எப்படி இவ்வளவு சேல்ஸ் குவியுது? நிஸான் இப்போதைக்கு இந்தியாவை விட்டு போகாது!!
- 4 hrs ago 7 பேர் போற கார் இவ்ளோ மைலேஜ் குடுக்குமா! விலை அதை விட ஆச்சரியம்! எவ்ளோனு தெரிஞ்சா அடுத்த நிமிஷமே வாங்கீருவீங்க
- 6 hrs ago இதுல ஒரு பெயரைதான் வைக்க போறாங்களா... அப்ப இதுக்காவே காரை வாங்கலாம்... அப்படி என்ன பெயர் தெரியுமா?
- 6 hrs ago உலக அரங்கில் இந்திய தயாரிப்புகளுக்கு ஓர் தலைக்குனிவு!! மேட்-இன்-இந்தியா ஹோண்டா கார் மொத்தமா சொதப்பிடுச்சு!
Don't Miss!
- News நேரு பேரனா ராகுல் காந்தி? எனக்கு சந்தேகம் இருக்கு.. டிஎன்ஏ டெஸ்ட் செய்யணும்.. கேரள எம்எல்ஏ சர்ச்சை
- Sports ஆட்டம் எங்கள் கையில் தான் இருந்தது.. ஸ்டோனிஸ் பிண்ணிட்டாரு.. சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ் கருத்து
- Lifestyle வக்ர நிவர்த்தி அடையும் புதன்: ஏப்ரல் 25 முதல் இந்த 3 ராசிக்கு சூப்பரா இருக்கப்போகுது...
- Finance இந்தியா சிமெண்ட்ஸ் தொழிற்சாலையை வாங்கிய அல்ட்ராடெக் சிமெண்ட்.. அதானி உடன் போட்டி..!!
- Movies Actor Vijay: ஐ லவ் விஜய்.. கில்லி படத்தின் ரீ ரிலீசை கொண்டாடும் சீன ரசிகர்!
- Technology வெறும் 2000 ரூபாயில்.. புது Xiaomi கையடக்க கார்மெண்ட் Steamer.. பழைய ஐயன் பாக்ஸை தூக்கி போடுங்க..என்ன ஸ்பெஷல்?
- Education புதுச்சேரியில் பிஎஸ்சி நர்சிங் படிப்பதற்கு நுழைவுத் தேர்வு...!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
ஃபெராரி கார் மோதியதில் பரிதாபமாக உயிரிழந்த வாட்ச்மேன்... விபத்துக்கு காரணம் தெரிஞ்சா கோவப்படுவீங்க
ஃபெராரி கார் மோதியதில், காவலாளி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உலகில் சாலை விபத்துக்கள் காரணமாக அதிக உயிரிழப்புகள் நிகழும் நாடுகளில் இந்தியா முதன்மையாக உள்ளது. இங்கு சாலை விபத்துக்கள் காரணமாக ஒரு ஆண்டுக்கு மட்டும் சுமார் 1.50 லட்சம் பேர் உயிரிழந்து வருகின்றனர். குடிபோதையில் வாகனம் ஓட்டுவது, சீட்பெல்ட் மற்றும் தலைகவசம் போன்ற பாதுகாப்பு உபகரணங்களை அணிய மறுப்பது ஆகியவையே உயிரிழப்புகளுக்கு முக்கிய காரணமாக உள்ளன.
இதுதவிர அதிவேகத்தில் வாகனங்களை இயக்குவதும், சாலை விபத்துக்கள் மற்றும் உயிரிழப்புகளுக்கு மிக முக்கியமான காரணங்களில் ஒன்றாக உள்ளது. குறிப்பாக இந்தியாவில் சூப்பர் மற்றும் ஸ்போர்ட்ஸ் கார்களின் உரிமையாளர்கள் சிலர், பொறுப்பற்ற முறையில் வாகனங்களை அதிவேகமாக இயக்கி வருகின்றனர். முன்பெல்லாம் இந்தியாவில் இத்தகைய கார்களை காண்பதே அரிதாக இருக்கும்.
ராயல் என்பீல்டு ஹிமாலயன் பிஎஸ்6 - இப்படி ஒரு ரிவியூ வீடியோ இதுக்கு முன்னாடி பாத்திருக்க மாட்டீங்க!!!
எனினும் ஃபெராரி மற்றும் லம்போர்கினி உள்ளிட்ட நிறுவனங்களின் சூப்பர் மற்றும் ஸ்போர்ட்ஸ் கார்களை, சென்னை, பெங்களூர், ஐதராபாத், மும்பை மற்றும் டெல்லி போன்ற பெரு நகரங்களில் தற்போது அதிகமாக காண முடிகிறது. இதில் ஒரு சிலர், சூப்பர் மற்றும் ஸ்போர்ட்ஸ் கார்களை அதிவேகத்தில் இயக்குவதையும், பொது சாலைகளில் அபாயகரமான ஸ்டண்ட்களை செய்வதையும் வாடிக்கையாக வைத்துள்ளனர்.
இந்த வரிசையில் தற்போது நடைபெற்றுள்ள ஒரு சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஐதராபாத் நகரில் சொகுசு ஸ்போர்ட்ஸ் கார் மோதியதில், 50 வயதான நபர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். கடந்த ஞாயிற்று கிழமை மாலை (அக்டோபர் 11) இந்த விபத்து நடைபெற்றுள்ளது. கார் அதிவேகத்தில் வந்ததுதான் இந்த விபத்திற்கு முக்கியமான காரணமாக சொல்லப்படுகிறது.
மேலும் காரின் ஓட்டுனர் பொறுப்பற்ற முறையில், வாகனத்தை ஓட்டியதாகவும் கூறப்படுகிறது. இந்த சாலை விபத்தில் உயிரிழந்த நபரின் பெயர் யேசு பாபு என அடையாளம் காணப்பட்டுள்ளது. இவர் ஐதராபாத்தில் உள்ள மாதப்பூர் பகுதியில் கட்டுமான பணிகள் நடைபெற்று வரும் ஒரு கட்டிடத்தில், காவலாளியாக பணியாற்றி வந்தார்.
சம்பவத்தன்று நவீன் குமார் என்பவர் ஓட்டி வந்த ஃபெராரி சொகுசு ஸ்போர்ட்ஸ் கார், யேசு பாபுவின் மீது மோதியது. விபத்தை ஏற்படுத்திய நவீன் குமார் மாதப்பூர் பகுதியில் இருந்து ஜூப்ளி ஹில்ஸ் பகுதியை நோக்கி சென்று கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. இந்த விபத்தில் காவலாளி யேசு பாபு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனை செய்வதற்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அத்துடன் விபத்தை ஏற்படுத்திய ஃபெராரி காரையும் பறிமுதல் செய்தனர். மேலும் அந்த காரின் ஓட்டுனர் நவீன் குமார், காவல் துறையினரால் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார்.
அவருக்கு எதிராக காவல் துறையினர் வழக்கும் பதிவு செய்துள்ளனர். சொகுசு ஸ்போர்ட்ஸ் கார் ஓட்டுனர் அலட்சியம் காரணமாக காவலாளி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த விபத்தில் மேலும் ஒரு நபர் படுகாயம் அடைந்திருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்த சம்பவம் தொடர்பாக காவல் துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்திய சாலைகளில் வாகனங்களை மிதமான வேகத்தில் இயக்குவது அவசியம். அந்தந்த சாலைகளின் வேக கட்டுப்பாடுகளை முறையாக பின்பற்றினால் இதுபோன்ற சாலை விபத்துக்களை தவிர்க்கலாம். ஏற்கனவே குறிப்பிட்டதை போல், சமீப காலமாக சூப்பர் மற்றும் ஸ்போர்ட்ஸ் கார்களின் ஓட்டுனர்கள், தங்களது இத்தகைய செயல்பாடுகள் காரணமாக தொடர்ந்து சர்ச்சையில் சிக்கி வருகின்றனர்.
உயிர்களின் மதிப்பை அவர்கள் உணர வேண்டிய நேரமிது. பல கோடி ரூபாய் விலை கொடுத்து வாங்கப்பட்ட இந்த கார்களின் செயல்திறனை முழுமையாக அனுபவிக்க விரும்பினால், அதற்கு ரேஸ் டிராக்குகளை தேர்வு செய்யலாம். அதை விடுத்து விட்டு, பொது சாலைகளில் அதிவேகத்தில் பயணிப்பதும், அபாயகரமான ஸ்டண்ட்களை செய்வதும் ஆபத்தானது.
-
நானோ காரை நமக்கு தெரியும்! ஆனா இது அது கிடையாது... டாடா உருவாக்கிய இந்த கார் கடைசி வர வெளியே வராமல் போய்டுச்சே
-
கார் கப்பல் மாதிரி இருக்காம்! இவ்ளோ மைலேஜ் வேற தருதா! மொத்த கூட்டமும் மாருதி சுஸுகி ஷோரூம்லதான் இருக்கு!
-
கலாநிதி மாறன் மகள் காவ்யா வைத்திருக்கும் இந்த காரோட விலை 12கோடியா! ஒற்றை குடும்பத்திடம் மட்டும் இவ்ளோ கார்களா!