இலங்கையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ 137..! இந்தியாவில் அதை விட அதிகம்....
இலங்கையில் இன்று ஒரே நாளிலில் பெட்ரோல் விலையை லிட்டருக்கு ரூ 20 உயர்த்தி தற்போது லிட்டர் ரூ 137க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஆனால் இந்தியாவில் அதை விட அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுகிறது.
இலங்கையில் இன்று ஒரே நாளிலில் பெட்ரோல் விலையை லிட்டருக்கு ரூ 20 உயர்த்தி தற்போது லிட்டர் ரூ 137க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஆனால் இந்தியாவில் அதை விட அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுகிறது. என்ன குழப்பமாக இருக்கிறதா இந்த செய்தியை முழுமையாக படியுங்கள்.

இலங்கை அரசு சமீபகாலமாக பெரும் நிதி நெருக்கடியை சமாளித்து வருகிறது. தொடர்ந்து இதே நிலை நீடித்தால் அந்நாடே திவால் ஆகும் சூழ்நிலைக்கு உள்ளாகும்.

இந்நிலையில் இலங்கையில் பொதுமக்களுக்கு வழங்கப்படும் பெட்ரோல் மற்றும் டீசலுக்கு மானியம் வழங்கப்படுகிறது. இந்நிலையில் சர்வசே நாணய நிதியம் இலங்கையில் பெட்ரோலுக்காக வழங்கப்படும் மானியத்தை குறைக்க வேண்டும் என கோரியது.

இதையடுத்து பெட்ரோல் லிட்டருக்கு இலங்கை ரூபாய் மதிப்பில் 20 மற்றும் டீசல் லிட்டருக்கு இலங்கை ரூபாய் மதிப்பில் 14 உயர்த்தப்பட்டுள்ளது. அதாவது இலங்கை ரூபாய் மதிப்பில் 117க்கு விற்பனையாகி வந்த பெட்ரோல் இலங்கை ரூபாய் மதிப்பில்137க்கும், இலங்கை ரூபாய் மதிப்பில் 95க்கு விற்பனையாகி வந்த டீசல் இலங்கை ரூபாய் மதிப்பில் 109க்கும் விற்பனை செய்யப்படுகிறது. அதே போல மண்ணெண்னை விலை லிட்டருக்கு இலங்கை ரூபாய் மதிப்பில் 101க்கு விற்பனை செய்யப்படுகிறது.

45 அமெரிக்கா டாலர் வரை விலையிறங்கிய கச்சா எண்ணெய் தற்போது 74 அமெரிக்க டாலருக்கு விற்பனையாவதால் தான் இந்த விலையேற்றம் என அந்நாட்டு அமைச்சர் ராஜித்த செனரட்னே தெரிவித்தார்.

இலங்கையை பொருந்தவரை அந்நாட்டு சிலோன் பெட்ரோலியம் கார்பரேஷன் என்ற நிறுவனமும், இந்தியன் ஆயில் நிறுவனத்தின் கிளை நிறுவனமான லங்கா ஐஓசி என்ற நிறுவனமும் தான் பெட்ரோல் விநியோகத்தில் ஈடுபட்டுள்ளது.

ஏற்கனவே கடந்த மார்ச் மாதம் லங்கா ஐ.ஓ.சி. நிறுவனம் பெட்ரோல் விலையை உயர்த்திய நிலையில் தற்போது சிலோன் பெட்ரோலியம் கார்பரேஷன் நிறுவனமும் விலையை உயர்த்தியுள்ளது.

இதற்கிடையில் இலங்கை 1.5 பில்லியன் டாலர் வரை சிலோன் பெட்ரோலியம் கார்பரேஷனில் சர்வதேச நாணய நிதியகத்தின் ஒப்புதலுடன் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் கடன் வாங்கியது.

தற்போது சர்வதேச நாணய நிதியகம் அடுத்த கட்ட கடன் தொகையை இலங்கை பெட்ரோல் டீசலுக்காக வழங்கும் மானியத்தை குறைக்காத வரை வழங்க முடியாது என அறிவித்ததையடுத்து. மேலும் இலங்கை மத்திய வங்கியும் இலங்கையில் உள்ள பொருளாதார நெருக்கடி குறித்து அரசுக்கு நெருக்கடி கொடுத்தது. இதையடுத்து இலங்கை அரசு இந்த அதிரடி நடவடிக்கையில் இறங்கியுள்ளது.

இந்தியாவை விட சிறிய நாடான இலங்கையே தற்போது தான் இலங்கை ரூபாய் மதிப்பில் ரூ 137க்கு பெட்ரோலை விற்பனை செய்து வரும் நிலையில் இந்தியாவில் அதை விட தற்போது பெட்ரோல் டீசல் விலை அதிகம் என்று சொன்னால் நம்ப முடிகிறதா? அது தான் உண்மை.

இலங்கையில் உள்ள ரூ137 என்பது இந்தியாவில் உள்ள ரூ58.42க்கு சமம் ஆனால் இந்தியாவில் தற்போது பெட்ரோல் விலையை எக்கு சக்கமாக ஏறி போய் உள்ளது. இதற்கிடையில் தற்போது பெட்ரோல் நிறுவனங்களே வேறு பெட்ரோல் விலையை நிர்ணயத்து வருவதால் அதன் விலையேற்றம் எக்கசக்கமாக உயர்ந்துள்ளது.

இந்திய அரசும் அதற்ககாக பல்வேறு நடவடிக்கைகள் எடுத்தும் பெட்ரோல் விலை அவ்வப்போது மட்டுமே குறைகிறதே தவிர நிரந்திரமாக குறைவது என்பது இந்தியர்களுக்கு நிறைவேறாத கனவாக மாறிவிடும் போல
டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்ட செய்திகள்


Click it and Unblock the Notifications