பெட்ரோல் இல்லாமல் திண்டாடும் இலங்கை.. உதவி கரம் நீட்டிய இந்தியா... உண்மையான காரணம் இது தான்.
இலங்கையில் பெட்ரோல் வாங்க காசு இல்லாமல் அந்நாடு முழுவதும் பயங்கரமான பெட்ரோல் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இது குறித்த முழு விபரங்களை காணலாம் வாருங்கள்

இந்தியாவின் அண்டை நாடான தமிழர்கள் அதிகம் வசிக்கும் இலங்கை தற்போது கடும் பொருளாதார நெருக்கடியை சந்தித்து வருகிறது. அந்த நாட்டில் அத்தியாவசிய பொருட்களின் விலைகள் எல்லாம் விண்ணை தொட்டு வருகிறது. அந்த வகையில் அந்நாடு தற்போது கடும் பெட்ரோல் தட்டுப்பாடு ஏற்பட்டு அந்த ஊரில் எந்த வாகனங்களுக்கு பெட்ரோல் இல்லாமல் திண்டாடி வருகிறது.

அந்நாட்டில் உள்ள பெரும்பாலான பெட்ரோல் பங்க்களில் ஒரு சொட்டு பெட்ரோல் கூட இல்லை வாகனங்கள் எல்லாம் பெட்ரோல் பங்க் முன்பு வரிசை கட்டி காத்திருக்கின்றனர். பெட்ரோல் இல்லாததால் ரோட்டில் வாகனங்களே இல்லாமல் நெருக்கடி இல்லாமல் காட்சியளிக்கிறது. இலங்கையை பொருத்தவரை அந்நாடு பெட்ரோலாகவே மற்ற நாடுகளிலிருந்து இறக்குமதி செய்கிறது.

இந்நிலையில் கடந்த மார்ச் மாதம் 28ம் தேதி அந்நாட்டிற்கு கப்பல் மூலம் பெட்ரோல் டெலிவரி செய்யப்பட்டது. ஒவ்வொரு முறையும் அந்நாடு இந்த முறை பெட்ரோல் டெலிவரி செய்ததற்கான பணத்தை அடுத்த முறை பெட்ரோல் டெலிவரி செய்யும் முன்பு ஒப்படைக்க வேண்டும். இல்லை என்றால் அடுத்த முறை பெட்ரோல் டெலிவரி செய்யப்படாது என ஒப்பந்தம் போட்டுள்ளது.

அதன்படி கடந்த முறை பெட்ரோல் வாங்கியதற்கான 53 மில்லியன் அமெரிக்க டாலரை பணத்தை கொடுத்தால்தான் மே மாதத்திற்கான பெட்ரோல் டெலிவரி செய்யப்படும் என இலங்கைக்கு பெட்ரோல் ஏற்றுமதி செய்யும் நிறுவனம் சொல்லிவிட்டது. மேலும் இலங்கைக்கு இந்த முறை பெட்ரோலை எடுத்து செல்லும் கப்பல் பெட்ரோலுடன் நடுக்கடலில் நிறுத்தப்பட்டுள்ளது.

பணம் செட்டில் ஆனால் தான் கப்பல் கடலிலிருந்து கரைக்கு வரும் என அந்நிறுவனம் சொல்லிவிட்ட நிலையில் பணம் இல்லாமல் அந்நாடு திண்டாடி வருவதாக அந்நாட்டின் காஞ்சன விஜெசேகரா பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார். அதே நேரத்தில் அவர் அந்நாட்டில் டீசலுக்கு தட்டுப்பாடுகள் இல்லை என்றும், தற்போது மீதம்இருக்கும் பெட்ரோல்கள் அவசர சேவை வாகனங்களான ஆம்புலன்ஸ், தீயணைப்பு வாகனங்களுக்கு மட்டுமே வழங்கப்படும் என தெரிவித்துள்ளார்.

இலங்கை சுத்திகரிக்கப்பட்ட பெட்ரோலை சிங்கப்பூர், இந்தியா, மலேசியா, ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் சீனாவிலிருந்து இறக்குமதி செய்கிறது. இலங்கையில் இந்த நிலைக்கு இந்திய அரசு தங்கள் கடன் லைனிலிருந்து 3 பில்லியன் அமெரிக்க டாலரை கடனுக்கு உதவி செய்துள்ளது. ஆனால் அது மட்டும் அந்நாடு இருக்கும் நிலைக்கு காணாது. இப்பொழுதும் இலங்கையில் பெட்ரோல் விலை இந்தியாவில் விற்பனையாகும் பெட்ரோல் விட குறைவு என்பது இங்கு குறிப்பிடவேண்டிய ஒன்று.

இந்தியா பெட்ரோல் அல்லது டீசலை நேரடியாக இறக்குமதிய செய்யவில்லை. மாறாக கச்சா எண்ணெய்யை நேரடியாக இறக்குமதி செய்து அதை இந்தியாவில் வைத்து சுத்திகரிப்பு செய்கிறது. அந்த கச்சா எண்ணெய்யிலிருந்து தான் பெட்ரோல், டீசல், விமானங்களுக்கான பெட்ரோல் முதல் மண்ணெண்னை வரை தயாராகிறது. இந்தியாவில் பல இடங்களில் பெட்ரோல் சுத்திகரிப்பு மையம் செயல்படுகிறது அங்கு இந்தியாவின் தேவைக்கு போக மீதம் இருக்கும் பெட்ரோல் டீசல்கள் வெளிநாட்டிற்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது. அதில் இலங்கையும் ஒரு நாடு

இலங்கை விவகாரத்தில் இந்திய அரசு இலங்கை அரசுக்கு பெரும் உதவியை செய்துள்ளது. .இந்தியாவின் உதவியை இலங்கை அரசு டீசலுக்காக பயன்படுத்தியுள்ளது. தற்போது அந்நாட்டில் டீசலுக்கு தட்டுப்பாடு இல்லை பெட்ரோலுக்கு மட்டுமே தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் அந்நாட்டில் உள்ள வாகன ஓட்டிகள் உள்ளிட்ட பலர் திண்டாடி வருகின்றனர். இந்த நிலைமையை இலங்கை அரசு எப்படி சமாளிக்கப்போகிறது பொருத்திருந்து பார்க்கலாம்


Click it and Unblock the Notifications