திடீரென கான்வாயை நிறுத்திய முதல்வர் மு.க.ஸ்டாலின்!! அடுத்து நடந்ததுதான் ஹைலைட்டே... இப்படியும் ஒரு சிஎம்-ஆ!!
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கோவை மாவட்டத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை செய்ய வந்தபோது, தன்னை பார்க்க வந்தவர்களிடம் இருந்து கோரிக்கை மனுவை கேட்டு பெற்று கொண்டது மிகுந்த நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தில் சென்னை மட்டுமின்றி மற்ற மாநகரங்களான கோவை, மதுரையிலும் கொரோனா வைரஸ் தொற்று அதிகமாக பரவி வருகிறது. இதற்கு அரசாங்கத்தின் சார்பில் பல்வேறு கட்ட தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இதன் ஒரு பகுதியாக திருப்பூர், சேலம், கோவை உள்பட ஐந்து மாவட்டங்களில் எடுக்கப்பட்ட தடுப்பு நடவடிக்கைகள் குறித்து மாவட்ட அதிகாரிகளுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்றில் இருந்து ஆலோசனை நடத்தி வருகின்றார்.

நேற்று காலை திருப்பூர், சேலம் மாவட்டங்களில் ஆய்வு மேற்கொண்ட முதலமைச்சர், நேற்று மாலை கோவை மாவட்டத்திற்கு சென்றார். கோவையில் கொடிசியா வளாகத்தில் உள்ள கொரோனா சிறப்பு சிகிச்சை மையத்தில் கூடுதலாக 820 படுக்கை வசதிகள் ஏற்படுத்துள்ளன.

அதேபோல் குமரகுரு பொறியியல் கல்லூரியிலும் புதிதாக 360 படுக்கைகள் கொண்ட கொரோனா மையம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த இரு இடங்களையும் ஆய்வு செய்த முதல்வர் பின்னர் அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார்.

இந்த ஆய்வு & ஆலோசனை கூட்டத்தை முடிந்து கொண்டு குமரகுரு கல்லூரியில் இருந்து முதல்வரின் வாகன அணிவகுப்பு (கான்வாய்) கிளம்பிய நிலையில், முதல்வர் மு.க.ஸ்டாலின் திடீரென தனது வாகனத்தை நிறுத்த சொன்னார்.

இதற்கான காரணம் உடனடியாக யாருக்கும் புலப்படவில்லை. பிறகு சாலையின் தன்னை பார்த்து கோரிக்கை மனுவை வழங்க காத்திருந்த குடும்பத்தை அழைத்து அவர்களது கோரிக்கைகளை கேட்டு, மனுவை பெற்று கொண்டார்.

கொரோனா வைரஸின் பரவலினால் நகர கவுன்சிலர் கூட மக்களை நெருங்கி அவர்களது கோரிக்கைகளை கேட்க தயங்குகின்றனர். அப்படி இருக்க, இந்த சம்பவம் சுற்றி அங்கிருந்தவர்கள் அனைவரையும் நெகிழ வைத்தது.

குறிப்பாக தங்களது கோரிக்கை மனுவை நேரடியாக முதல்வரே தனது வாகனத்தை நிறுத்தி பெற்று கொண்டது அந்த குடும்பத்தினருக்கு மிகுந்த சந்தோஷத்தை தந்தது. மேலும் முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களின் செயல் இணையத்தில் வேகமாக வைரலாகி வருகிறது.


Click it and Unblock the Notifications








