Just In
- 4 hrs ago உலகின் தலை சிறந்த கார் எது தெரியுமா? விருதை தட்டி சென்ற கியா தயாரிப்பு! சும்மா ஒன்னும் இதை தூக்கி கொடுத்திடல..
- 5 hrs ago மேட்-இன் தமிழ்நாடு... தரத்தில் எந்த குறையும் இருக்காது!! மொத்தமும் எலக்ட்ரிக் தான்!
- 5 hrs ago பிரசார வேனை சொகுசு பங்களா போல செட்டப் செய்த கமலஹாசன்! இதை பார்க்கவே கூட்டம் குவியுமே!
- 7 hrs ago கண்ண மூடிட்டு ஹோண்டா டூவீலர்களை வாங்கும் இந்தியர்கள்! இந்த விஷயம் தெரிஞ்சா விடிஞ்சதும் ஷோரூம்லதான் இருப்பீங்க!
Don't Miss!
- News பொத்தென விழுந்த மேற்கூரை.. 3 பேரை அமுக்கி கொன்ற சென்னை பப் விபத்து பற்றி காவல்துறை விளக்கம்
- Sports ரிஷப் பண்ட்க்கு 2 முறையும் லக் இல்ல.. தொடர்ந்து 2வது வெற்றியை பெற்ற ராஜஸ்தான்.. ரியான்,ஆவேஷ் அபாரம்
- Lifestyle வரப்போகிற சூரிய கிரகணம் இந்த 4 ராசிக்காரங்களுக்கு பெரிய துரதிர்ஷ்டத்தை தரப்போகுதாம்..ரொம்ப ஜாக்கிரதையா இருங்க!
- Movies Cooku with comali 5: புது கோமாளிகளுடன் களமிறங்கும் குக் வித் கோமாளி 5 -ஆங்கர் ரக்ஷன் சம்பளம் இவ்வளவா
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
- Technology குறைஞ்சது 4 -5 நாள் ஆகும்.. கடைசி நேரத்துல அலையாதீங்க.. Voter ID-க்கான முக்கிய வேலை.. உடனே செஞ்சிடுங்க!
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
திடீரென கான்வாயை நிறுத்திய முதல்வர் மு.க.ஸ்டாலின்!! அடுத்து நடந்ததுதான் ஹைலைட்டே... இப்படியும் ஒரு சிஎம்-ஆ!!
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கோவை மாவட்டத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை செய்ய வந்தபோது, தன்னை பார்க்க வந்தவர்களிடம் இருந்து கோரிக்கை மனுவை கேட்டு பெற்று கொண்டது மிகுந்த நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் சென்னை மட்டுமின்றி மற்ற மாநகரங்களான கோவை, மதுரையிலும் கொரோனா வைரஸ் தொற்று அதிகமாக பரவி வருகிறது. இதற்கு அரசாங்கத்தின் சார்பில் பல்வேறு கட்ட தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இதன் ஒரு பகுதியாக திருப்பூர், சேலம், கோவை உள்பட ஐந்து மாவட்டங்களில் எடுக்கப்பட்ட தடுப்பு நடவடிக்கைகள் குறித்து மாவட்ட அதிகாரிகளுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்றில் இருந்து ஆலோசனை நடத்தி வருகின்றார்.
நேற்று காலை திருப்பூர், சேலம் மாவட்டங்களில் ஆய்வு மேற்கொண்ட முதலமைச்சர், நேற்று மாலை கோவை மாவட்டத்திற்கு சென்றார். கோவையில் கொடிசியா வளாகத்தில் உள்ள கொரோனா சிறப்பு சிகிச்சை மையத்தில் கூடுதலாக 820 படுக்கை வசதிகள் ஏற்படுத்துள்ளன.
அதேபோல் குமரகுரு பொறியியல் கல்லூரியிலும் புதிதாக 360 படுக்கைகள் கொண்ட கொரோனா மையம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த இரு இடங்களையும் ஆய்வு செய்த முதல்வர் பின்னர் அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார்.
இந்த ஆய்வு & ஆலோசனை கூட்டத்தை முடிந்து கொண்டு குமரகுரு கல்லூரியில் இருந்து முதல்வரின் வாகன அணிவகுப்பு (கான்வாய்) கிளம்பிய நிலையில், முதல்வர் மு.க.ஸ்டாலின் திடீரென தனது வாகனத்தை நிறுத்த சொன்னார்.
இதற்கான காரணம் உடனடியாக யாருக்கும் புலப்படவில்லை. பிறகு சாலையின் தன்னை பார்த்து கோரிக்கை மனுவை வழங்க காத்திருந்த குடும்பத்தை அழைத்து அவர்களது கோரிக்கைகளை கேட்டு, மனுவை பெற்று கொண்டார்.
கொரோனா வைரஸின் பரவலினால் நகர கவுன்சிலர் கூட மக்களை நெருங்கி அவர்களது கோரிக்கைகளை கேட்க தயங்குகின்றனர். அப்படி இருக்க, இந்த சம்பவம் சுற்றி அங்கிருந்தவர்கள் அனைவரையும் நெகிழ வைத்தது.
குறிப்பாக தங்களது கோரிக்கை மனுவை நேரடியாக முதல்வரே தனது வாகனத்தை நிறுத்தி பெற்று கொண்டது அந்த குடும்பத்தினருக்கு மிகுந்த சந்தோஷத்தை தந்தது. மேலும் முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களின் செயல் இணையத்தில் வேகமாக வைரலாகி வருகிறது.
-
இந்தியாவுக்கு எதாவது பாதிப்பா? ஒரு சின்ன மிஸ்டேக் எங்க கொண்டுவந்து நிறுத்தி இருக்கு!!
-
சீன நிறுவனம் காரையே புளிப்பு மிட்டாய் கணக்கா உற்பத்தி பண்ணிட்டு இருக்கா.. நம்பவே முடியல 7 மில்லியனை தொட்ருச்சு
-
குடிநீரில் கழுவினால் அபராதம்! பெங்களூர் கார் ஓனர்கள் கையில் எடுத்த புதிய ட்ரிக்! இது நமக்கு தெரியாம போச்சே!