Just In
- 1 hr ago ஹீரோ நிறுவனம் அமைதியாக பல தரமான சம்பவங்களை செஞ்சிட்டு வருகிறது!! டாப்-10 லிஸ்ட்டில் 4 இடங்களில் ஹீரோ 2-வீலர்ஸ்
- 2 hrs ago ஓலா, ஏத்தர் எல்லாம் ஓரமா போ! ஆம்பியர் நிறுவனத்தின் புதிய இவி 30ம் தேதி வருது!
- 4 hrs ago 21 வயசு பொண்ணுக்கு இப்படி ஒரு காரானு எல்லாரையும் புலம்ப வச்சுட்டாரு அவரோட அப்பா! பலரோட கனவு காருங்க இது!
- 9 hrs ago இந்த ஒரு காருக்கு மட்டும் எப்படி இவ்வளவு சேல்ஸ் குவியுது? நிஸான் இப்போதைக்கு இந்தியாவை விட்டு போகாது!!
Don't Miss!
- News இன்டர்நேஷனல் பிரஷர்.. மோடியை தீவிரமாக கவனிக்கும் உலக நாடுகள்.. சீக்ரெட்டை உடைத்த எக்ஸ்பர்ட்
- Movies படு மோசமான படுக்கையறை காட்சி.. ரஜினியின் ரீல் மகளை திட்டிதீர்க்கும் பேன்ஸ்!
- Lifestyle ஒருடைம் உருளைக்கிழங்கு குருமாவை இந்த ஸ்டைலில் செய்யுங்க.. அப்புறம் பாருங்க இப்படிதான் எப்பவும் செய்வீங்க..
- Finance இன்போசிஸ் எடுத்த முக்கிய முடிவு… கல்லூரி மாணவர்கள் ஷாக்.
- Sports சுற்றி சிஎஸ்கே ரசிகர்கள்.. நடுவில் ஒற்றை ஆளாய் போட்ட ஆட்டம்.. சேப்பாக்கத்தில் லக்னோ ரசிகர் சம்பவம்!
- Technology வெளுக்குது ஆர்டர்.. ரூ.15249 பட்ஜெட்ல AMOLED டிஸ்பிளே.. 45W சூப்பர்வூக்.. 5000mAh பேட்டரி.. எந்த மாடல்?
- Education புதுச்சேரியில் பிஎஸ்சி நர்சிங் படிப்பதற்கு நுழைவுத் தேர்வு...!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
வாகன விரும்பிகளுக்கான சிறப்பு அறிவிப்பை வெளியிட்ட எஸ்பிஐ: முழு விபரம் உள்ளே!
வாகன விரும்பிகள் வரவேற்கும் வகையில் எஸ்பிஐ வங்கி புதிய கடன் திட்டம் ஒன்றை அறிவித்துள்ளது. இதுகுறித்த தகவலை இந்த பதிவில் காணலாம்.
பாரத ஸ்டேட் வங்கி 'பசுமை வாகன கடன்' என்ற புதிய திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. உலகம் முழுவதும் இன்று (ஏப்ரல் 23) கொண்டாடப்படும் பூமி தினத்தை முன்னிட்டு இந்த புதிய கடன் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
பசுமை வாகன கடன் திட்டத்தின்மூலம், புதிதாக வாங்கவிருக்கும் எலக்ட்ரிக் வாகனங்களுக்கு குறைந்த வட்டி விகிதத்தில் கடன் வழங்கப்பட உள்ளது. இந்தியாவிலேயே எஸ்பிஐ வங்கிதான் இந்த திட்டத்தினை முதல் முறையாக தொடங்கி வைத்துள்ளது.
சுற்றுப்புறச்சூழல் பாதுகாப்பு மற்றும் தூய்மையை கருத்தில் கொண்டு, எலக்ட்ரிக் கார்களுக்கு கடன் வழங்கும் விதமாக இந்த சிறப்பு திட்டத்தை எஸ்பிஐ வங்கி தொடங்கியுள்ளது.
எரிபொருள் வாகனங்களுக்கு மாற்றாக மின் வாகன பயன்பாட்டுக்கு மாறுவது முக்கிய சூழலாக பார்க்கப்பட்டு வரும் இந்தநிலையில், எஸ்பிஐ வெளியிட்டிருக்கும் இந்த அறிவிப்பு பெரிதும் வரவேற்கத் தகுந்ததாக இருக்கின்றது.
ஏற்கனவே மத்திய, மாநில அரசுகள் முன்னதாக மின் வாகன பயன்பாட்டினை ஊக்குவிக்கும் முயற்சியில் அண்மைக் காலங்களாக ஈடுபட்டு வருகிறது. அவ்வாறு, மின் வாகனங்களுக்கு மானியம் வழங்குதல் உள்ளிட்ட சிறப்பு சலுகைகளை வழங்க திட்டமிடப்பட்டு வருகிறது.
இந்தியாவின் இந்த முயற்சியைத் தொடர்ந்து, பல்வேறு வாகன தயாரிப்பு நிறுவனங்கள் அதன் மின் வாகனங்களை இந்தியாவில் களமிறக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றன. அவ்வாறு, வாகன தயாரிப்பு நிறுவனங்களின் ஜாம்பவான்களான டாடா மற்றும் மஹிந்திரா ஆகிய நிறுவனங்கள் விரைவில் எலக்ட்ரிக் வாகனங்களை அறிமுகம் செய்ய இருக்கின்றன.
அதேசமயம், சந்தையில் விற்பனையாகி வரும் மின் வாகனங்கள் பிரம்மிக்க வைக்கும் அளவில் விலையைக் கொண்டிருப்பதால், மக்கள் பலர் அந்த வாகனங்களை வாங்க தயக்கம் காட்டுகின்றனர். இந்த சூழலில் எஸ்பிஐ அறிவித்திருக்கும் இந்த புதிய கடன் திட்டம், மின் வாகனம் வாங்குவதை ஊக்குவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பசுமை வாகன கடன் திட்டத்தில் வழங்கப்படும் கடனுக்கு பிராசஸிங் கட்டணம் கிடையாது என்றும் எஸ்பிஐ அறிவித்துள்ளது. இந்த சிறப்பு சலுகைப் பெற வருகின்ற நவம்பர் மாத்திற்குள் விண்ணப்பிக்க வேண்டும். மேலும், 8 வருடங்கள் வரை பணம் செலுத்தும் வகையில் இதற்கான கால நீட்டிப்பு வழங்கப்படுகிறது.
-
புதுசா வாங்கி காசை வேஸ்ட் பண்ணாதீங்க! பைக் ஓட்டி படிக்க செகன்ட் ஹேண்டில் வாங்க பெஸ்ட் பைக்குகள் இது தான்!
-
ஜிஎஸ்டி கட்டவேணாம்! ரூ1.26 லட்சம் மிச்சம் பண்ண இந்த காரை இப்படியும் வாங்கலாமா? யாருக்குமே இது தெரியாது!
-
கார் கப்பல் மாதிரி இருக்காம்! இவ்ளோ மைலேஜ் வேற தருதா! மொத்த கூட்டமும் மாருதி சுஸுகி ஷோரூம்லதான் இருக்கு!