Just In
- 24 min ago மஹிந்திரா ஸ்கார்பியோ, பெயருக்கே காரை வாங்க கூட்டம் குவியுது!! டாடா நிறுவனத்தால் கிட்ட கூட நெருங்க முடியல!
- 41 min ago இப்ப மீட் பண்ணா தேர்தல்ல மோடி ஜெயிச்சிருவாரு! எலான் மஸ்க் - மோடி சந்திப்பு தள்ளி வைப்பு!
- 1 hr ago பைக்க விட அதிக மைலேஜ் தரும் ஹூண்டாய் கார்.. பொய் சொல்லல.. ஸ்ட்ராங்கான ஆதாரத்தோடதான் சொல்றாங்க!
- 2 hrs ago வெறும் 136 பேர் தான் இந்த காரை வாங்கியிருக்காங்க! நல்ல காரா இருந்தாலும் மக்கள் வெறுக்க காரணம் இது தான்!
Don't Miss!
- Finance தங்கம் விலை பொசுக்கு குறைஞ்சிடுச்சு! கேட்கவே இனிமையா இருக்கு.. சென்னை, கோவை, மதுரையில் என்ன விலை?
- Lifestyle ஜோதிடத்தில் திசை என்றால் என்ன? உங்களுக்கு என்ன திசை நடக்கிறது? அதனால் கிடைக்கும் பலன்கள்..!
- News அண்ணாமலையை விடுங்க.. ஒரே நாளில் வியப்பூட்டிய தமிழகம்.. மகிழ்ச்சி, அதிருப்தி, பூரிப்பு.. இது ஹைலைட்ஸ்
- Sports கே எல் ராகுல் செய்த செயல்.. எச்சரித்த தோனி.. ருதுராஜ் கெய்க்வாட்டுக்கு கிடைத்த தண்டனை
- Technology திடீர் பணம் தேவையா.. தனிநபர் கடன் வழங்கும் Google Pay.. எவ்வளவு கிடைக்கும்? எப்படி வாங்குவது?
- Movies கவினுடன் கிளாஷ் விடும் சந்தானம்.. யாரு கிங்குன்னு மே 10ம் தேதி தெரியும் என கலாய்க்கும் ரசிகர்கள்!
- Education தினமும் 9 மணி நேரம் படித்து யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி பெற்ற லிந்தியா...!!
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
மோசடி புகாரால் சீனாவின் டிராம் பஸ் சோதனை ஓட்டம் நிறுத்தம்!
கடந்த வாரம் சீனாவை சேர்ந்த நிறுவனம் ஒன்று புதுமையான பஸ் மாடல் ஒன்றை அறிமுகம் செய்ததுடன், அதன் சோதனை ஓட்டத்தையும் துவங்கியது. கீழே வாகனங்கள் செல்ல வசதியான அமைப்புடன், வடிவமைக்கப்பட்ட இந்த பஸ் உலக அளவில் கவனத்தை ஈர்த்தது.
இந்த நிலையில், இந்த பஸ் திட்டம் குறித்து சீன மீடியாக்களே சந்தேகக் கணைகளை வீசியதைத் தொடர்ந்து, இந்த பஸ்சின் சோதனை ஓட்டம் நிறுத்தப்பட்டிருக்கிறது. இதனால், இந்த திட்டத்தில் முதலீடு செய்தவர்கள் அதிர்ச்சியில் உறைந்து போயுள்ளனர்.
டிராம் பஸ்
கீழே கார் உள்ளிட்ட வாகனங்கள் செல்ல வசதியாக, உயர்த்தப்பட்ட அமைப்புடன் இந்த பஸ் வடிவமைக்கப்பட்டிருந்தது. சாலையின் இருபுறத்திலும் இருக்கும் தண்டவாளங்களில் இந்த பஸ் செல்லும். இதனால், சாலையில் பஸ்களால் ஏற்படும் போக்குவரத்து நெரிசல் குறையும் என்பதுடன், ஒரே நேரத்தில் அதிக பயணிகளை ஏற்றிச் செல்ல வசதியாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டது.
சந்தேகம்
இந்த நிலையில், சாலையில் செல்லும் கார் உள்ளிட்ட வாகனங்கள் செல்லலாமே தவிர, டிரக் உள்ளிட்ட இதர கனரக வாகனங்களை இயக்க முடியாது. அதேநேரத்தில், வளைவுகளிலும் இந்த பஸ்சை செலுத்துவது கடினம் என்பதுடன், சாலைகளில் உள்ள நடைமேடைகள் வழியாக செலுத்துவதும் சாத்தியமில்லை என்று சீன மீடியாக்கள் சந்தேகம் தெரிவித்தன.
புகார்கள்
இந்தநிலையில், இந்த பஸ் திட்டத்திற்கு அரசு அங்கீகாரம் பெறவில்லை என்றும், அரசு அனுமதியில்லாமல் சோதனை ஓட்டம் நடத்தியதாகவும் புகார்கள் எழுந்தன. அதுமட்டுமில்லாமல், நிதி மோசடியில் ஈடுபட்டதாக கருதப்படும் கருப்பு பட்டியலில் சேர்க்கப்பட்ட ஹூவாயிங் கையிலை என்ற நிறுவனம்தான் இந்த பஸ் திட்டத்தில் அதிக முதலீடு செய்துள்ளதாக புகார் எழுந்துள்ளது.
சோதனை ஓட்டம் நிறுத்தம்
இந்த நிலையில், புகார்களும், சந்தேகமும் வலுப்பெற்ற நிலையில், இந்த பஸ்சின் சோதனை ஓட்டம் நிறுத்தப்பட்டிருக்கிறது. மேலும், இந்த பஸ்சின் பாதுகாப்பு அம்சங்களும் சந்தேகத்திற்கு இடமானது என்றும் சீன மீடியாக்களே வரிந்து கட்டி எதிர்ப்பு தெரிவித்துள்ளன.
மோசடி திட்டம்
முதலீடுகளை பெறுவதற்காக கவர்ச்சிகரமாக விளம்பரப்படுத்தி, இந்த பஸ் திட்டத்தை செயல்படுத்தியிருக்கின்றனர். நடைமுறையில் இந்த பஸ்சை இயக்குவது சாத்தியமே இல்லை என்று சீனாவின் பல முன்னணி ஊடகங்கள் கருத்து தெரிவித்துள்ளன.
அதிர்ச்சி
இதனிடையே, பஸ் திட்டத்தில் முதலீடு செய்தால், அதிக லாபம் கிடைக்கும் என்று ஆசை வார்த்தை காட்டி சுமார் 400 பேரிடம் முதலீடு பெறப்பட்டுள்ளதாக தெரிகிறது. தற்போது பஸ் சோதனை ஓட்டம் நிறுத்தப்பட்டதால், முதலீடு செய்த அனைவரும் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்.
இந்தியாவும் ஆர்வம்
இந்த பஸ் திட்டத்தை செயல்படுத்துவது குறித்து ஸ்பெயின், மெக்ஸிகோ மற்றும் அர்ஜென்டினா நாடுகளிடமிருந்து ஆர்டர்கள் பெறப்பட்டுள்ளதாக இந்த பஸ் தயாரிப்பு நிறுவனத்தின் அதிகாரி சாங் தெரிவித்துள்ளார். அதுமட்டுமின்றி, பிரான்ஸ் மற்றும் இந்தியாவின் போக்குவரத்து அமைச்சர்களும் தொடர்பு கொண்டதாக அவர் கூறியிருக்கிறார். உலக அளவில் 5 லட்சம் ப
விளக்கம்
முதல் விமானம், முதல் சுரங்க ரயில் என எந்த ஒரு புதுமையான திட்டமும் ஆரம்ப காலத்தில் சறுக்கல்களையும், சவால்களையும் சந்திப்பது வாடிக்கை. ஆனால், தற்போது அவை எவ்வாறு பயன்படுகிறது என்பதை பார்க்க வேண்டும். நாங்கள் குற்றம் எதையும் செய்யவில்லை. புதுமையானதை கண்டுபிடிக்க முயற்சிப்பது தவறா? என்று சர்ச்சைகள் குறித்து கருத்து தெரிவித்துள்ளார் சாங்.
-
பெட்டிகடை வச்சிருக்கிறவன் கூட கணக்கு வச்சிருப்பான்! ஆனா இந்திய ரயில்வே நிர்வாகத்திடம் இந்த கணக்கு இல்லையாம்!
-
இந்த 3 கார்களை தான் மக்கள் மாத்தி, மாத்தி வாங்குறாங்க!! டாடா லிஸ்ட்டிலேயே இல்ல...
-
ஐபிஎல்-இல் வேண்டுமாயின் கதை வேறயாக இருக்கலாம்!! இந்த விஷயத்தில் சென்னையை விட பெங்களூர் தான் டாப்!