Just In
- 37 min ago 21 வயசு பொண்ணுக்கு இப்படி ஒரு காரானு எல்லாரையும் புலம்ப வச்சுட்டாரு அவரோட அப்பா! பலரோட கனவு காருங்க இது!
- 5 hrs ago இந்த ஒரு காருக்கு மட்டும் எப்படி இவ்வளவு சேல்ஸ் குவியுது? நிஸான் இப்போதைக்கு இந்தியாவை விட்டு போகாது!!
- 5 hrs ago 7 பேர் போற கார் இவ்ளோ மைலேஜ் குடுக்குமா! விலை அதை விட ஆச்சரியம்! எவ்ளோனு தெரிஞ்சா அடுத்த நிமிஷமே வாங்கீருவீங்க
- 6 hrs ago இதுல ஒரு பெயரைதான் வைக்க போறாங்களா... அப்ப இதுக்காவே காரை வாங்கலாம்... அப்படி என்ன பெயர் தெரியுமா?
Don't Miss!
- Lifestyle Today Rasi Palan 24 April 2024: இன்று இந்த ராசிக்காரர்கள் பிறர் பிரச்சனைகளில் தலையிடாமல் இருந்தால் நல்லது...
- News நேரு பேரனா ராகுல் காந்தி? எனக்கு சந்தேகம் இருக்கு.. டிஎன்ஏ டெஸ்ட் செய்யணும்.. கேரள எம்எல்ஏ சர்ச்சை
- Sports ஆட்டம் எங்கள் கையில் தான் இருந்தது.. ஸ்டோனிஸ் பிண்ணிட்டாரு.. சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ் கருத்து
- Finance இந்தியா சிமெண்ட்ஸ் தொழிற்சாலையை வாங்கிய அல்ட்ராடெக் சிமெண்ட்.. அதானி உடன் போட்டி..!!
- Movies Actor Vijay: ஐ லவ் விஜய்.. கில்லி படத்தின் ரீ ரிலீசை கொண்டாடும் சீன ரசிகர்!
- Technology வெறும் 2000 ரூபாயில்.. புது Xiaomi கையடக்க கார்மெண்ட் Steamer.. பழைய ஐயன் பாக்ஸை தூக்கி போடுங்க..என்ன ஸ்பெஷல்?
- Education புதுச்சேரியில் பிஎஸ்சி நர்சிங் படிப்பதற்கு நுழைவுத் தேர்வு...!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
கார் பானட்டில் உட்கார்ந்துக்கொண்டு குடியிருப்பு பகுதிக்குள் உலா வந்த இளைஞர்...!!
கார் பான்னட்டில் உட்கார்ந்துக்கொண்டு குடியிருப்பு பகுதிக்குள் உலா வந்த இளைஞர்... ஒரு சாமானியனின் புகார்..!!
இந்தியாவில் சராசரியாக ஒவ்வொரு நாளும் 55 விபத்துகள் நடப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இந்த விபத்துகளில் ஒருநாளில் ஒவ்வொரு மணிநேரத்திற்கும் 17 பேர் வரை உயிரிழக்கின்றனர்.
நிலைமை இப்படியிருக்க, சாலை விபத்துகள் நடப்பது இந்தியாவின் ஏனைய பெருநகரங்களில் அதிகரித்துக்கொண்டு தான் வருகின்றன.
போக்குவரத்து விதிகளை முறையாக பின்பற்றாமல் இருப்பதாலும், அஜாக்கிரதையாக வாகனங்களை ஓட்டுவதும் பெரும்பாலான விபத்துகளுக்கு காரணமாக உள்ளன.
Recommended Video
சமீபத்தில் ஒரு இளைஞர் கார் பானட்டில் அமர்ந்துக்கொண்டு பயணிப்பது போன்ற வீடியோ வெளியாகி, பல்வேறு தரப்பு மக்களிடம் கண்டனங்களை பெற்று வருகிறது.
பெங்களூருவில் உள்ள ஹெச்.எஸ்.ஆர் லேஅவுட் என்ற இடத்தில் குடியிருப்பு பகுதிக்குள் இளைஞர் இதுபோன்ற காரில் அமர்ந்து சென்றுள்ளார்.
ஹூண்டாய் ஐ10 காரின் பானட்டில் இளைஞர் இவ்வாறு அமர்ந்துக்கொண்டு அதுவும் குடியிருப்பு பகுதிக்குள் வேகமாக சென்றது பலரின் கண்டனத்தை பெற்றுள்ளது.
கார் பானட்டில் அமர்ந்திருக்கும் அந்த இளைஞரை தவிர ஹூண்டாய் ஐ10 காரை யார் ஓட்டியது மற்றும் காருக்குள் எத்தனை பயணிகள் இருந்தனர் என்பது தொடர்பான எந்த தகவலும் இல்லை.
இப்படி ஒரு காரில் அமர்ந்துக்கொண்டு பொதுவழி சாலையில் பயணிப்பது குதுகலமாகவும் விளையாட்டாகவும் தோன்றலாம். ஆனால் இது சட்டப்படி குற்றம்.
Note: images are representation purpose only
காரில் ஸ்டென்ட் செய்வது போல செல்வது , காரில் பயணிப்பவர் மற்றும் குடியிருப்பு வாசிகள் என இருவருக்கும் ஆபத்தானது தான்.
குறிப்பாக குடியிருப்பு பகுதிக்குள் இவ்வாறெல்லாம் வாகனத்தை செலுத்தக்கூடாது என்று அறிவுறுத்த காரணம் குழந்தைகள் தான்.
இப்படி காரில் சென்றுக்கொண்டு இருக்கும் போது குழந்தை ஏதாவது குறுக்கே வந்தால் விளையாட்டு விபரீதமாகி விடும்.
Note: images are representation purpose only
மேலும் இதுபோன்று போக்குவரத்து விதிகளுக்கு புறம்பாக பெரியவர்கள் நடந்துக்கொள்வதை குழந்தைகள் பார்த்தால், அவர்களின் மன ஓட்டம் தவறான வழியில் செல்ல வாய்ப்புள்ளது.
Note: images are representation purpose only
பெங்களூரு ஆக்ஸ்ஃபோர்டு கல்லூரி அருகே அமைந்துள்ள ஹெச்.எஸ்.ஆர் லே-அவுட்டில் முறைகேடான வகையில் வாகனம் ஓட்டுவது வாடிக்கையான ஒன்று தான் என்று கூறுகிறார் அங்கு வாழும் குடியிருப்பு வாசி ஒருவர்.
Note: images are representation purpose only
ஹெச்.எஸ்.ஆர் லே-அவுட்டில் உள்ள சாலைகளை பைக்கில் செல்லும் இளைஞர்கள் ஸ்டென்டிற்காக பயன்படுத்துவதும், காரில் செல்பவர்கள் ரேஸிங் டிராக்காக போதிப்பதும் தினமும் நடக்கும் நிகழ்வு தான் என்கிறார் அவர்.
பெயர் கூற விரும்பாத அந்த குடியிருப்பு வாசி, வாகனங்கள் ஓட்டுவதில் இளைஞர்கள் இவ்வாறு பொறுப்பின்றி நடந்துக்கொள்வது மிகவும் வேதனை அளிப்பதாக தெரிவிக்கிறார்.
பெங்களூரை பொறுத்தவரை குடியிருப்பு பகுதிகள் உட்பட ஏனையை எல்லா சாலை போக்குவரத்து வசதிகளும் குறைந்தபட்சம் தகுந்த முறையில் கட்டமைக்கப்பட்டுள்ளன. அதனால் அந்நகரத்தை சுற்றி இதுபோன்ற பைக் மற்றும் கார் ஸ்டென்ட் நடக்கும் சம்பவம் அதிகமாக உள்ளன.
மேலும் பெங்களூர் காவல்துறை இதுதொடர்பாக கடுமையான நடவடிக்கைகள் எடுத்தவரும் நிலையில், பைக் மற்றும் கார் ஸ்டென்ட் செய்வது நடைபெற்றுக்கொண்டு தான் இருக்கின்றன.
Note: images are representation purpose only
பெரும்பாலான பைக் ஓட்டிகள், தங்களது வாகனங்களை வேகமாக ஓட்டுவதில் தான் ஆர்வம் காட்டுகின்றனர். ஆனால் அவற்றை முறையாக கையாளும் திறன் ஒருசிலருக்கு தான் உண்டு. இதுதான் பெங்களூர் நகர பகுதி மக்களின் கவலையாக உள்ளது.
டிரைவ்ஸ்பார்க் தளம், வாகன ஓட்டிகளை பாதுகாப்பாக முறையில் செயல்பட கேட்டுக்கொள்கிறது. முறைகேடாக வாகனங்களை ஓட்டுவதும், முறையின்றி சாலைகளில் செல்வதையும் எப்போதும் டிரைவ்ஸ்பார்க் அனுமதித்தது கிடையாது.
மற்றவர் உயிரை மதிக்காமல், போக்குவரத்து விதிகளை மீறி பொதுமக்களுக்கு தொந்தரவு அளிக்கும் வகையில் செயல்படும் வாகன ஓட்டிகளுக்கு கடுமையான சட்டங்கள் காத்திருக்கின்றன.
சாலைகளில் பொறுப்பின்றி செல்லும் வாகன ஓட்டிகள் மற்றவருக்கு இடையூறாக நடந்துக்கொள்வதை நீங்கள் பார்த்தால், அது தொடர்பான வீடியோ அல்லது புகைப்படங்கள் உள்ளிட்ட விவரங்களை [email protected] என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள். நாங்கள் அவற்றை முறையாக ஆவணம் செய்து, போக்குவரத்து துறை காவலர்களுக்கு தகுந்த வழியில் புகார் அளிப்போம்.
-
பணங்காரங்க கண்ணு முழுக்க இந்த கார் மேல தான்! பிஒய்டி சீல் கார் எப்படி இருக்குது?
-
புதுசா வாங்கி காசை வேஸ்ட் பண்ணாதீங்க! பைக் ஓட்டி படிக்க செகன்ட் ஹேண்டில் வாங்க பெஸ்ட் பைக்குகள் இது தான்!
-
கார் கப்பல் மாதிரி இருக்காம்! இவ்ளோ மைலேஜ் வேற தருதா! மொத்த கூட்டமும் மாருதி சுஸுகி ஷோரூம்லதான் இருக்கு!