Just In
- 4 hrs ago ஓட்டு போட வந்த பிரபலங்கள் எந்த கார்களில் வந்தார்கள் தெரியுமா? பாதிபேர் ஒரே மாதிரி கார்ல வந்திருக்காங்க!
- 4 hrs ago விமானம் தரையிறங்கும் முன் எரிபொருளை விமானிகள் வேண்டுமென்றே திறந்துவிடுவார்கள்.. நாடுவானில் ஏன் இத செய்யுறாங்க?
- 5 hrs ago லியோ படத்தில் விஜய்யுடன் நடிச்சாரு, இப்போது விலையுயர்ந்த டொயோட்டா காரில்!! கேரள நடிகையின் புது கார்!
- 7 hrs ago போன தடவ சிவப்பு நிற சைக்கிள்.. இந்த முறை இன்னோவா கார்.. இந்த கார் வாயிலாக அவர் என்ன சொல்லியிருக்கார்?
Don't Miss!
- News இன்று நாடு முழுக்க 60% வாக்குப்பதிவு.. நாகாலாந்தில் 6 மாவட்டத்தில் ஜீரோ வாக்குகள் பதிவு! என்ன காரணம்
- Lifestyle தளர்ந்து போன சருமத்தை இறுக்கமாக்கி ஜொலிக்கிற மாதிரி மாத்த ஆசைப்படுறீங்களா? இந்த இயற்கை பொருட்களை யூஸ் பண்ணுங்க
- Sports LSG vs CSK : 101 மீ பறந்த சிக்ஸ்.. மீண்டும் அரங்கேறிய மேஜிக்.. ஒற்றை ஆளாக ஆட்டத்தை மாற்றிய தோனி!
- Finance 9 GB டேட்டா ரூ. 1.20 கோடியா.. அதிர்ச்சியில் புளோரிடா தம்பதி!
- Movies Actor Vijay Sethupathi: மூதாட்டியுடன் செல்ஃபி எடுத்து மகிழ்ந்த விஜய் சேதுபதி.. க்யூட்!
- Technology ஆத்தாடி.. ஒரே போனை வைத்து.. இந்தியாவில் சம்பவம் செய்ய பார்க்கும் Samsung.. பட்ஜெட்ல அறிமுகமாகும் புது Mobile..
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
நடுரோட்டில் வைத்து சப்-இன்ஸ்பெக்டரை வெளுத்து வாங்கிய துணை ஆணையர்: வைரல் வீடியோ...!
ஹெல்மெட் அணியாமல் ஜாலியாக பைக்கை ஓட்டி வந்த துணை ஆய்வாளரை, துணை காவல் ஆணையர் நடுரோட்டில் வைத்து வெளுத்து வாங்கியுள்ளார். இதுகுறித்த வீடியோ தற்போது வைரலாகி வருகின்றது.
இந்தியாவில், ஹெல்மெட் அணியாமல் இருசக்கர வாகனங்களை இயக்குவது குற்றமாகும். இருசக்கர வாகன விபத்தில், பெரும்பாலானோர் உயிரிழப்பதற்கு, ஹெல்மெட் அணியாமல் இருப்பதே முக்கிய காரணமாக இருக்கின்றது. இதன்காரணமாகவே, இருசக்கர வாகனத்தை இயக்குபவரும், பின்னால் அமர்ந்து பயணிப்பவரும் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
ஆனால், இதனை பெரும்பாலான இருசக்கர வாகன ஓட்டிகள் கடைபிடிப்பதே இல்லை. ஆகையால், இதுபோன்ற வாகன ஓட்டிகளின், ஓட்டுநர் உரிமத்தை ரத்து செய்யலாமே...? என சென்னை உயர்நீதிமன்றம் அண்மையில் கேள்வி எழுப்பியிருந்தது.
இதனடிப்படையில், ஹெல்மெட் அணியாமல் இருசக்கர வாகனத்தை ஓட்டிச்செல்பவர்களின் ஓட்டுநர் உரிமத்தை ரத்து செய்ய போக்குவரத்துறைக்கு பரிந்துரை செய்யப்பட்டது. அதேபோன்று, ஹெல்மெட் அணியாமல் செல்லும் போலீஸார்கள் மீதும் இதுபோன்ற கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என போக்குவரத்துறை உயர் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்திருந்தனர்.
இதனைத்தொடர்ந்து, போலீஸார் யாரேனும் ஹெல்மெட் அணியாமல் இருசக்கர வாகனத்தில் பயணித்தால், அவர்கள் மீதும் துறை ரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என காவல்துறையின் உயர்மட்ட அதிகாரிகள் அண்மையில் தெரிவித்திருந்தனர்.
அதன்படி, திருப்பூரைச் சேர்ந்த இளைஞர் ஒருவர், ஹெல்மெட் இல்லாமல் பைக்கை இயக்கியதாக ராதாகிருஷ்ணன் என்ற போலீஸாருடைய வீடியோ ஒன்றை சமீபத்தில் வெளியிட்டிருந்தார். இந்த வீடியோ, வாட்ஸ் ஆப்பில் அதிகளவில் வைரலானதை அடுத்து, ராதா கிருஷ்ணன் மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தற்போது அவரை சஸ்பெண்ட் செய்து உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்நிலையில், சென்னை மெரினா கடற்கரை சாலையிலும் இதேபோன்றதொரு சம்பவம் நிகழ்ந்துள்ளது. இதுகுறித்த, வீடியோவை பிஹைண்ட் உட்ஸ் ஏர் என்ற யுடியூப் சேனல் வெளியிட்டுள்ளது. தற்போது, இந்த வீடியோவும் காட்டு தீயாய் வைரலாகி வருகின்றது.
வீடியோவில், சீருடை அணிந்த போலீஸார் ஒருவர், ஹெல்மெட் அணியாமல் இருசக்கர வாகனத்தை இயக்குவது போன்ற காட்சிகள் இடம்பெற்றுள்ளன. அவ்வாறு, பைக்கை இயக்கி வந்த துணை ஆய்வாளரை, உதவி காவல் ஆணையர் மடக்கி, நடு ரோட்டில் வைத்தே சரமாரியாக வெளுத்து வாங்கியுள்ளார்.
ஆனால், இவர் மீது துறை ரீதியாக என்ன நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என்ற தகவல் இதுவரை வெளியாகவில்லை. இருப்பினும், அண்மையில்தான் சென்னை மாநகர காவல் ஆணையர், அரசு அதிகாரிகள், அரசு பணியாளர்கள், நிர்வாகிகள் என அனைவரும் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும் உத்தரவிட்டிருந்தார்.
இந்த விதி, தற்போது பைக்கை மடக்கிய துணை காவல் ஆணையருக்கும் பொருந்தும். ஆனால், பெரும்பாலான அரசு ஊழியர்கள், இதனை பொருட்டாகவே எடுத்துக் கொள்வதில்லை. அதில், சிலர் தாங்கள்தான் அரசாங்கம் என்பது போன்ற உணர்வில் இருக்கின்றனர். இவ்வாறு, செயல்படும் அதிகாரிகளின் செயலை தவிர்க்கும் விதமாக தற்போதைய இந்த நடவடிக்கை உள்ளது.
அதேசமயம், ஹெல்மெட் அணியாமல் வாகனத்தை இயக்கி போலீஸார் சிக்குவது இது முதல்முறையல்ல. முன்னதாக, இதேபோன்று பல்வேறு சம்பவங்கள் நடைபெற்றுள்ளன. ஆகையால், பொதுமக்களுக்கு முன்னோடியாக, அரசு அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள் உள்ளிட்ட அனைவரும், முதலில் விதிமுறைகளை கடைபிடிக்க வேண்டும் என இந்த புதிய உத்தரவு தீவிரப்படுத்தப்பட்டு வருகின்றது.
-
ரிமோட் சாவியுடன் யமஹா ஸ்கூட்டர் அறிமுகம்.. வெறும் 3 ஆயிரம் ரூபாதான் அதிகமா!.. ஆக்டிவா பொழப்புல மண்ணை போடதான்!
-
முதியவர்களுக்கு லோயர் பெர்த் கிடைக்க என்ன செய்யனும் தெரியுமா? சூப்பர் அட்வைஸ் சொன்ன ரயில்வே!
-
மஹிந்திராவோட இந்த புதிய காரை எல்லாரும் லட்டு மாதிரி அள்ளிட்டு போக போறாங்க.. புதிய டீசர் என்ன சொல்லுது?..