Just In
- 57 min ago சீன நிறுவனம் கேட்ட முக்கிய சான்றை வழங்கிய இந்தியா! மத்த நாடுகள வளச்சு போட்டதபோல இந்தியாவையும் வளச்சுபோட போகுது
- 3 hrs ago எந்தவொரு பணக்காரருக்கும் இந்த நிலைமை ஏற்பட கூடாது! கடனை திருப்பி செலுத்தாததால் இப்படியெல்லாம் கூட செய்வார்களா?
- 5 hrs ago சுஸுகி 2-வீலர் ஃபேக்ட்ரி நான்-ஸ்டாப்பா ரன் ஆகிட்டு இருக்கு!! ஸ்கூட்டர்களை தயாரிக்கவே நேரம் பத்தல!
- 7 hrs ago படகு மாதிரி மிதந்து சென்ற ரூ2.44 கோடி கார்! இவ்வளவு வெள்ளத்துலயும் சின்ன டேமேஜ் கூட ஆகலயே!
Don't Miss!
- Lifestyle Today Rasi Palan 19 April 2024: இன்று இந்த ராசிக்காரர்கள் நிலுவையிலுள்ள பணிகளை முடிக்க முயற்சிப்பது நல்லது...
- News ‛‛70 லட்சம் ஓட்டு''.. கடைசி வரை மவுனம் கலைக்காத விஜய்! இன்று நடக்கப்போகும் மாற்றம்? யாருக்கு லாபம்?
- Sports IPL Classics - 87 ரன்களில் ஆல் அவுட்டான மும்பை.. பஞ்சாப் அணியில் பிரவீன்குமார் அபார பவுலிங்
- Finance ரோஜா பூவும், பிரியாணியும் மணக்குதே.. செலவும் பிச்சுக்குதே..!!
- Technology வெயிட்டிங் ஓவர்.. Sony கேமரா.. 256ஜிபி மெமரி.. வருகிறது புதிய Vivo 5ஜி போன்.. எந்த மாடல்?
- Movies Actress Sujitha: குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பாண்டியன் ஸ்டோர்ஸ் நாயகி.. சூப்பர்ல!
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
2 விமானிகளுடன் சீன எல்லை அருகே காணாமல் போன போர் விமானம்; பதற்றத்தில் இந்தியா!
சீன எல்லை அருகே சுகோய்-30 விமானம் காணாமல் போனாதால். இந்திய அரசு பதற்றம் அடைந்துள்ளது.
இந்திய விமானப் படைக்கு சொந்தமான போர் விமானம் மாயமானது தொடர்பாக, அது சீனாவிற்கு சொந்தமான ஏதேனும் மலைப்பகுதிகளில் மோதி வெடித்திருக்கலாம் என்று நம்பப்படுகிறது.
அசாம் மாநிலம் தேஸ்பூர் அருகே வானில் பறந்து கொண்டிருந்த இந்திய விமானப்படைக்கு சொந்தமான சுகோய்-30 போர் விமானம் நேற்று காலை திடீரென மாயமானது.
சுகோய்-30 விமானம் காணாமல் போன போது, அதில் இரண்டு விமானிகள் வழக்கம் போல பயிற்சி மேற்கொண்டு இருந்தனர். அப்போது, திடீரென ரேடார் சிக்னலில் இருந்து 60 கிலோ மீட்டர் தொலைவில் விமானம் காணாமல் போனது.
அசாமின் சாலோனிபாரி விமான தளத்தில் இருந்து நேற்று காலை 10.30 மணியளவில் பயிற்சிக்காக புறப்பட்ட சுகோய்-30 போர் விமானம், தரையில் இருந்து மேல் எழும்பிய 30-வது நிமிடத்தில் ரேடார் சிக்னலில் இருந்து திடீரென மாயமானது.
பதற்றமடைந்த கண்காணிப்பாளர்கள், விமானத்தை பல மணிநேரமாக தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை. விமானிகளை தொடர்பு கொண்டாலும், அவர்களிடமிருந்து எந்த தகவலும் இல்லை.
சுமார் 12 பில்லியன் செலவில் சுகோய்-30 ரகத்தை சார்ந்த மொத்தம் 240 விமானங்களை ஹிந்துஸ்தான் ஏரோநாடிக்கிஸ் என்ற உரிமத்தின் கீழ் இந்தியா ரஷ்யாவிடமிருந்து வாங்கியது
சுகோய்-30 விமானத்தில் ட்வின்-எஞ்சின் உள்ளது. அனைத்து பருவநிலை மாற்றம் மற்றும் காலநிலை மாற்றம் ஆகியவற்றில் தாக்குப்பிடித்து நிற்கும் திறன் கொண்டது.
முற்றிலும் இந்தியாவிற்கான சிற்பம்சம் மற்றும் அமைப்புகளுடன் சுகோய்-30 ஜெட் விமானங்களை ரஷ்யா தயாரித்தது.
மேலும் இதற்கான உதிர்பாகங்களை ரஷ்யா, ஃபிரான்ஸ் மற்றும் இஸ்ரேல் நாடுகளிலிருந்து வாங்கி பொருத்தியது.
2010ம் ஆண்டில் சுகோய்-30 ரக விமானங்களை, பிரம்போஸ் ஏவுகணைகளை தாங்கி செல்லக்கூடிய திறனுடன் தயாரிக்க ரஷ்யாவிற்கு இந்தியா ஆர்டர் கொடுத்தது.
கடந்த பிப்ரவரி மாதத்தில் புதிய சுகோய்-30 விமானங்கள் டர்போ-ஃபேன் எஞ்சின் கொண்டு தயாரிக்கப்பட்டது. இவ்வாறு தொடர்ந்து இந்த விமானங்கள் இந்திய இராணுவத்தால் மேம்படுத்தப்பட்டு வந்தன.
சுகோய் விமான இந்திய விமான படையில் சேர்க்கப்பட்டது முதலே பல கோளாறுகளை சந்தித்து தான் வருகின்றன. குறிப்பாக இதுவரை எந்த விமானமும் போரில் சிக்கி சேதமடைந்தது கிடையாது. அனைத்தும் விபத்தின் போது சேதமடைந்தவை தான்.
கடந்த மூன்று வருடங்களில் மட்டும் 70 முறை சுகோய் விமானங்கள் விபத்துகளை சந்தித்துள்ளன. இதற்கு காரணம் எஞ்சின் கோளாறு தான் என்று சொல்லப்படுகிறது. இந்த ரக விமானங்களை சரிசெய்ய நம்மிடம் உரிய வசதிகள் இல்லை என்பதே இதுபோன்ற விபத்துகள் நடக்க முக்கிய காரணம்.
போர் விமானங்களை சரியாக பராமரிப்பதற்காகவே இந்திய அரசு ரஷ்யாவிடம் புதிய ஒப்பந்தம் போட்டுள்ளது. இதன் மூலம் உதிரி பாகங்கள் கிடைப்பதில் ஏற்படும் சிக்கலும் தீரும் என்று நம்பப்படுகிறது. தற்போதைய இந்த ஒப்பந்தம் மூலமாவது இந்திய விமானப் படையின் நிலைமை மாறுபடும் என்பதை எதிர்பார்க்கலாம்.
சீன எல்லை அருகே சுகோய்-30 போர் விமானம் மாயமாகி உள்ளதால் திடீர் பதற்றம் ஏற்பட்டுள்ளது.இதனையடுத்து சுகோய் விமானத்தை தேடும் பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளது.
ஏற்கனவே இந்திய விமானப்படைக்குச் சொந்தமான ஏ.என்-32 ரக விமானம் மாயமாகி இதுவரை கண்டுபிடிக்கப்படாத நிலையில் சுகோய் 30 ரக விமானம் மாயமானது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
நாசாவே அசந்து போகும் முக்கிய கருவியை உருவாக்கிய இஸ்ரோ! இனி உலகமே நம்ம கிட்ட தான் இந்த ஐடியாவை கேட்கும்!
-
இந்தியாவே காத்துகிடந்த 4 சூப்பர் பைக்குகளை அறிமுகம் செய்த அப்ரிலியா! பிராண்ட் அம்பாஸிட்டரான ஹிந்தி நடிகர்!
-
வெறும் ரூ150க்கு விமான டிக்கெட் விற்பனையாகுது! இது ஆஃபர் எல்லாம் இல்லை உண்மையான கட்டணமே இவ்வளவு தான்!