Just In
- 1 hr ago உலகம் முழுவதும் ராயல் என்ஃபீல்டு பைக்கை வாடகைக்கு எடுக்கலாம்! எப்படி தெரியுமா?
- 3 hrs ago சீன நிறுவனம் கேட்ட முக்கிய சான்றை வழங்கிய இந்தியா! மத்த நாடுகள வளச்சு போட்டதபோல இந்தியாவையும் வளச்சுபோட போகுது
- 5 hrs ago எந்தவொரு பணக்காரருக்கும் இந்த நிலைமை ஏற்பட கூடாது! கடனை திருப்பி செலுத்தாததால் இப்படியெல்லாம் கூட செய்வார்களா?
- 8 hrs ago சுஸுகி 2-வீலர் ஃபேக்ட்ரி நான்-ஸ்டாப்பா ரன் ஆகிட்டு இருக்கு!! ஸ்கூட்டர்களை தயாரிக்கவே நேரம் பத்தல!
Don't Miss!
- News மஞ்சள் கலர் கல்யாண பத்திரிகை.. நாட்டை "ராவணன்" ஆண்டால் என்ன? பொண்ணு பேர் பார்த்தீங்களா? சபாஷ் நெல்லை
- Movies BMW கார் வாங்கிய இயக்குநர்.. எடுத்ததே ஒரே படம்.. குதர்க்கமாக கேள்வி கேட்கும் நெட்டிசன்ஸ்!
- Lifestyle எப்பவும் ஒரே மாதிரி சட்னி செய்யாம.. ஒருமுறை தீயில் சுட்ட தக்காளி சட்னியை செய்யுங்க.. டேஸ்ட் சும்மா அள்ளும்..
- Sports ரூ.14 கோடி வீரருக்கு ஆப்பு.. லக்னோ பிட்சால் சிஎஸ்கே அணியில் நடக்கப்போகும் மாற்றம்.. ருதுராஜ் முடிவு!
- Technology ரூ.10,000 குள்ள 2.. ரூ.20,000 குள்ள 2.. Redmi-யின் 5 முரட்டு போன்கள் மீது.. வெயிட்டா ரூ.2000 டிஸ்கவுண்ட்!
- Finance ரோஜா பூவும், பிரியாணியும் மணக்குதே.. செலவும் பிச்சுக்குதே..!!
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
12 மணிநேரத்தில் டெல்லி டு மும்பை... வரப்பிரசாதமாகும் டால்கோ!
அதிவேக ரயில்களை இயக்கும் முனைப்பில், ஸ்பெயின் நாட்டு தயாரிப்பான டால்கோ ரயிலை இந்திய ரயில்வே துறை சோதனை ஓட்டம் நடத்தி ஆய்வு செய்து வருகிறது. கடந்த சில மாதங்களாக நடந்து வரும் இந்த ஆய்வு திருப்திகரமாக இருந்து வருவதாக ரயில்வே வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இந்தநிலையில், சில வாரங்கள் இடைவெளிக்கு பின்னர், டால்கோ ரயிலின் சோதனை ஓட்டம் நேற்றுமுன்தினம் மீண்டும் நடந்தது. டெல்லியில் பிற்பகல் 2.45 மணிக்கு புறப்பட்டு டால்கோ ரயில், நள்ளிரவு 2.57 மணிக்கு மும்பையை அடைய வேண்டும் என்று இலக்கு வைக்கப்பட்டது.
குறித்த நேரத்தில் டெல்லியில் டால்கோ ரயில் புறப்பட்டது. ஆனால், வழியில் சில நடைமுறை பிரச்னைகளால் 17 நிமிடங்கள் தாமதமாக 3.14 மணிக்கு மும்பைக்கு வந்து சேர்ந்தது. இருப்பினும், ராஜ்தானி, சதாப்தி ரயில்களுடன் ஒப்பிடும்போது, டால்கோ ரயிலின் பயண நேரம் 5 மணி நேரம் வரை குறைவாக இருக்கிறது.
இதனால், பயணிகள் மத்தியில் இந்த டால்கோ ரயில் பெரும் ஆவலை ஏற்படுத்தியிருக்கிறது. இந்த நிலையில், டெல்லியிலிருந்து மும்பைக்கு நாளை இறுதி சோதனை ஓட்டம் நடத்தப்பட உள்ளது.
இந்த சோதனை ஓட்டத்தின்போது சரியாக 12 மணிநேரத்தில் டெல்லியிலிருந்து மும்பையை தொடுவதற்கு டால்கோவுக்கு இலக்கு வைக்கப்பட்டு இருக்கிறது.
இந்த சோதனை ஓட்டத்தின்போது மணிக்கு 150 கிமீ வேகத்தில் டால்கோ ரயிலை இயக்க ரயில்வே அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். ஏற்கனவே, மணிக்கு 180 கிமீ வேகத்தை டால்கோ ரயில் தொட்டிருப்பதால், இந்த வேகம் என்பது எளிதாக எட்டக்கூடியதாகவே பார்க்கப்படுகிறது.
மேலும், டால்கோ ரயிலின் சராசரி வேகமும் மிக அதிகம் என்பதால் பயண நேரம் வெகுவாக குறையும் வாய்ப்புள்ளது. அதேநேரத்தில், தனியார் டாக்சி நிறுவனங்கள், ஆம்னி பஸ் போல ராஜ்தானி, துரந்தோ ரயில்களின் கட்டணத்தை ரயில்வே அமைச்சகம் இன்று தடாலடியாக மாற்றியமைத்துள்ளது.
எனவே, டால்கோ ரயில்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டாலும், அதன் கட்டணம் மிக அதிகமாக இருக்கும். எனவே, இது சாதாரண மக்களுக்கான அதிவேக ரயிலாக இருக்காது என்று கருதப்படுகிறது.
சென்னையிலிருந்து பெங்களூருக்கு டால்கோ ரயிலை சோதனை ஓட்டம் நடத்த தெற்கு ரயில்வே முயற்சித்து வருவதும் குறிப்பிடத்தக்கது. அப்படி இருக்கும்பட்சத்தில், 3 மணிநேரத்தில் சென்னையிலிருந்து பெங்களூர் சென்றுவிடும் வாய்ப்பு ஏற்படும்.
எளிமையான முறையில் கார் இன்ஸ்யூரன்ஸ் செய்யும் திட்டத்தை ரிலையன்ஸ் நிறுவனம் வழங்குகிறது. இந்த இன்ஸ்யூரன்ஸ் திட்டத்தை எடுப்பதற்கு இங்கே க்ளிக் செய்யவும்.
-
சீனா, ஜப்பான்லாம் ஓரமா போய் விளையாடு... இந்தியாவை பாத்து உலக நாடுகள் எல்லாம் மூக்கின் மேல் விரல் வைக்க போகுது!
-
சாம்பார், ரசம்னு வித விதமா சமைச்சே தம்பி சூப்பரான காரை வாங்கிட்டாரு!
-
ஹோண்டா தயாரித்த மின்சார காரா இது! பெரிய பெரிய சூப்பர் கார் பிராண்டுகளே இதோட ஸ்டைலுக்கு முன்னாடி மண்டியிடனும்!