செப்டம்பர் 1 முதல் தமிழகத்தில் அமலாகும் அதிரடியான சாலை விதிகள்..!! நீங்கள் செய்ய உள்ளீர்கள்..??
செப்டம்பர் 1 முதல் தமிழகத்தில் அமலாகும் அதிரடியான சாலை விதிகள்..!! நீங்கள் செய்ய உள்ளீர்கள்..??
செப்டம்பர் 1 முதல் எந்தவொரு டீலர்களும் ஓட்டுநர் உரிமம் இல்லாதவர்களுக்கு வாகனங்களை விற்பனை செய்யக்கூடாது என போக்குவரத்து காவல்துறை ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.

தமிழகத்தில் சாலை விபத்துகளை குறைக்க மாநில அரசு, தமிழக காவல்துறையோடு இணைந்து பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.

அதில், செப்டம்பர் 1 முதல் சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் அசல் ஓட்டுநர் உரிமம் வைத்திருப்பது கட்டாயம் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

மேலும் இதன் ஒரு பகுதியாக வரும் செப்டம்பர் 1 முதல் ஓட்டுநர் உரிமம் வைத்திருக்காதவர்களுக்கு எந்தவொரு டீலரும் வாகனங்களை விற்கக்கூடாது என போக்குவரத்து காவல் துறை ஆணையர் கூறியுள்ளார்.

இதனுடன் புதிய வாகனத்தை பதிவு செய்யும் முன், அதன் உரிமையாளர்கள் வாகனத்தை ஓட்டுவதற்கு வட்டார போக்குவரத்து அதிகாரிகள் அனுமதிக்கவே கூடாது என்பதும் கூடுதல் உத்தரவாக உள்ளது.

இந்த புதிய உத்தரவுகளை தமிழக போக்குவரத்து ஆணையர் தயானந்த் கட்டாரியா அனைத்து வட்டார போக்குவரத்து அலுவலர்கள், சார்பு அலுவலர்கள் ஆகியோருக்கு சுற்றறிக்கையாக அனுப்பியுள்ளார்.

அந்த அறிக்கையில், தமிழகத்தில் 2017 ஜூலை வரை நடைபெற்ற 9231 சாலை விபத்துகளில் 9881 பேர் உயிரழந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த எண்ணிக்கையில் நடைபெற்ற 90 சதவீதமான விபத்துகள் வாகனத்தை ஓட்டுபவர்களின் கவனக்குறைவால நடைபெற்றத்தாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடரும் இந்த எண்ணிக்கையை குறைக்கும் வகையில், எந்தவொரு டீலர்களும் வாடிக்கையாளர்களுக்கு ஓட்டுநர் உரிமம் இல்லாமல் வாகனங்களை விற்பனை செய்யக்கூடாது.

இந்த உத்தரவை மீறி நடக்கும் விற்பனையாளர்கள், குற்றவாளிகளாக கருதப்படுவர். அவர்களுக்கு சிறைத்தண்டனையோ, அபராதமோ அல்லது இரண்டும் வழங்கப்படும்.

கூடுதலாக, புதிய வாகனங்களை பதிவு செய்யாமல், உரிமையாளர்கள் வாகனத்தை சாலையில் ஓட்டுவதற்கு மாவட்ட வட்டார போக்குவரத்து அதிகாரிகள் அனுமதிக்கக்கூடாது.

பழகுநர் உரிமம் என்கிற எல்.எல்.ஆர் வைத்திருப்போர், அந்த உரிமத்தில் உள்ள வாகனத்தை மட்டுமே ஓட்டவேண்டும். வேறு வாகங்களை ஓட்டக்கூடாது.

செப்டம்பர் 1ம் தேதி முதல் நடைமுறைக்கு வரவுள்ள இந்த புதிய சாலை விதிகளை அனைத்து வட்டார போக்குவரத்து அதிகாரிகளும் கடைப்பிடிக்கவேண்டும்.

இவ்வாறு வட்டார போக்குவரத்து மற்றும் போக்குவரத்து துறை சார்ந்த அலுவலங்களுக்கு தமிழக போக்குவரத்து துறை கமிஷனர் தயானந்த் கட்டாரியா உத்தரவிட்டுள்ளார்.

ஆகையால் செப்டம்பர் 1 முதல் தமிழகத்தில் புதிய வாகனம் வாங்க வேண்டும் என்றால் வாடிக்கையாளர்கள் ஓட்டுநர் உரிமம் வைத்திருப்பது கட்டாயமாகிறது.

இதே நேரத்தில் சாலையில் இனி வாகனத்தை ஓட்ட வாகன ஓட்டிகள் அசல் ஓட்டுநர் உரிமம் வைத்திருப்பதும் கட்டாயமாகி உள்ளது.


Click it and Unblock the Notifications








