Just In
- 4 hrs ago உலகின் தலை சிறந்த கார் எது தெரியுமா? விருதை தட்டி சென்ற கியா தயாரிப்பு! சும்மா ஒன்னும் இதை தூக்கி கொடுத்திடல..
- 4 hrs ago மேட்-இன் தமிழ்நாடு... தரத்தில் எந்த குறையும் இருக்காது!! மொத்தமும் எலக்ட்ரிக் தான்!
- 5 hrs ago பிரசார வேனை சொகுசு பங்களா போல செட்டப் செய்த கமலஹாசன்! இதை பார்க்கவே கூட்டம் குவியுமே!
- 6 hrs ago கண்ண மூடிட்டு ஹோண்டா டூவீலர்களை வாங்கும் இந்தியர்கள்! இந்த விஷயம் தெரிஞ்சா விடிஞ்சதும் ஷோரூம்லதான் இருப்பீங்க!
Don't Miss!
- News பொத்தென விழுந்த மேற்கூரை.. 3 பேரை அமுக்கி கொன்ற சென்னை பப் விபத்து பற்றி காவல்துறை விளக்கம்
- Sports ரிஷப் பண்ட்க்கு 2 முறையும் லக் இல்ல.. தொடர்ந்து 2வது வெற்றியை பெற்ற ராஜஸ்தான்.. ரியான்,ஆவேஷ் அபாரம்
- Lifestyle வரப்போகிற சூரிய கிரகணம் இந்த 4 ராசிக்காரங்களுக்கு பெரிய துரதிர்ஷ்டத்தை தரப்போகுதாம்..ரொம்ப ஜாக்கிரதையா இருங்க!
- Movies Cooku with comali 5: புது கோமாளிகளுடன் களமிறங்கும் குக் வித் கோமாளி 5 -ஆங்கர் ரக்ஷன் சம்பளம் இவ்வளவா
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
- Technology குறைஞ்சது 4 -5 நாள் ஆகும்.. கடைசி நேரத்துல அலையாதீங்க.. Voter ID-க்கான முக்கிய வேலை.. உடனே செஞ்சிடுங்க!
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
மதுரையில் அரசு பஸ் டிரைவருக்கு அபராதம் விதித்து அதிரடி காட்டிய அதிகாரிகள்... எதற்காக தெரியுமா?
மதுரையில் அரசு பேருந்து ஓட்டுனருக்கு அபராதம் விதித்து அதிகாரிகள் அதிரடி காட்டியுள்ளனர். இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.
இந்தியாவில் கொரோனா வைரஸ் இரண்டாவது அலை வேகமெடுத்து வருகிறது. குறிப்பாக தமிழகத்தில் கோவிட்-19 வைரஸால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை கடந்த சில நாட்களாக தொடர்ந்து உயர்ந்து கொண்டே வருகிறது. இதனை கட்டுப்படுத்துவதற்காக தமிழக அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை மீண்டும் பிறப்பித்துள்ளது.
இதன் ஒரு பகுதியாக அனைவரும் முக கவசம் அணிய வேண்டும் என அதிகாரிகள் வலியுறுத்தி வருகின்றனர். இதனை மீறி முக கவசம் அணியாமல் இருப்பவர்களுக்கு அபராதம் விதிக்கும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இதன்படி மதுரையில் முக கவசம் அணியாத அரசு பேருந்து ஓட்டுனர் ஒருவருக்கு சுகாதார துறை அதிகாரிகள் அதிரடியாக அபராதம் விதித்துள்ளனர்.
மதுரை ஆரப்பாளையம் பேருந்து நிலையத்தில் சுகாதார துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அரசு பேருந்து ஓட்டுனர் ஒருவர் முக கவசம் அணியாமல் இருந்தது கண்டறியப்பட்டது. இதையடுத்து சுகாதார துறை அதிகாரிகள் அவருக்கு 200 ரூபாயை அபராதமாக விதித்தனர். இதுகுறித்து நியூஸ்7 தமிழ் செய்தி வெளியிட்டுள்ளது.
முக கவசம் அணியாதவர்களுக்கு எதிராக தமிழகம் முழுவதும் தற்போது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. பேருந்து நிலையங்கள் உள்ளிட்ட இடங்களில் அதிகாரிகள் சோதனை நடத்தி அபராதம் விதித்து வருகின்றனர். எனவே வெளியிடங்களுக்கு செல்வோர் தவறாமல் முக கவசங்களை அணிந்து செல்வது சிறந்தது.
இது கொரோனா வைரஸிடம் இருந்து மட்டுமின்றி, அதிகாரிகளின் நடவடிக்கையில் இருந்தும் உங்களை காக்கும். முன்னதாக தமிழகத்தில் முக கவசம் அணியாமல் வரும் வாகன ஓட்டிகளுக்கு பெட்ரோல், டீசல் விற்பனை செய்யப்படாது என பெட்ரோலிய வணிகர்கள் சங்கம் அறிவித்துள்ளது என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.
இந்த அறிவிப்பிற்கு தற்போது நல்ல வரவேற்பு கிடைத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கொரோனா வைரஸ் தொற்று ஏற்படுவதை தவிர்ப்பதில் முக கவசங்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. ஆனால் ஒரு சிலர் முக கவசம் அணியாமல் அலட்சியம் காட்டுகின்றனர். இது அவர்களுக்கு மட்டுமின்றி, மற்றவர்களுக்கும் பிரச்னைகளை ஏற்படுத்தும் என்பதை அவர்கள் உணர்வதில்லை.
எனவேதான் அனைவரையும் முக கவசம் அணிய வைக்க இப்படி பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. முன்னதாக காரில் தனியாக பயணம் செய்பவர்களும் முக கவசம் அணிய வேண்டும் என டெல்லி உயர் நீதிமன்றம் கடந்த ஒரு சில நாட்களுக்கு முன்பு அதிரடியாக உத்தரவிட்டிருப்பதும் கவனிக்கத்தக்க விஷயமாகும்.
காரில் தனியாக செல்லும்போது முக கவசம் அணியவில்லை என்ற காரணத்திற்காக அபராதம் விதிக்கப்பட்டதை எதிர்த்து ஒரு சிலர் தாக்கல் செய்த மனுவை விசாரிக்கும்போது, டெல்லி உயர் நீதிமன்றம் இந்த அதிரடி உத்தரவை பிறப்பித்தது. அத்துடன் முக கவசம் அணிய வேண்டியதன் அவசியத்தையும் டெல்லி உயர் நீதிமன்றம் இந்த வழக்கு விசாரணையின்போது எடுத்துரைத்தது.
-
யமஹா ஆர்.எக்ஸ் பைக்கை வைத்திருப்பவங்க கவனத்துக்கு!! என்ஜின் பவரை அதிகமாக்க சூப்பரான ஐடியா!
-
ரோபோ சங்கர் மகள் திருமணத்திற்கு சீதனமா இந்த காரை கொடுத்தாரா? இதோட விலை என்ன தெரியுமா?
-
ரூ.5 லட்சத்தை கையில் வைத்துக்கொண்டு அல்லாடுறீங்களா? பவர்ஃபுல் பைக்ஸுக்கு நம் நாட்டில் எப்போதுமே குறை இல்லை!!