தமிழ்நாட்டில் இனி அரசு பஸ் எல்லாம் கரெக்ட் டைம்க்கு வரும்! இதுக்குன்னு தனி ஆப் வரப்போகுது!
தமிழ்நாட்டில் அரசு பஸ்கள் எந்தெந்த பஸ் ஸ்டாண்டுக்கு எந்தெந்த நேரத்தில் வரும், எந்த நேரத்தில் கிளம்பும் என்ற தகவல்களை செல்போனிலேயே அறிந்து கொள்ள புதிய செயலியை அறிமுகப்படுத்தத் தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இந்த தகவல் பயணிகளுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்பதால் இதை தமிழக அரசு செய்கிறது. இது குறித்த விரிவான விவரங்களைக் காணலாம் வாருங்கள்.
தமிழகம் முழுவதும் போக்குவரத்துக் கழகங்கள் அமைக்கப்பட்டு அதன் மூலம் அரசு பஸ்களை இயக்கி வருகிறது. சிறு கிராமங்களில் இருந்து நகரங்களுக்கு டவுன் பஸ்களும், ஒரு நகரம் விட்டு மற்றொரு நகரம் செல்ல ரூட் பஸ்களும், நீண்ட தூர பயணத்திற்கு விரைவு போக்குவரத்துக் கழக பஸ்களும் இயக்கப்பட்டு வருகிறது.

தமிழகத்தில் ஆயிரக்கணக்கில் பஸ்கள் இயங்கி வந்தாலும் இந்த பஸ்கள் எல்லாம் எந்த நேரத்தில் எந்த பஸ் ஸ்டாண்டிலிருந்து கிளம்புகிறது எந்தெந்த நேரத்தில் எந்தெந்த ஊர்களுக்கு செல்கிறது கடைசியாகச் செல்லும் ஊர் என்ன என்ற தகவல்கள் எல்லாம் தெளிவாக இல்லை. பல ஆண்டுகளுக்கு முன்பு பஸ் ஸ்டாண்டுகளில் இப்படியாக பஸ்களில் குறித்த நேரப் பலகை வைத்திருப்பார்கள்.
இன்று பெரும்பாலான பஸ் ஸ்டாண்ட் மற்றும் பஸ் ஸ்டாப்புகளில் நேர பலகையும் இல்லாமல் இருக்கிறது. தற்போது பஸ் ஸ்டாப்பிற்கு வரும் பயணிகள் சகப் பயணிகளிடமும் அல்லது அங்கு இருக்கும் மற்ற அரசுப் போக்குவரத்துக் கழக ஊழியர்களிடமோ கேட்டு தான் பஸ்களின் நிலவரம் குறித்துத் தெரிந்து கொள்ள வேண்டியது உள்ளது.

இந்நிலையில் சென்னை மாநகர போக்குவரத்துக் கழகம் உட்பட தமிழகத்தில் உள்ள ஏழு போக்குவரத்து கழகங்களுக்கும் தனியாக ஒரு செயலியை உருவாக்கத் தமிழக அரசு முடிவு செய்துள்ளது. அதில் நீங்கள் குறிப்பிட்ட பஸ் ஸ்டாண்ட் அல்லது பஸ் ஸ்டாப்பை தேர்வு செய்தால் அடுத்து அந்த பஸ் ஸ்டாப்பிற்கு வரக்கூடிய பஸ் குறித்த தகவல்கள் கிடைக்கும்.
அந்த செயலியில் ஒரு பஸ் ஸ்டாப்பை நீங்கள் தேர்வு செய்தால் அதில் எந்தெந்த நேரத்தில் எந்தெந்த ரோட்டில் செல்லக்கூடிய பஸ்கள் எல்லாம் வந்து செல்கின்றன என்ற அனைத்து விதமான தகவல்களும் கிடைக்கும். அது மட்டுமல்லாமல் நீங்கள் தேர்வு செய்த பஸ்ஸில் எந்தெந்த ஊருக்கு எவ்வளவு டிக்கெட் கட்டணம் என்ற விபரமும் அதில் இருக்கும்.

தற்போது சென்னை மாநகரப் போக்குவரத்துக் கழகம், விழுப்புரம், கும்பகோணம், திருநெல்வேலி, சேலம், கோவை, மதுரை, ஆகிய ஏழு போக்குவரத்துக் கழகங்களில் உட்பட்ட பஸ்களுக்கு மட்டும் இந்த செயலியை அறிமுகப்படுத்தத் தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இதன் படி இந்த போக்குவரத்து கழக பஸ்களில் தகவல்கள் அந்த செயலில் பதிவேற்றப்படவுள்ளது.
முதற்கட்டமாக இந்த செயலியில் தமிழகத்தில் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட 2213 புதிய டீசல் பஸ்கள் மற்றும் 500 எலெக்ட்ரிக் பஸ்கள் குறித்த தகவல் மட்டுமே இதில் பதிவேற்றப்பட உள்ளது. பின்னர் இது செய்யலில் ஒவ்வொரு பஸ்களின் தகவல்களும் மெல்ல மெல்லப் பதிவேற்றம் செய்யப்படும். ஒரு சில மாதங்களில் இந்த பதிவேற்றம் அனைத்தும் முடிந்து இந்த முழு செயலியும் பயன்பாட்டிற்கு வரும்.
இது மட்டுமல்ல தமிழகம் முழுவதும் எங்கும் அரசு பஸ்களில் அடுத்து வரக்கூடிய பஸ் ஸ்டாப் மற்றும் அங்கிருந்து வேறு வேறு இடங்களுக்கு பஸ் மாறக்கூடிய தகவல் உள்ளிட்ட அறிவிப்புகளைச் செய்யும் வகையில் புதிய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இதன்படி தமிழ் மற்றும் ஆங்கிலம் ஆகிய இரண்டு மொழிகளிலும் அறிவிப்பு செய்யப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: தமிழகம் முழுவதும் இயங்கும் அரசு பஸ்களில் நேரம் பின்பற்றப்படுகிறதா என்ற கேள்வி பலருக்கு இருக்கிறது. மேலும் எந்தெந்த பஸ்கள் எந்தெந்த நேரத்தில் செயல்படுகின்றன என்ற சரியான தகவல்கள் யாரிடமும் இல்லை. இந்த செயலி பயன்பாட்டிற்கு வந்தால் நிச்சயம் மக்களுக்குப் பயனுள்ளதாக இருக்கும் குறிப்பாகக் கிராமப்புறங்களில் டவுண் பஸ் களை நம்பி இருக்கும் மக்களுக்கு இது நிச்சயம் உதவியாக இருக்கும்.


Click it and Unblock the Notifications
