Just In
- 3 hrs ago இந்தியாவில் விவசாயம் பார்ப்பவர்கள் அதிகமாகி விட்டார்களா என்ன? மஹிந்திரா டிராக்டர்ஸ் சேல்ஸ் டாப் கியரில்!!
- 3 hrs ago தயவு செஞ்சு துபாய் பக்கம் வராதீங்க!விமான பயணிகளுக்கு இந்திய தூதரகம் எச்சரிக்கை!
- 4 hrs ago மின்சாரத்தில் இயங்கும் ஆக்டிவாவை ஹோண்டா எப்போ தயாரிக்கும்னு கேட்டுட்டே இருந்தீங்களே.. இதோ அந்த தகவல்!
- 8 hrs ago ஓட்டு போட வந்த பிரபலங்கள் எந்த கார்களில் வந்தார்கள் தெரியுமா? பாதிபேர் ஒரே மாதிரி கார்ல வந்திருக்காங்க!
Don't Miss!
- News தென் சென்னையில் கள்ள ஓட்டு? பாஜக திமுக மாறி மாறி புகார்.. பெரும் பதற்றம்! என்ன நடக்கிறது
- Sports CSK vs LSG : தோனி பேட்டிங்.. அலறிய வாட்ச்.. பதறிய டி காக் மனைவி.. ரசிகர்கள் செயலால் நடந்த சம்பவம்
- Lifestyle 2024 குரு பெயர்ச்சியால் உருவாகும் குபேர யோகம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு பணக்காரராகும் வாய்ப்பிருக்கு..
- Technology சுந்தர் பிச்சையின் இன்னொரு முகம்.. Ad Blocker ஆப்களுக்கு ஆப்பு அடிச்ச Google.. யூசர்களுக்கு Warning.. இனிமேல்?
- Finance 9 GB டேட்டா ரூ. 1.20 கோடியா.. அதிர்ச்சியில் புளோரிடா தம்பதி!
- Movies Actor Vijay Sethupathi: மூதாட்டியுடன் செல்ஃபி எடுத்து மகிழ்ந்த விஜய் சேதுபதி.. க்யூட்!
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
உயிரை பணயம் வைத்து மின்னல் வேகத்தில் பறந்த ஆம்புலன்ஸ் டிரைவர்! காரணத்தை கேட்டு தமிழ்நாடே பாராட்டுது
தஞ்சையில் இருந்து மதுரைக்கு மின்னல் வேகத்தில் ஆம்புலன்ஸை ஓட்டி சென்ற டிரைவருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.
இந்தியாவில் உடல் உறுப்பு தானம் தொடர்பான விழிப்புணர்வு பொதுமக்கள் மத்தியில் அதிகரித்து வருகிறது. இதனை நிரூபிக்கும் வகையிலான சம்பவம் தற்போது நடைபெற்றுள்ளது. அதுவும் தமிழகத்தில். சாலை விபத்தில் சிக்கி உயிரிழந்த இளம்பெண் ஒருவரின் கல்லீரல் மற்றொருவருக்கு வெற்றிகரமாக பொருத்தப்பட்டுள்ளது.
இதற்கு ஆம்புலன்ஸ் டிரைவர் ஒருவர் உறுதுணையாக இருந்துள்ளார். பொதுவாக இந்தியாவில் ஆம்புலன்ஸ், தீயணைப்பு வாகனம் போன்ற அவசர கால வாகனங்களுக்கு வழிவிடுவது தொடர்பாக மக்களுக்கு போதிய அளவில் விழிப்புணர்வு இல்லை. அவசர கால வாகனங்கள் செல்வதற்கு, வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் சில சமயங்களில் இடையூறு ஏற்படுத்துகின்றனர்.
ஆனால் இந்த சம்பவத்தில் பொதுமக்கள் நல்ல ஒத்துழைப்பை வழங்கியுள்ளனர். அத்துடன் போக்குவரத்து காவல் துறையினரும், உரிய முன்னேற்பாடுகளை கச்சிதமாக செய்தனர். இதன் காரணமாக ஆம்புலன்ஸ் விரைவாக சென்று, கல்லீரல் வெற்றிகரமாக பொருத்தப்பட்டது. தஞ்சையில் சமீபத்தில் சாலை விபத்து ஒன்றில் சிக்கிய 25 வயது இளம்பெண் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
ஆனால் சிகிச்சை பலனளிக்காமல் அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த துயரத்திற்கு மத்தியிலும் அவரின் உடல் உறுப்புகளை தானமாக கொடுக்க அவரது பெற்றோர் முன்வந்தனர். அந்த இளம்பெண்ணின் கல்லீரல் வேறு ஒரு நோயாளிக்கு பொருத்தமாக இருந்தது. அவர் மதுரை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
எனவே கல்லீரலை மதுரைக்கு கொண்டு செல்லும் பணிகள் வேகம் எடுத்தன. தஞ்சையில் இருந்து மதுரைக்கு சுமார் 190 கிலோ மீட்டர்கள். கல்லீரலை ஆம்புலன்ஸ் மூலம் சாலை மார்க்கமாக கொண்டு செல்ல முடிவு செய்யப்பட்டது. எனவே போக்குவரத்து போலீசார் காலம் தாழ்த்தாமல் உடனடியாக முன்னேற்பாடு பணிகளை செய்தனர்.
இதன் காரணமாக 190 கிலோ மீட்டர் தூரத்தை ஆம்புலன்ஸ் வெறும் 1 மணி நேரம் மற்றும் 50 நிமிடங்களில் கடந்தது. ஆம்புலன்ஸில் பத்திரமாக கொண்டு வரப்பட்ட கல்லீரல், அறுவை சிகிச்சையின் மூலம் அந்த நோயாளிக்கு வெற்றிகரமாக பொருத்தப்பட்டது. இந்த ஆம்புலன்ஸை சுப்ரமணியன் என்ற டிரைவர் ஓட்டினார்.
அவருக்கு தற்போது பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன. ஏனெனில் அவர் 140 கிலோ மீட்டர்கள் வேகத்தில் ஆம்புலன்ஸை இயக்கி, கல்லீரலை வெற்றிகரமாக மதுரை கொண்டு வந்து சேர்த்துள்ளார். இதுகுறித்து ஆம்புலன்ஸ் டிரைவர் சுப்ரமணியன் கூறுகையில், ''ஒரு உயிரை காப்பாற்ற வேண்டும் என்பதற்காக ஆம்புலன்ஸை மிகவும் கவனமாக ஓட்டினேன்.
சூழ்நிலையை புரிந்து கொண்டு, ஆம்புலன்ஸ் விரைவாக செல்ல பொதுமக்களும் ஒத்துழைப்பு வழங்கினர். போலீசாரும் தங்கள் பங்கிற்கு போக்குவரத்தை திறம்பட கையாண்டனர்'' என்றார். ஆம்புலன்ஸ் போன்ற அவசரகால வாகனங்கள் விரைவாக செல்வதற்கு உதவி செய்வது என்பது அனைவரின் கடமை என்பதை மனதில் கொள்ள வேண்டும்.
இதனால் வேகமாக செல்லும் ஆம்புலன்ஸ்களுக்கு எக்காரணத்தை கொண்டும் இடையூறு ஏற்படுத்த கூடாது. ஆனாலும் ஒரு சிலர் உரிய விழிப்புணர்வு இல்லாமல், அவசர கால வாகனங்களுக்கு இடையூறு ஏற்படுத்தி கொண்டுதான் உள்ளனர். அத்தகைய நபர்கள் மீது தற்போது போலீசார் கடும் நடவடிக்கையை எடுத்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
ஸ்விஃப்ட் காரை வாங்க ஆள் இல்லனு நெனைக்கறவங்க வேடிக்கைய மட்டும் பாருங்க... சபதம் எடுத்த மாருதி சுஸுகி...
-
குடும்பத்தோட போறதுக்கு சூப்பர் கார்! ஆஃபரும் அள்ளி குடுக்குறாங்க! ஆனால் சேல்ஸ் சுத்தமா இல்லை ஏன் தெரியுமா
-
ரிமோட் சாவியுடன் யமஹா ஸ்கூட்டர் அறிமுகம்.. வெறும் 3 ஆயிரம் ரூபாதான் அதிகமா!.. ஆக்டிவா பொழப்புல மண்ணை போடதான்!