Just In
- 18 min ago டிவிஎஸ் அப்பாச்சி பைக்கை வாங்குபவர்களின் எண்ணிக்கை குறையுது!! காரணம் என்னவா இருக்கும்?
- 26 min ago மாருதி, டாடா, ஹூண்டாய் நிறுவனங்களை ஒரு கை பார்க்க வரும் நிஸான் கார்... போட்டி அனல் பறக்க போகுது...
- 1 hr ago இந்த காரை எல்லாம் நாம கண்ணால நேர்ல பார்த்தாலே அது நம்ம செஞ்ச புண்ணியம் தான்! காரோட ரேட் அப்படி!
- 1 hr ago 5 வருஷத்துக்கு எந்தவொரு பிரச்சனையும் இல்லாமல் ஓட்டலாம்!! வாரண்டியை வாரி வழங்கும் இவி நிறுவனம்!
Don't Miss!
- Sports வாழ்க்கைன்னா ஒரு சில அடிகள் விழத்தான் செய்யும்.. எல்லா போட்டியிலும் வெல்ல முடியாது.. பாட் கம்மின்ஸ்
- News சிறையில் கணவர்.. இடைத்தேர்தலில் களமிறங்கும் ஜார்கண்ட் Ex முதல்வர் ஹேமந்த் சோரனின் மனைவி கல்பனா
- Lifestyle 100 ஆண்டுகளுக்கு பின் உருவாகியுள்ள திரிகிரக யோகம்: அடுத்த 5 நாட்கள் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டமா இருக்கும்..
- Movies Actor Dhanush: ஜூலை மாதத்திற்கு தள்ளிப்போகும் தனுஷின் ராயன் பட ரிலீஸ்.. கமல்தான் காரணமா?
- Technology BSNL தான்யா டாப்பு.. Jio-வுக்கும் Airtel-லுக்கும் ஆப்பு.. 200 ரூபாய்க்குள் 70 நாள் வேலிடிட்டி.. எந்த திட்டம்?
- Finance 6 மாதங்களில் 73% வளர்ச்சி.. ஜியோ ஃபைனான்சியல் சர்வீசஸ் பங்குகள் அள்ளிக் கொடுத்த லாபம்..!
- Travel இந்தியாவில் உள்ள புனிதமான காடுகள் – வாழ்வில் ஒரு முறையேனும் இந்த காடுகளுக்கு செல்ல வேண்டும்!
- Education சென்னை ஏர்போர்ட்டில் பணிபுரிய ஆசையா...!
அடக்கடவுளே... மழைக்காக டோல்கேட்டில் ஒதுங்கியவருக்கு நேர்ந்த கதி... என்னனு தெரிஞ்சா கடுப்பாயிருவீங்க
திண்டுக்கல் அருகே இரு சக்கர வாகன ஓட்டியை சுங்கசாவடி ஊழியர்கள் தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தேசிய நெடுஞ்சாலைகளில் அமைக்கப்பட்டுள்ள சுங்கசாவடிகள் என்றாலே, ஓட்டுனர்களுக்கும், வாகன உரிமையாளர்களுக்கும் அலர்ஜிதான். சுங்கசாவடிகளில் அடிப்படை வசதிகள் எதுவும் செய்து தராமல் கட்டண கொள்ளை நடைபெறுவதாக ஓட்டுனர்களும், வாகன உரிமையாளர்களும் நீண்ட காலமாக புகார் தெரிவித்து வருகின்றனர்.
அத்துடன் சுங்கசாவடிகளில் விதிமுறைகளை மீறி கட்டணம் வசூல் செய்யப்படுவதாகவும் நீண்ட காலமாக புகார்கள் இருந்து வருகின்றன. எனவே வேண்டா வெறுப்பாகதான் சுங்கசாவடிகளில் ஓட்டுனர்களும், வாகன உரிமையாளர்களும் கட்டணம் செலுத்தி செல்கின்றனர். சுங்கசாவடிகளில் காத்திருக்கும் நேரமும் வாகன ஓட்டிகளுக்கு அதிருப்தியை ஏற்படுத்துகிறது.
பாஸ்ட்டேக் வருகைக்கு பின் காத்திருக்கும் நேரம் குறையும் என பரவலாக எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அதன்பின்னரும் காத்திருக்க வேண்டிய சூழல் ஏற்படுவதாக கொரோனா வைரஸ் ஊரடங்கு அமலுக்கு வரும் முன் வாகன ஓட்டிகள் புகார் தெரிவித்து கொண்டே இருந்தனர். ஆனால் ஊரடங்கு அமலுக்கு வந்த பின்னர் தேசிய நெடுஞ்சாலைகளில் வாகன போக்குவரத்து கடுமையாக குறைந்தது.
இதன் காரணமாக சுங்கசாவடிகளும் வெறிச்சோடின. எனினும் தற்போது ஊரடங்கு தளர்வுகளுக்கு பின் வாகன போக்குவரத்து கொஞ்சம் கொஞ்சமாக இயல்பு நிலைக்கு திரும்பி வருகிறது. இதன் காரணமாக மீண்டும் சுங்கசாவடிகளில் காத்திருக்க வேண்டிய சூழல் ஏற்படுவதாக ஒரு சில வாகன ஓட்டிகள் புலம்பி வருகின்றனர்.
இப்படி பல்வேறு அதிருப்திகளுக்கு மத்தியில் கட்டணம் செலுத்தும் வாகன ஓட்டிகள், சுங்கசாவடிகளில் நடைபெறும் அத்துமீறல்களை தட்டி கேட்டால், குண்டர்கள் மூலம் தாக்கப்படுவதாகவும் நீண்ட காலமாக உள்ளது. தற்போது அவ்வாறான சம்பவங்கள் தொடர்ச்சியாக நிகழ தொடங்கியிருப்பது வாகன ஓட்டிகளை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
குறிப்பாக திண்டுக்கல் அருகே உள்ள கொடை ரோடு சுங்கசாவடியில், அதன் ஊழியர்கள், வாகன ஓட்டிகளை தாக்குவதாக தற்போது புகார்கள் எழுந்துள்ளன. கடந்த ஒரு சில நாட்களுக்கு முன்னர், கட்டணம் செலுத்துவது தொடர்பாக வாகன ஓட்டி ஒருவரை கொடை ரோடு சுங்கசாவடி ஊழியர்கள் தாக்க முயன்றதாக தகவல்கள் வெளிவந்தன.
இந்த பரபரப்பு அடங்குவதற்குள் தற்போது அதே சுங்கசாவடியில் மற்றொரு நிகழ்வு அரங்கேறியுள்ளது. தற்போது தமிழகம் முழுவதும் ஆங்காங்கே பரவலாக மழை பெய்து வருகிறது. இதன்படி கனமழை பெய்த காரணத்தால், இரு சக்கர வாகன ஓட்டி ஒருவர் கொடை ரோடு சுங்கசாவடியில் ஒதுங்கியதாக கூறப்படுகிறது. அப்போது அவரை சுங்கசாவடி ஊழியர்கள் தாக்கியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதுகுறித்து நியூஸ் 7 தமிழ் செய்தி வெளியிட்டுள்ளது. மழைக்காக ஒதுங்கிய இரு சக்கர வாகன ஓட்டியை சுங்கசாவடி ஊழியர்கள் தாக்கிய சம்பவம் வாகன ஓட்டிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆனால் இந்த விவகாரத்தில் மேற்கொண்டு எந்த தகவல்களும் வெளியாகவில்லை. எனவே இதுகுறித்து காவல் துறை விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் வலியுறுத்தியுள்ளனர்.
Note: Toll Plaza Images used are for representational purpose only.
-
இந்த ஒரு காருக்கு மட்டும் எப்படி இவ்வளவு சேல்ஸ் குவியுது? நிஸான் இப்போதைக்கு இந்தியாவை விட்டு போகாது!!
-
7 பேர் போற கார் இவ்ளோ மைலேஜ் குடுக்குமா! விலை அதை விட ஆச்சரியம்! எவ்ளோனு தெரிஞ்சா அடுத்த நிமிஷமே வாங்கீருவீங்க
-
20கிலோ அரிசி மூட்டையை 4ஏத்திகிட்டு நீங்களும் அமர்ந்து போகலாம்! டெலிவரி சேவைக்கான சூப்பரான இ-சைக்கிள் அறிமுகம்!