டாடா நிறுவனத்திற்குக் கிடைத்த செம ஆர்டர்... இந்த வாய்ப்பு வேற யாருக்குமே கிடைக்கல...
டாடா மோட்டார்ஸ் நிறுவனம் ஜம்மு, ஸ்ரீநகர் பகுதியில் எலெக்ட்ரிக் பஸ்களை இயக்கும் ஆர்டர்களை பெற்றுள்ளது. இது குறித்த விரிவான தகவல்களைக் காணலாம் வாருங்கள்.

இந்தியாவில் சமீப காலமாக பொது போக்குவரத்தில் எலெக்ட்ரிக் வாகனங்களை இணைக்கும் பணி நடந்து வருகிறது. பல மாநில அரசுகள் இதற்காக வாகன தயாரிப்பு நிறுவனங்களுடன் கூட்டு வைத்து எலெக்ட்ரிக் வாகனங்களை இயக்க பல முன்னெடுப்புகளைச் செய்து வருகின்றன.

இந்நிலையில் ஜம்மு காஷ்மீர் பகுதியில் தற்போது எலெக்ட்ரிக் பஸ்களை இயக்கும் ஆர்டரை தற்போது டாடா மோட்டாஸ் நிறுவனம் பெற்றுள்ளது. இது டாடா மோட்டார் நிறுவனத்திற்குக் கிடைத்த மிகப்பெரிய ஆர்டர் ஆகும்.

ஜம்மு காஷ்மீர் தற்போது யூனியன் பிரதேசமாகப் பிரிக்கப்பட்டுள்ள நிலையில் ஜம்மு மற்றும் ஸ்ரீநகர் பகுதியில் எலெக்ட்ரிக் பஸ்களை இயக்க வைக்க அம்மாநில அரசு முடிவு செய்துள்ளது. இதனால் சுற்றுச்சூழல் மாசு குறையும் என்பதால் இந்த முடிவை அரசு எடுத்துள்ளது.

இதையடுத்து அந்த யூனியன் பிரதேச அரசின் தலைமைச் செயலாளர் அருண் குமார் மேத்தா அந்த பகுதியில் 200 எலெக்டரிக் பஸ்களை இயக்க டாடா மோட்டார் மற்றும் சலோ மொபிலிட்டி பிரைவேட் லிமிடெட் ஆகிய நிறுவனங்களுடன் ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது.

இந்த நிகழ்வில் பேசிய தலைமைச் செயலாளர், ஜம்மு,ஸ்ரீநகர் பகுதியில் மாசு இல்லா பொது போக்குவரத்தை ஏற்படுத்தவும், பயணிகளுக்கு வித்தியாசமான அனுபவத்தை வழங்கவும், நகருக்குள் மார்டன் தொழினுட்பத்தைக் கொண்டு வரும் நோக்கித்தான் இந்த ஒப்ப்ந்தம்கையெழுத்திடப்பட்டுள்ளதாகவும், இந்த இரு நகரங்களிலும் உலகதரமான வசதிகளைக் கொண்டு வர அரசு தொடர்ந்து முயற்சிகளை மேற்கொள்ளும் எனவும் பேசினார்.

ஜம்மு காஷ்மீரில் விரைவில் செயல்பாட்டிற்கு வரவுள்ள 200 எலெக்ட்ரிக் பஸ்களில் ஒரு முக்கியமான வசதி கொண்டு வரப்படுகிறது. அதன்படி பஸ்சின் ரியல் டைம் டிராக்கின் வசதியை மக்கள் பெற முடியும். அதே நேரத்தில் பஸ் எந்த அளவிற்குக் கூட்டமாக இருக்கிறது என்கிறது தகவலையும் ரியல் டைமில் பெற முடியும். மேலும் இரு நிறுவனங்களுடனான ஒப்பந்தம் என்பது இந்த பஸ்களில் பேப்பர் இல்லாத டிக்கெட் முறையைக் கொண்டு வருவதற்காக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதனால் பேப்பர் செலவு முற்றிலும் மிச்சம். இது மட்டுமல்ல இந்த பஸ்சில் பேனிக் பட்டன், லோகேஷன் சிஸ்டம், சிசிடிவி, ஸ்டாப் ரெக்வொஸ்ட் சிஸ்டம், உள்ளிட்ட பல பாதுகாப்பு அம்சங்களும் இந்த பஸ்களில் இருக்கிறது. இந்த பஸ் சேவைக்காக முன்பே சொன்னதுபோல டாடா மோட்டார்ஸ் மற்றும் சலோ மொபிலிட்டி ஆகிய நிறுவனங்களுடன் ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. இரு நிறுவனங்களும் சேர்ந்து ஜம்மு ஸ்மார்ட் சிட்டி, ஸ்ரீ நகர் ஸ்மார்ட் சிட்டி ஆகிய பகுதிகளுக்கு தனித்தனியே பஸ் சேவைகளை இயங்கவிருக்கின்றன.

இதில் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் இந்த எலெக்டரிக் பஸ்கள், அதன் இயக்கம், மற்றும் பராமரிப்பு ஆகிய விஷயங்களை கவனித்துக்கொள்ளும். தற்போது உள்ள ஒப்பந்தப்படி 100 பஸ்கள் ஜம்மு விற்கும் 100 பஸ்கள் ஸ்ரீநகருக்குள்ளும் இயக்கப்படவுள்ளது.

இதில் சலோ மொபிலிட்டி நிறுவனம் இந்த பஸ்களுக்கான பயணிகள் தொழிற்நுட்ப விஷயங்களை வழங்கும். உதாரணமாக எலெக்ட்ரானிக் டிக்கெட் இஸ்யூயிங் மிஷின்கள், ஆட்டோமெட்டட் ஃபேஸ் கலெக்ஷன் சிஸ்டம், மொபைல் ஆப், மொபைல் டிக்கெட்கள், மொபைல் பாஸ்கள், ஸ்மார்ட் கார்டுகள், மற்றும் க்ளைடு பேஸ்டு ஹோஸ்டிங் ஆகிய விஷயங்களைச் செய்கிறது.

ஜம்மு ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் இந்த போக்குவரத்து வசதிக்கான டெண்டர் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த டெண்டரை டாடா நிறுவனம் பெற்றுள்ளது. ஏற்கனவே எலெக்டரிக் வாகன தயாரிப்பில் டாடா நிறுவனம் தான் முன்னணியில் இருக்கிறது. கார்கள் முதல் பஸ்கள் வரை பல எலெக்டரிக் வாகனங்களைத் தயாரித்துள்ளது. டாடா நிறுவனங்களின் தயாரிப்பும் தரமானதாக இருப்பதாக மக்கள் மத்தியில் நல்ல பெயர் கிடைத்துள்ளது.

இதே போல எலெக்டரிக் பஸ் வசதிகளைத் தமிழ்நாட்டிற்கும் கொண்டு வர வேண்டும் என மக்கள் பலர் கோரிக்கைகளை விடுத்துள்ளனர். சென்னை மட்டுமல்லாது, திருச்சி, சேலம், கோவை, மதுரை, திருநெல்வேலி ஆகிய நகரங்களிலும் இப்படியாக எலெக்ட்ரிக் பஸ் சேவையை அறிமுகப்படுத்துவது மூலம் பொது போக்குவரத்தில் மிகப்பெரிய மாற்றம் ஏற்படும் எனக் கூறப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications








