Just In
- 49 min ago 10-15நிமிஷத்துல சென்னையிலிருந்து பாண்டி போயிடலாம்.. இன்டிகோவின் தாய் நிறுவனம் கொண்டு வர இருக்கும் ஏர் டாக்சி!
- 3 hrs ago டாடாவின் இந்த கார் இவ்ளோ பாதுகாப்பானதா! ஷோரூம்களில் மக்கள் கூட்டம் அலைமோதுது! அதிர்ச்சியில் மாருதி சுஸுகி!
- 3 hrs ago மஹிந்திரா ஸ்கார்பியோ, பெயருக்கே காரை வாங்க கூட்டம் குவியுது!! டாடா நிறுவனத்தால் கிட்ட கூட நெருங்க முடியல!
- 3 hrs ago இப்ப மீட் பண்ணா தேர்தல்ல மோடி ஜெயிச்சிருவாரு! எலான் மஸ்க் - மோடி சந்திப்பு தள்ளி வைப்பு!
Don't Miss!
- Finance நரேந்திர மோடி ஆட்சி மீண்டும் பிடித்தால்.. முதல் வேலையாக 3 அரசு நிறுவன பங்குகளை விற்பது தான்..!
- Movies விரட்டி விட்ட விஷால்.. கடுப்பான பயில்வான் ரங்கநாதன்.. மனுவே நிரப்ப தெரியாது என மரண கலாய்!
- News ‛‛திமுக கண்ணில் வந்த தோல்வி பயம்’’.. வாக்காளர்கள் பெயர்களை நீக்கியது ஏன்? எல் முருகன் விமர்சனம்
- Technology 75 நாளுக்கு ஒரே ரீசார்ஜ்.. தினசரி டேட்டா.. அன்லிமிடெட் வாய்ஸ் கால் நன்மை.. ரூ.500 விலைக்குள் எந்த திட்டம்?
- Sports வன்மத்தை கக்கிட்டாரு.. தோனியை வம்புக்கு இழுத்த கவுதம் கம்பீர்.. கொந்தளிக்கும் சிஎஸ்கே ரசிகர்கள்!
- Lifestyle இந்தியாவின் டாப் 10 ஏழை மாநிலங்கள் என்னென்ன தெரியுமா? கடைசி இடத்துல இருக்கிறத பார்த்தா ஷாக் ஆகிடுவீங்க...!
- Travel நம்ம தர்மபுரியில் சுற்றிப் பார்க்க இவ்வளவு இடங்கள்?
- Education தினமும் 9 மணி நேரம் படித்து யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி பெற்ற லிந்தியா...!!
இது கார் அல்ல... கடவுள்! டிரைவரின் அசட்டுதனத்தால் நடந்த சம்பவம்... உயிரை காப்பாற்றிய டாடா தயாரிப்பு
டிரைவரின் அலட்சியத்தால் நடைபெற்ற கொடூரமான விபத்து ஒன்றில் இருந்து, அவரின் உயிரை டாடா கார் காப்பாற்றியுள்ளது.
உலகிலேயே சாலை விபத்துக்களால் அதிக உயிரிழப்புகளை சந்தித்து வரும் நாடுகளில் ஒன்றாக இந்தியா உள்ளது. இங்கு ஒரு ஆண்டுக்கு மட்டும் சுமார் 1.50 லட்சம் பேர் சாலை விபத்துக்களால் உயிரிழந்து வருகின்றனர். இதற்கு பெரும்பாலான வாகன ஓட்டிகள் போக்குவரத்து விதிமுறைகளை மீறுவதே முக்கியமான காரணமாக உள்ளது.
அதே சமயம் விபத்துக்களில் உயிரிழப்புகளை தவிர்க்க வேண்டுமென்றால், வாகனங்கள் பாதுகாப்பானதாக இருப்பது மிகவும் அவசியம். அப்படிப்பட்ட வாகனங்களை இந்தியாவின் டாடா மோட்டார்ஸ் தயாரித்து வருகிறது. டாடா நிறுவனத்தின் கார்களில், நெக்ஸான் மிகவும் பாதுகாப்பான வாகனங்களில் ஒன்றாக உள்ளது.
குளோபல் என்சிஏபி க்ராஷ் டெஸ்ட்டில் 5 ஸ்டார் பாதுகாப்பு ரேட்டிங்கை பெற்ற முதல் மேட் இன் இந்தியா கார் டாடா நெக்ஸான்தான். இதன் மூலம் சர்வதேச அரங்கில் இந்தியாவிற்கு பெருமை தேடி தந்த கார்களில் ஒன்றாகவும் டாடா நெக்ஸான் திகழ்கிறது. இது சப்-4 மீட்டர் காம்பேக்ட் எஸ்யூவி ரக கார் ஆகும். மிக சிறப்பான கட்டுமான தரத்தை டாடா நெக்ஸான் கொண்டுள்ளது.
இதன் மூலம் விபத்துக்களில் இருந்து பல முறை பயணிகளின் உயிரை டாடா நெக்ஸான் காப்பாற்றியுள்ளது. இதுகுறித்த செய்திகள் அவ்வப்போது வெளியாகி அனைவரின் கவனத்தையும் ஈர்த்து வருகின்றன. இந்த வரிசையில் தற்போதும் ஒரு கொடூரமான விபத்தில் இருந்து பயணியின் உயிரை டாடா நெக்ஸான் காப்பாற்றியுள்ளது.
கடவுளின் சொந்த தேசமான கேரளாவில் இந்த கோர விபத்து நடைபெற்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சம்பவத்தன்று டாடா நெக்ஸான் காரை அதன் டிரைவர் அதிவேகத்தில் ஓட்டி சென்றதாக கூறப்படுகிறது. அப்போது சாலை ஈரமாக வேறு இருந்துள்ளது. இதனால் டிரைவர் திடீரென கட்டுப்பாட்டை இழந்து விட, சாலையில் கார் தலைகீழாக கவிழ்ந்துள்ளது.
இதன் உச்சகட்டம் என்னவென்றால், இன்ஜின் பே-வில் இருந்து இன்ஜின் எப்படியோ கழன்று சென்று, காரில் இருந்து குறிப்பிட்ட தொலைவில் விழுந்துள்ளது. இதன் மூலம் விபத்தின் தீவிரத்தை புரிந்து கொள்ளலாம். எனினும் அதன் ஒரே பயணியான டிரைவரின் உயிரை டாடா நெக்ஸான் காப்பாற்றியுள்ளது. விபத்து நடைபெற்ற சமயத்தில் டிரைவர் மட்டுமே காரில் இருந்தார்.
அவரது உயிருக்கு ஆபத்து இல்லையென்றாலும், தோள்பட்டையில் காயம் ஏற்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. டாடா நெக்ஸான் கார் இதற்கு முன்பாகவும் இதுபோல் பல விபத்துக்களில் இருந்து பயணிகளின் உயிரை காப்பாற்றியுள்ளது. இந்த வரிசையில் தற்போது நடைபெற்றுள்ள விபத்து, டாடா நெக்ஸான் காரின் மிக சிறப்பான கட்டுமான தரத்தை உறுதி செய்வதாக உள்ளது.
இந்த சம்பவம் குறித்து காடிவாடி தளம் செய்தி வெளியிட்டுள்ளது. டாடா மோட்டார்ஸ் நிறுவனம் நெக்ஸான் காரில் ஏராளமான பாதுகாப்பு வசதிகளை வழங்கியுள்ளது. இவை அனைத்தும் காருக்குள் இருக்கும் பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்கின்றன. ஆனால் இதுபோன்ற விபத்துக்களை தவிர்ப்பது சுலபம்தான்.
வானிலை மோசமாகவும், சாலை மிகவும் ஈரப்பதமாகவும் இருந்த நிலையில் டிரைவர் அதிவேகத்தில் காரை ஓட்டியதே இந்த விபத்திற்கு காரணமாக கூறப்படுகிறது. போக்குவரத்து விதிமுறைகளை முறையாக பின்பற்றுவதன் மூலமும், கூடுதல் எச்சரிக்கையுடன் காரை ஓட்டுவதன் மூலமும், இது போன்ற விபத்துக்களை தவிர்க்க முடியும்.
Image Courtesy: Amul Naik/Rushlane Crashlane
குறிப்பாக வானிலை சாதகமாக இல்லாத சமயங்களில் காரை ஓட்டும்போது கூடுதல் கவனத்துடன் இருப்பது அவசியம். டாடா நெக்ஸான் போலவே, டாடா அல்ட்ராஸ் மற்றும் மஹிந்திரா எக்ஸ்யூவி300 ஆகிய கார்களும் மிகவும் பாதுகாப்பானவை என்பது குறிப்பிடத்தக்கது. டாடா நெக்ஸானை தொடர்ந்து, இந்த 2 கார்களும் குளோபல் என்சிஏபி அமைப்பிடம் இருந்து 5 ஸ்டார் பாதுகாப்பு ரேட்டிங்கை பெற்றுள்ளன.
-
100 சதவீதம் வாக்குப்பதிவு கேட்கும் அரசு இதையெல்லாம் கவனிக்க மாட்டாங்களா? விமானங்களின் டிக்கெட் விலை உயர்வு!
-
பெட்டிகடை வச்சிருக்கிறவன் கூட கணக்கு வச்சிருப்பான்! ஆனா இந்திய ரயில்வே நிர்வாகத்திடம் இந்த கணக்கு இல்லையாம்!
-
இந்த 3 கார்களை தான் மக்கள் மாத்தி, மாத்தி வாங்குறாங்க!! டாடா லிஸ்ட்டிலேயே இல்ல...