Just In
- 29 min ago டீ கடை பிசினஸை விட்டு தள்ளுங்க.. ரயில்வே ஸ்டேஷன்ல தண்ணி கட போட்டாலே கோடி கணக்குல சம்பாதிக்கலாம்..
- 3 hrs ago அரபு நாடுகளுக்கு ஆப்பு வைக்கும் இந்தியா... அவங்க பொழப்புல மொத்தமா மண்ணை அள்ளி போட்டுட்டாங்க...
- 4 hrs ago இன்னிக்கு அறிமுகமான இந்த கார் பத்தி நீங்க கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டிய 5 விஷயம் இதுதான்!
- 4 hrs ago புதிதாக விற்பனைக்கு வர இருக்கும் மஹிந்திரா காரு மைலேஜை இவ்ளோ தருமா! இதுக்கே எல்லாரும் அந்த காரை வாங்க போறாங்க!
Don't Miss!
- Lifestyle ஜப்பான் பெண்கள் நீண்ட காலம் இளமையாகவும், அழகாகவும் இருக்க இந்த 4 ரகசிய உணவுகள்தான் காரணமாம்...!
- News ‛‛ஜெய் ஸ்ரீராம்’’ எழுதினாலே பாஸ் மார்க்.. ஹேப்பியான மாணவர்கள்.. உபியில் ஆசிரியர் செய்ததை பாருங்க
- Sports 4 பந்துகளில் 4 சிக்ஸ்.. டி வில்லியர்ஸ் சாதனையை முறியடித்த பட்டிதர்.. 19 பந்துகளில் மிரட்டல் அரைசதம்!
- Movies Pa Vijay: ஒரேயொரு சூரியன் மாதிரி.. ஒரேயொரு அப்படிபோடு பாடல்.. பா. விஜய் உற்சாகம்!
- Technology BSNL தான்யா டாப்பு.. Jio-வுக்கும் Airtel-லுக்கும் ஆப்பு.. 200 ரூபாய்க்குள் 70 நாள் வேலிடிட்டி.. எந்த திட்டம்?
- Finance 6 மாதங்களில் 73% வளர்ச்சி.. ஜியோ ஃபைனான்சியல் சர்வீசஸ் பங்குகள் அள்ளிக் கொடுத்த லாபம்..!
- Travel இந்தியாவில் உள்ள புனிதமான காடுகள் – வாழ்வில் ஒரு முறையேனும் இந்த காடுகளுக்கு செல்ல வேண்டும்!
- Education சென்னை ஏர்போர்ட்டில் பணிபுரிய ஆசையா...!
உள்ளூர் பொருட்களுக்கு குரல் கொடுப்போம்... குடியரசு தின விழாவில் கெத்து காட்டிய டாடா நெக்ஸான் எலெக்ட்ரிக் கார்
குடியரசு தின விழா அணிவகுப்பில், டாடா நெக்ஸான் எலெக்ட்ரிக் எஸ்யூவி கார் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.
இந்தியாவின் குடியரசு தினம் நேற்று (ஜனவரி 26) கோலாகலமாக கொண்டாடப்பட்டது. டெல்லி செங்கோட்டையில் நடைபெற்ற இதற்கான விழாவில், இந்தியாவின் முக்கிய பிரமுகர்கள் பலர் கலந்து கொண்டனர். விவசாயிகள் போராட்டம், கொரோனா அச்சுறுத்தல் ஆகிய பிரச்னைகளுக்கு மத்தியில் பல்வேறு கட்டுப்பாடுகளுடன் குடியரசு தின விழா கொண்டாடப்பட்டது.
டாடா நெக்ஸான் எலெக்ட்ரிக் எஸ்யூவி காரும் இந்த விழாவின் ஒரு பகுதியாக இருந்துள்ளது. ஆம், குடியரசு தின விழாவின் கண்கவர் அணிவகுப்பில் டாடா நெக்ஸான் எலெக்ட்ரிக் எஸ்யூவி காரும் பங்கேற்றுள்ளது. டாடா நெக்ஸான் எலெக்ட்ரிக் எஸ்யூவி கார் அணிவகுப்பில் பங்கேற்றதை கீழே உள்ள வீடியோவில் நீங்கள் பார்க்கலாம்.
குடியரசு தின விழா அணிவகுப்பில் பங்கேற்ற மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு துறை அமைச்சகத்தின் வாகனத்தில், டாடா நெக்ஸான் எலெக்ட்ரிக் எஸ்யூவி கார் வைக்கப்பட்டிருந்தது. 'உள்ளூர் பொருட்களுக்கு குரல் கொடுப்போம்' என்ற மத்திய அரசின் திட்டம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையிலும், அந்த திட்டத்தை ஊக்குவிக்கும் வகையிலும் டாடா நெக்ஸான் எலெக்ட்ரிக் எஸ்யூவி பவனி வந்தது.
டாடா நெக்ஸான் எலெக்ட்ரிக் எஸ்யூவி 'மேட் இன் இந்தியா' தயாரிப்பு ஆகும். இந்தியாவை சேர்ந்த டாடா மோட்டார்ஸ் நிறுவனம் நெக்ஸான் எலெக்ட்ரிக் எஸ்யூவி கார்களை உற்பத்தி செய்து வருகிறது. தற்போதைய நிலையில் இந்தியாவில் அதிகம் விற்பனையாகி கொண்டுள்ள எலெக்ட்ரிக் காராக டாடா நெக்ஸான் எலெக்ட்ரிக் எஸ்யூவி திகழ்கிறது.
கடந்த 2020ம் ஆண்டு ஜனவரி மாதம் நெக்ஸான் எலெக்ட்ரிக் எஸ்யூவி காரை டாடா மோட்டார்ஸ் நிறுவனம் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்தது. ஏற்கனவே விற்பனையில் உள்ள ஐசி இன்ஜின் பொருத்தப்பட்ட டாடா நெக்ஸான் காம்பேக்ட் எஸ்யூவி காரின் எலெக்ட்ரிக் வெர்ஷன்தான் இது என்பது குறிப்பிடத்தக்கது.
மிகவும் சவாலான விலையில், நடைமுறை பயன்பாட்டிற்கு ஏற்ற வகையில் விற்பனைக்கு வந்த காரணத்தால், இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் டாடா நெக்ஸான் எலெக்ட்ரிக் எஸ்யூவி காருக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. அத்துடன் இந்திய சந்தையில் தற்போதைய நிலையில் டாடா நெக்ஸான் எலெக்ட்ரிக் எஸ்யூவி காருக்கு நேரடி போட்டியாக எந்த மாடலும் இல்லை.
ஹூண்டாய் கோனா மற்றும் எம்ஜி இஸட்எஸ் எலெக்ட்ரிக் எஸ்யூவி கார்களுக்கு டாடா நெக்ஸான் எலெக்ட்ரிக் எஸ்யூவி விற்பனையில் சவால் அளித்தாலும், அவை நேரடி போட்டி கிடையாது. ஆனால் மஹிந்திரா எக்ஸ்யூவி300 எலெக்ட்ரிக் எஸ்யூவி விற்பனைக்கு வந்த பின், டாடா நெக்ஸான் எலெக்ட்ரிக் எஸ்யூவி காருக்கு நேரடி போட்டியாக இருக்கும்.
டாடா நிறுவனத்தை போல், மஹிந்திரா நிறுவனமும் தனது ஐசி இன்ஜின் எக்ஸ்யூவி300 காம்பேக்ட் எஸ்யூவி காரின் எலெக்ட்ரிக் வெர்ஷனை இந்திய சந்தையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யவுள்ளது. மஹிந்திரா எக்ஸ்யூவி300 எலெக்ட்ரிக் எஸ்யூவி சாலை சோதனைகளுக்கு உட்படுத்தப்படும்போது கேமரா கண்களில் சிக்கியுள்ளது.
இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் ஆவலை தூண்டியுள்ள மஹிந்திரா எக்ஸ்யூவி300 எலெக்ட்ரிக் எஸ்யூவி நடப்பாண்டு விற்பனைக்கு வருவதற்கான வாய்ப்புகள் உள்ளன. புதிய தலைமுறை எக்ஸ்யூவி500 மற்றும் ஸ்கார்பியோ மாடல்களை களமிறக்கும் பணிகளில் தற்போது மஹிந்திரா நிறுவனம் தீவிரமாக உள்ளது. இந்த 2 புதிய மாடல்களுக்கு பிறகு எக்ஸ்யூவி300 எலெக்ட்ரிக் எஸ்யூவி விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படலாம்.
-
7 பேர் போற கார் இவ்ளோ மைலேஜ் குடுக்குமா! விலை அதை விட ஆச்சரியம்! எவ்ளோனு தெரிஞ்சா அடுத்த நிமிஷமே வாங்கீருவீங்க
-
ஓலா, ஏத்தர் எல்லாம் ஓரமா போ! ஆம்பியர் நிறுவனத்தின் புதிய இவி 30ம் தேதி வருது!
-
ராயல் என்பீல்டு, ஹோண்டா பைக்கை ஓட்டி ஓட்டி போரடிச்சு போச்சா.. இந்தியாவில் கால் தடம் பதிக்கிறது புதிய பிராண்டு!