Just In
- 18 min ago லியோ படத்தில் விஜய்யுடன் நடிச்சாரு, இப்போது விலையுயர்ந்த டொயோட்டா காரில்!! கேரள நடிகையின் புது கார்!
- 2 hrs ago போன தடவ சிவப்பு நிற சைக்கிள்.. இந்த முறை இன்னோவா கார்.. இந்த கார் வாயிலாக அவர் என்ன சொல்லியிருக்கார்?
- 3 hrs ago ஹெல்மெட் போடாமல் பைக்கில் போன விஜய் சேதுபதி! ஓட்டு போட வந்த இடத்தில் மானமே போச்சு!
- 4 hrs ago நடிகர் தனுஷ் ஓட்டு போட வந்த காரின் விலை என்ன தெரியுமா? இவ்வளவு காஸ்ட்லியான காரா இது?
Don't Miss!
- Movies அட்டகாசமாக ஆரம்பித்த எம் டிவியின் ஸ்ப்ளிட்ஸ்வில்லா எக்ஸ் 5: எக்ஸ்க்யூஸ் மீ ப்ளீஸ்.. செம ட்விஸ்ட்!
- Finance விப்ரோ: அசிம் பிரேம்ஜி, ரிஷாத் பிரேம்ஜி-க்கு மீண்டும் முக்கிய பதவி.. அடுத்த 5 வருடத்திற்கு அசைக்க முடியாது.
- News சென்னையை விடுங்க! சர்ரென முன்னேறிய தூத்துக்குடி, பெரம்பலூர், ராணிப்பேட்டை! உலகமே திரும்பி பார்க்குதே
- Lifestyle 1 கப் பச்சரிசி மாவு வெச்சு.. இப்படியொரு ஸ்நாக்ஸ் செய்யுங்க.. ஒரு வாரத்துக்கு ஸ்நாக்ஸ் பிரச்சனையே வராது..
- Travel இங்க போறது கொஞ்ச கஷ்டம் தான் – ஆனா வொர்த்! அப்படி ஒரு இயற்கை அழகுகுங்க
- Sports "பிரேக் அப் பண்ணப் போறாங்க" அழகான பெண்ணை பார்த்து வாயை பிளந்த சுப்மன் கில்.. வெளியான வீடியோ
- Technology பொளந்து கட்டுது சேல்.. ரூ.20499 பட்ஜெட்ல 108MP கேமரா.. 3D டிஸ்பிளே.. 5800mAh பேட்டரி.. எந்த மாடல்?
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
டாடா டாடாதான்யா! ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்லாத இந்தியர்களுக்கும் பரிசு! என்னனு தெரிஞ்சா இன்னும் அசந்திருவீங்க!
ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்லாத இந்திய வீரர்களுக்கும் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தற்போது பரிசு அறிவித்துள்ளது. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.
டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில், நூலிழையில் வெண்கல பதக்கத்தை தவற விட்ட இந்திய விளையாட்டு வீரர்கள் அனைவருக்கும் அல்ட்ராஸ் கார் பரிசாக வழங்கப்படும் என டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தற்போது அதிரடியாக அறிவித்துள்ளது. டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் இந்த அறிவிப்பிற்கு தற்போது பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.
இந்தியாவை சேர்ந்த இளைஞர்களுக்கு இந்த வீரர்கள் ரோல் மாடலாக இருப்பதாக டாடா மோட்டார்ஸ் நிறுவனம் பத்திரிக்கை செய்தியில் தெரிவித்துள்ளது. இதுகுறித்து டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் பத்திரிக்கை செய்தியில் கூறப்பட்டுள்ளதாவது: இந்த வீரர்களின் கடின உழைப்பு மற்றும் அர்ப்பணிப்பு உணர்வை அங்கீகரிக்கும் வகையிலும், நன்றி செலுத்தும் வகையிலும் இந்த முடிவை எடுத்துள்ளோம்.
இந்த வீரர்களுக்கு டாடா அல்ட்ராஸ் கார் விரைவில் வழங்கப்படும். இவ்வாறு அந்த பத்திரிக்கை செய்தியில் கூறப்பட்டுள்ளது. இந்த வீரர்கள் நூலிழையில் பதக்கத்தை தவற விட்டாலும், கோடிக்கணக்கான இந்தியர்களின் மனதையும் வென்றுள்ளனர். எனவே அவர்களை ஊக்குவிக்கும் வகையில் டாடா மோட்டார்ஸ் எடுத்துள்ள இந்த முடிவு பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
பொதுவாக விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்குதான் கார் போன்ற பரிசுகள் வழங்கப்படும். டோக்கியோ ஒலிம்பிக் ஈட்டி எறிதல் போட்டியில் தங்க பதக்கம் வென்று இந்தியாவிற்கு பெருமை தேடி தந்த நீரஜ் சோப்ராவிற்கு, விரைவில் விற்பனைக்கு வரவுள்ள மஹிந்திரா எக்ஸ்யூவி700 கார் பரிசாக வழங்கப்படவுள்ளது.
மஹிந்திரா குழுமத்தின் தலைவர் ஆனந்த் மஹிந்திரா இந்த அறிவிப்பை சமீபத்தில் வெளியிட்டார். ஆனால் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் போட்டியில் நூலிழையில் தோல்வியடைந்தவர்களையும் ஊக்குவிக்கும் வகையில் வித்தியாசமான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பு அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.
வீரர்களுக்கு பரிசாக வழங்கப்படவுள்ள டாடா அல்ட்ராஸ் கார், பிரீமியம் ஹேட்ச்பேக் ரகத்தை சேர்ந்தது ஆகும். இந்திய சந்தையில் மாருதி சுஸுகி பலேனோ, டொயோட்டா க்ளான்சா, ஹூண்டாய் ஐ20 உள்ளிட்ட கார்களுடன் டாடா அல்ட்ராஸ் போட்டியிட்டு வருகிறது. தற்போது ஒவ்வொரு மாதமும் மிக சிறப்பான விற்பனை எண்ணிக்கையை டாடா அல்ட்ராஸ் பதிவு செய்து வருகிறது.
இதற்கு அந்த காரின் டிசைன், செயல்திறன் மற்றும் பாதுகாப்பு ஆகியவையே காரணம். குறிப்பாக பாதுகாப்புதான் மிக முக்கியமான காரணமாக பார்க்கப்படுகிறது. இந்த செக்மெண்ட்டிலேயே மிகவும் பாதுகாப்பான கார் என்றால் அது டாடா அல்ட்ராஸ்தான். பொதுவாக டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் கார்கள் மிகவும் பாதுகாப்பானவை என்பது நம் அனைவருக்கும் தெரியும்.
அந்த வகையில் டாடா அல்ட்ராஸ் காரும் பாதுகாப்பில் தலைசிறந்து விளங்குகிறது. குளோபல் என்சிஏபி மோதல் சோதனைகளில், டாடா அல்ட்ராஸ் பிரீமியம் ஹேட்ச்பேக் கார் 5 நட்சத்திர ரேட்டிங்கை பெற்றுள்ளது. டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தனது விளம்பரங்களில் இதனை பிரதானப்படுத்துகிறது. இதன் காரணமாகவே டாடா அல்ட்ராஸ் காரின் விற்பனை மிகவும் சிறப்பாக உள்ளது.
பாதுகாப்பு மட்டுமல்லாது, டிசைன் மற்றும் செயல்திறன் ஆகியவற்றிலும் நாங்கள் ஏற்கனவே கூறியபடி டாடா அல்ட்ராஸ் தலைசிறந்து விளங்குகிறது. இவை அனைத்தும் சேர்ந்து பிரீமியம் ஹேட்ச்பேக் கார் வாங்கும் வாடிக்கையாளர்களின் முதன்மையான தேர்வுகளில் ஒன்றாக டாடா அல்ட்ராஸ் காரை மாற்றியுள்ளன.
வரும் மாதங்களில் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் அல்ட்ராஸ் காரின் எலெக்ட்ரிக் வெர்ஷனையும் இந்திய சந்தையில் விற்பனைக்கு கொண்டு வரவுள்ளது. டாடா மோட்டார்ஸ் நிறுவனம் ஏற்கனவே நெக்ஸான் காம்பேக்ட் எஸ்யூவி காரின் எலெக்ட்ரிக் வெர்ஷனை விற்பனை செய்து வருவது நம் அனைவருக்கும் தெரிந்த ஒரு விஷயம்தான்.
இந்த வரிசையில் வரும் மாதங்களில் விற்பனைக்கு வரவுள்ள டாடா அல்ட்ராஸ் காரின் எலெக்ட்ரிக் வெர்ஷனும் இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது. ஐசி இன்ஜின் பொருத்தப்பட்ட மாடலை போலவே, டாடா அல்ட்ராஸ் காரின் எலெக்ட்ரிக் வெர்ஷனும் இந்திய சந்தையில் விற்பனையில் அமர்க்களப்படுத்தும் என நாம் உறுதியாக எதிர்பார்க்கலாம்.
-
ரிமோட் சாவியுடன் யமஹா ஸ்கூட்டர் அறிமுகம்.. வெறும் 3 ஆயிரம் ரூபாதான் அதிகமா!.. ஆக்டிவா பொழப்புல மண்ணை போடதான்!
-
கோவையில் இருந்து கேரளாவுக்கு இந்த ரயில்ல போங்க.. எக்ஸ்பீரியன்ஸ் இன்னும் செம்மையா இருக்கும்! அப்படி என்ன ரயில்?
-
முதியவர்களுக்கு லோயர் பெர்த் கிடைக்க என்ன செய்யனும் தெரியுமா? சூப்பர் அட்வைஸ் சொன்ன ரயில்வே!