Just In
- 2 hrs ago அரபு நாடுகளுக்கு ஆப்பு வைக்கும் இந்தியா... அவங்க பொழப்புல மொத்தமா மண்ணை அள்ளி போட்டுட்டாங்க...
- 3 hrs ago இன்னிக்கு அறிமுகமான இந்த கார் பத்தி நீங்க கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டிய 5 விஷயம் இதுதான்!
- 3 hrs ago புதிதாக விற்பனைக்கு வர இருக்கும் மஹிந்திரா காரு மைலேஜை இவ்ளோ தருமா! இதுக்கே எல்லாரும் அந்த காரை வாங்க போறாங்க!
- 4 hrs ago ரோடு இல்லாத இடத்துக்கு கூட தைரியமா கொண்டு போகலாம்!! விலை மட்டும் கொஞ்சம் கம்மியா இருந்தால் எல்லாரும் வாங்கலாம்
Don't Miss!
- Sports IPL Classics - 2010 சீசன் அரையிறுதியில் CSK வென்றது எப்படி? பலம் வாய்ந்த டெக்கான் அணியுடம் மோதிய கதை
- Movies Actor Karthi: ஜூன் மாதத்தில் துவங்கும் சர்தார் 2 படத்தின் சூட்டிங்.. கதை என்ன தெரியுமா?
- News வேகும் வெயிலிலும்.. "வெறுப்புக்கு" ஓட்டு போடாதீர்கள் பதாகையுடன்.. தெரு தெருவாக சுற்றும் முதியவர்
- Technology BSNL தான்யா டாப்பு.. Jio-வுக்கும் Airtel-லுக்கும் ஆப்பு.. 200 ரூபாய்க்குள் 70 நாள் வேலிடிட்டி.. எந்த திட்டம்?
- Lifestyle கால்களில் இந்த அறிகுறிகள் தெரியுதா? அப்ப சிறுநீரக நோய் இருக்கு-ன்னு அர்த்தம்.. உஷார்...
- Finance 6 மாதங்களில் 73% வளர்ச்சி.. ஜியோ ஃபைனான்சியல் சர்வீசஸ் பங்குகள் அள்ளிக் கொடுத்த லாபம்..!
- Travel இந்தியாவில் உள்ள புனிதமான காடுகள் – வாழ்வில் ஒரு முறையேனும் இந்த காடுகளுக்கு செல்ல வேண்டும்!
- Education சென்னை ஏர்போர்ட்டில் பணிபுரிய ஆசையா...!
தெய்வம்யா நீங்க! பேஸ்புக், ட்விட்டரில் இருந்து தூக்கப்பட்ட ஊழியர்களுக்கு கடவுளாக மாறிய டாடா! உலகமே பாராட்டுது!
உலகம் முழுவதும் பல்வேறு நிறுவனங்கள் ஊழியர்களை திடீரென பணி நீக்கம் செய்ய தொடங்கியுள்ளன. அந்த ஊழியர்களுக்கு டாடா நிறுவனம் உதவிக்கரம் நீட்டியிருப்பது குறித்த தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.
முன்னணி சமூக வலை தள நிறுவனங்களும், பெரிய கார்ப்பரேட் கம்பெனிகளும் தற்போது ஊழியர்களை வேலையில் இருந்து நீக்கும் நடவடிக்கைகளில் இறங்கியுள்ளன. இதனால் உலகம் முழுவதும் ஆயிரக்கணக்கான ஊழியர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தின் எதிர்காலம் கேள்விக்குறியாகியுள்ளது.
மார்க் ஜூக்கர்பெர்க் (Mark Zuckerberg) தலைமையில் செயல்பட்டு வரும் மெட்டா (Meta) நிறுவனம் ஒட்டுமொத்தமாக 11 ஆயிரம் ஊழியர்களை வேலையில் இருந்து நீக்கியுள்ளது. இதுதான் ஃபேஸ்புக்கின் (Facebook) தாய் நிறுவனமாகும். மறுபக்கம் ட்விட்டர் (Twitter) நிறுவனமும் தற்போது திடீரென ஆட்குறைப்பு நடவடிக்கைகளில் இறங்கியுள்ளது. உலகின் பெரும் பணக்காரர்களில் ஒருவராக உள்ள எலான் மஸ்க் (Elon Musk) ட்விட்டர் நிறுவனத்தை வெகு சமீபத்தில் வாங்கினார்.
எலான் மஸ்க்கின் கைகளுக்கு ட்விட்டர் நிறுவனம் வந்த பிறகு, அந்த நிறுவனத்தில் இருந்து திடீரென 50 சதவீத ஊழியர்களை அவர் வேலையில் இருந்து நீக்கி விட்டதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. இதுதவிர இன்னும் உலகின் பல்வேறு முன்னணி நிறுவனங்களும் தற்போது ஆட்குறைப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. இதில், அமேசான் (Amazon), மைக்ரோசாஃப்ட் (Microsoft) மற்றும் ஜான்சன் & ஜான்சன் (Johnson & Johnson) போன்ற நிறுவனங்கள் குறிப்பிடத்தக்கவை ஆகும்.
ஆனால் இத்தகைய பெரிய நிறுவனங்களில் இருந்து பணி நீக்கம் செய்யப்படும் ஊழியர்களுக்கு இந்தியாவை (India) சேர்ந்த டாடா மோட்டார்ஸ் (Tata Motors) நிறுவனம் தற்போது உதவிக்கரம் நீட்டியுள்ளது. மெட்டா மற்றும் ட்விட்டர் போன்ற நிறுவனங்களில் இருந்து பணி நீக்கம் செய்யப்பட்டவர்களுக்கு தனது ஜாகுவார் லேண்ட் ரோவர் (Jaguar Land Rover) நிறுவனத்தில் வேலை வாய்ப்புகளை வழங்க டாடா மோட்டார்ஸ் நிறுவனம் முன்வந்துள்ளது.
ஜாகுவார் லேண்ட் ரோவர் இங்கிலாந்தை சேர்ந்த கார் தயாரிப்பு நிறுவனம் ஆகும். செயல்திறன் மிக்க சொகுசு கார்களை தயாரிப்பதில் ஜாகுவார் லேண்ட் ரோவர் உலகப்புகழ் பெற்றது. இப்படி பல்வேறு சிறப்புகள் வாய்ந்த ஜாகுவார் லேண்ட் ரோவர் நிறுவனம், இந்தியாவின் டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் ஒரு அங்கமாகதான் இயங்கி வருகிறது. இன்னும் தெளிவாக சொல்வதென்றால், டாடா மோட்டார்ஸ்தான், ஜாகுவார் லேண்ட் ரோவர் நிறுவனத்தின் தாய் நிறுவனம் ஆகும்.
அட்டானமஸ் டிரைவிங் (Autonomous Driving), செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence) போன்ற துறைகளில் வளர்ச்சி அடைவதற்கு ஜாகுவார் லேண்ட் ரோவர் விரும்புகிறது. இந்த வளர்ச்சிக்கு உதவுவதற்காக 800க்கும் மேற்பட்ட தொழில்நுட்ப வல்லுனர்களை பணியில் அமர்த்த உள்ளதாக ஜாகுவார் லேண்ட் ரோவர் தற்போது அறிவித்துள்ளது. ஜாகுவார் லேண்ட் ரோவர் நிறுவனத்தின் அடுத்த தலைமுறை எலெக்ட்ரிக் கார்களை (Electric Cars) தயாரிப்பதற்கு இவர்கள் உதவுவார்கள்.
இந்தியா, இங்கிலாந்து, அமெரிக்கா, அயர்லாந்து, ஹங்கேரி போன்ற நாடுகளில் புதிய தொழில்நுட்ப வல்லுனர்களை ஜாகுவார் லேண்ட் ரோவர் பணியமர்த்தவுள்ளது. ஒரு கதவு மூடினால், இன்னொரு கதவு திறக்கப்படும் என்ற பழமொழிக்கு ஏற்ப மெட்டா மற்றும் ட்விட்டர் போன்ற நிறுவனங்களில் இருந்து பணி நீக்கம் செய்யப்பட்டவர்களுக்கு டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் கதவுகள் திறந்துள்ளன. டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் இந்த நடவடிக்கைக்கு பாராட்டுக்கள் குவிய தொடங்கியுள்ளன.
-
21 வயசு பொண்ணுக்கு இப்படி ஒரு காரானு எல்லாரையும் புலம்ப வச்சுட்டாரு அவரோட அப்பா! பலரோட கனவு காருங்க இது!
-
ஓலா, ஏத்தர் எல்லாம் ஓரமா போ! ஆம்பியர் நிறுவனத்தின் புதிய இவி 30ம் தேதி வருது!
-
ராயல் என்பீல்டு, ஹோண்டா பைக்கை ஓட்டி ஓட்டி போரடிச்சு போச்சா.. இந்தியாவில் கால் தடம் பதிக்கிறது புதிய பிராண்டு!