Just In
- 46 min ago ராயல் என்பீல்டு, ஹோண்டா பைக்கை ஓட்டி ஓட்டி போரடிச்சு போச்சா.. இந்தியாவில் கால் தடம் பதிக்கிறது புதிய பிராண்டு!
- 2 hrs ago ரொம்ப பணம் எல்லாம் வேணாம், உங்க கையில் இருக்குற பணத்தை வச்சே இந்த காரை வாங்கலாம் போல!
- 3 hrs ago இவ்ளோ அழகா பிக்-அப் டிரக்கா! குடும்பத்தோட மட்டுமல்ல வீட்டையே காலி பண்ணி கொண்டு போலாம்!
- 3 hrs ago கியா களமிறக்கும் புது எலெக்ட்ரிக் காரின் விலை இவ்ளோதானா! பெட்டி கடைல கடலை மிட்டாய் விக்கற மாதிரி விக்க போகுது!
Don't Miss!
- News "டிட்டோ" கருணாநிதி.. கலைஞரை ஞாபகப்படுத்துகிறார் உதயநிதி.. இது புதிய மைல்கல்.. திமுகவுக்கு மகிழ்ச்சி
- Movies கடைசி கட்டம்.. வேட்டையன் சூட்டிங் எப்போ முடியுது தெரியுமா?.. கூலி படத்துக்கும் தேதி குறித்த ரஜினி!
- Technology வீட்டுக்கு 1 வாங்குவீங்க.. 8GB மெமரி.. 50W சினிமாட்டிக் சவுண்ட்.. இரண்டு 4K டிவிகளை அறிமுகம் செய்த VU..
- Finance அட்சய திருதியை-க்கு தங்க நகை வாங்கப் போறீங்களா.. இந்த தவறை மட்டும் செஞ்சிடாதீங்க!
- Sports இப்படி தான் சிக்சர் அடிக்கனும்.. இளம் அதிரடி வீரருக்கு சொல்லி கொடுத்த தோனி.. கவனித்த ஜடேஜா
- Lifestyle 1 கப் ரேசன் அரிசி வெச்சு ஈவ்னிங் டைம்-ல இப்படியொரு ஸ்நாக்ஸ் செய்யுங்க.. அட்டகாசமா இருக்கும்..
- Education புதுச்சேரியில் பிஎஸ்சி நர்சிங் படிப்பதற்கு நுழைவுத் தேர்வு...!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
ஆன்லைனில் படிக்கும் வசதி இல்லாதவர்களுக்காக ஆசிரியர் செய்த காரியம்... என்னனு தெரிஞ்சா அசந்திருவீங்க
ஆன்லைனில் படிக்கும் வசதி இல்லாத மாணவர்களுக்காக ஆசிரியர் செய்து வரும் நல்ல காரியத்திற்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.
ஷோரூமில் இருந்து டெலிவரி எடுத்து வரும் வாகனங்களை தங்கள் விருப்பத்திற்கு ஏற்ப மாற்றி கொள்ளும் வழக்கம் பலரிடமும் காணப்படுகிறது. உற்பத்தி நிறுவனங்கள் வழங்கும் டயர்களை மாற்றி விட்டு பெரிய டயர்களை பொருத்தி கொள்வது மற்றும் ஆஃப்டர் மார்க்கெட் சைலென்சர்கள் மூலம் மாடிஃபிகேஷன் செய்வது பலரும் தங்களுக்கு பிடித்த வகையில் மாறுதல்களை செய்கின்றனர்.
இந்த மாடிஃபிகேஷன்கள் வாகனத்தின் அழகை கூட்டுவதாகவோ அல்லது அதன் செயல்திறனை அதிகரிக்க செய்வதாகவோ இருக்கும். ஆனால் இங்கே ஆசிரியர் ஒருவர் தனது வாகனத்தை நடமாடும் வகுப்பறையாக மாற்றியுள்ளார். ஆன்லைன் மூலம் கல்வி பயில முடியாத மாணவர்களுக்காக இந்த ஏற்பாட்டை அவர் செய்திருப்பது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.
இந்தியாவில் கொரோனா வைரஸ் ஊரடங்கு அமலுக்கு வந்ததில் இருந்து மிக நீண்ட காலமாக பள்ளி மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன. எனவே ஆன்லைன் மூலமாக கல்வி கற்க வேண்டிய சூழலுக்கு மாணவர்கள் தள்ளப்பட்டுள்ளனர். செல்போன் மற்றும் லேப்டாப்கள் மூலம்தான் ஆசிரியர்கள் ஆன்லைன் வகுப்புகளை நடத்துகின்றனர்.
ஆனால் கிராமப்புறங்களை சேர்ந்த பலரால், செல்போன் மற்றும் லேப்டாப்களை தங்கள் குழந்தைகளுக்கு வாங்கி தர முடியாத சூழல் காணப்படுகிறது. இப்படிப்பட்ட மாணவர்களுக்காக, அவர்களின் ஊர்களுக்கே சென்று பாடம் நடத்தி வருகிறார் ஆசிரியர் ருத்ரா ராணா. ஆசிரியர் ருத்ரா ராணாவிடம் யமஹா மோட்டார்சைக்கிள் ஒன்று உள்ளது.
இந்த பைக்கைதான் அவர் நடமாடும் வகுப்பறையாக மாற்றியுள்ளார். மாணவர்களுக்கு பாடங்களை எழுதி கற்பிப்பதற்காக, ஆசிரியர் ருத்ரா ராணா இந்த பைக்கில் பலகை ஒன்றை பொருத்தியுள்ளார். அத்துடன் வெயில், மழை ஆகியவற்றை சமாளிப்பதற்காக குடை ஒன்றும் பொருத்தப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட கிராமத்திற்கு பைக்கில் சென்றதும் ருத்ரா ராணா மணியடித்து மாணவர்களை அழைக்கிறார்.
மணி சத்தம் கேட்டதும் மாணவர்கள் ஓடி வந்து அங்குள்ள திண்ணையில் அமர்ந்து கொள்கின்றனர். இதன் பின்னர் பைக்கில் பொருத்தப்பட்டுள்ள பலகை மூலம் தெருவிலேயே அவர் மாணவர்களுக்கு பாடம் நடத்துகிறார். சட்டீஸ்கர் மாநிலத்தில் உள்ள கோரியா பகுதியில்தான் ஆசிரியர் ருத்ரா ராணா மாணவர்களுக்கு இப்படி பாடம் நடத்தி வருகிறார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், ''மாணவர்களால் பள்ளிக்கு செல்ல முடியவில்லை என்பதால், அவர்களுடைய வீட்டு வாசலுக்கே நான் கல்வியை கொண்டு வருகிறேன். பல மாணவர்களுக்கு ஆன்லைனில் கல்வி பயிலும் வாய்ப்பு இல்லை. எனவே அவர்களுக்கு இது பயனுள்ளதாக இருக்கும்'' என்றார். இதற்காக ஆசிரியர் ருத்ரா ராணாவிற்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.
ஆனால் ஆசிரியர்கள் இப்படி அர்ப்பணிப்பு உணர்வுடன் செயல்படுவது இது முதல் முறையல்ல. கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஈரானை சேர்ந்த ஒரு ஆசிரியர் ஒரே ஒரு மாணவிக்கு பாடம் நடத்துவதற்காக தனது காரை பயன்படுத்தியது நினைவிருக்கலாம். அதாவது கரும்பலகை இல்லாததால், வெள்ளை நிற காரில் பாடங்களை எழுதி அவர் மாணவிக்கு கற்பித்தார்.
காரில் கீறல்கள் விழக்கூடும் என்பதையெல்லாம் அவர் ஒரு பொருட்டாகவே எடுத்து கொள்ளவில்லை. அந்த புகைப்படங்கள் சமூக வலை தளங்களில் பரவியது என்பது குறிப்பிடத்தக்கது. கொரோனா காலகட்டத்தில் மாணவ, மாணவிகளின் இருப்பிடங்களுக்கே சென்று பாடம் நடத்தி வரும் இப்படிப்பட்ட ஆசிரியர்கள் பாராட்டப்பட வேண்டியவர்கள்.
-
கலாநிதி மாறன் மகள் காவ்யா வைத்திருக்கும் இந்த காரோட விலை 12கோடியா! ஒற்றை குடும்பத்திடம் மட்டும் இவ்ளோ கார்களா!
-
ஓலா ஷோரூம் இல்லாத ஊரே இல்ல போல!! இன்னும் சில வருஷத்தில் தெருவுக்கு ஒண்ணும் வந்துவிடும்!
-
மஹிந்திரா ஸ்கார்பியோ, பெயருக்கே காரை வாங்க கூட்டம் குவியுது!! டாடா நிறுவனத்தால் கிட்ட கூட நெருங்க முடியல!