Just In
- 11 min ago சீன நிறுவனம் கேட்ட முக்கிய சான்றை வழங்கிய இந்தியா! மத்த நாடுகள வளச்சு போட்டதபோல இந்தியாவையும் வளச்சுபோட போகுது
- 2 hrs ago எந்தவொரு பணக்காரருக்கும் இந்த நிலைமை ஏற்பட கூடாது! கடனை திருப்பி செலுத்தாததால் இப்படியெல்லாம் கூட செய்வார்களா?
- 5 hrs ago சுஸுகி 2-வீலர் ஃபேக்ட்ரி நான்-ஸ்டாப்பா ரன் ஆகிட்டு இருக்கு!! ஸ்கூட்டர்களை தயாரிக்கவே நேரம் பத்தல!
- 7 hrs ago படகு மாதிரி மிதந்து சென்ற ரூ2.44 கோடி கார்! இவ்வளவு வெள்ளத்துலயும் சின்ன டேமேஜ் கூட ஆகலயே!
Don't Miss!
- Lifestyle Today Rasi Palan 19 April 2024: இன்று இந்த ராசிக்காரர்கள் நிலுவையிலுள்ள பணிகளை முடிக்க முயற்சிப்பது நல்லது...
- News ‛‛70 லட்சம் ஓட்டு''.. கடைசி வரை மவுனம் கலைக்காத விஜய்! இன்று நடக்கப்போகும் மாற்றம்? யாருக்கு லாபம்?
- Sports IPL Classics - 87 ரன்களில் ஆல் அவுட்டான மும்பை.. பஞ்சாப் அணியில் பிரவீன்குமார் அபார பவுலிங்
- Finance ரோஜா பூவும், பிரியாணியும் மணக்குதே.. செலவும் பிச்சுக்குதே..!!
- Technology வெயிட்டிங் ஓவர்.. Sony கேமரா.. 256ஜிபி மெமரி.. வருகிறது புதிய Vivo 5ஜி போன்.. எந்த மாடல்?
- Movies Actress Sujitha: குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பாண்டியன் ஸ்டோர்ஸ் நாயகி.. சூப்பர்ல!
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
வேலையை சுலபமாக்கும் ஸ்மார்ட் கையுறைகள்... ஸ்கோடா ஆலையில் புதுமை...
முதன் முதலில் தந்தி சேவை அறிமுகப்படுத்தப்பட்ட போது, ஒரு ஊரில் இருந்து மற்றொரு ஊருக்கு மாஸ் கீ எனப்படும் முறை மூலம் பொத்தானை அழுத்தி ஒலி வழித் தகவல் கொடுக்கப்படும் (கிட்டத்தட்ட வாக்கி - டாக்கி மாதிரி). அதை அவர்கள் கையால் எழுதி, சம்பந்தப்பட்ட நபரிடம் ஒப்படைப்பார்கள். அதன் பிறகு பல்வேறு பரிணாமங்கள் தந்தி சேவையில் உருவாகின. கடைசியாக இணையவழியே தகவல் அனுப்பப்பட்டது.
கால ஓட்டத்தின் அசுர வேகத்துக்கு முன்னால் ஈடு கொடுக்க முடியாமல் கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்னால் தந்தி சேவை நிறுத்தப்பட்டது.
இதுபோலவே, நாம் ஒரு காலத்தில் வியந்து பார்த்த தொழில்நுட்பம், இன்று பழைமையாக மாறிப் போய் வழக்கொழிந்து விடுகிறது. பழைய தொலைக்காட்சிப் பெட்டி, பெரிய கணினி என சொல்லிக் கொண்டே போகலாம். கடந்த கால தொழில்நுட்பங்களை கொன்று புதைத்துவிட்டு நாள்தோறும் புதுப்புது டெக்னாலஜிகள் அறிமுகமாகிக் கொண்டிருக்கின்றன.
அந்த வரிசையில் செக் குடியரசைச் சேர்ந்த முன்னணி கார் உற்பத்தி நிறுவனமான ஸ்கோடா, தனது ஆலையில் பணியாற்றும் தொழிலாளர்களின் நலனுக்காக புதியதொரு தொழில்நுட்பத்தைக் கையாண்டு வருகிறது.
உதிரி பாகங்கள் உற்பத்திப் பிரிவில் தொழிலாளர்கள் அனைவருக்கும் அதி நவீன கையுறைகள் வழங்கப்படுகின்றன. அதில் டிஜிட்டல் சாதனம் ஒன்று பொருத்தப்பட்டுள்ளது. விஷேசம் என்னவென்றால், தொழிலாளர்கள் செய்யும் பணி சரியாக இருக்கிறதா? அவர்கள் தகுந்த பாகத்தை எடுத்துப் பொருத்துகின்றனரா? என்பதைக் கண்காணித்து அந்த சாதனம் தகவல் தெரிவிக்கும்.
உதிரி பாகங்களுக்கு வழங்கப்பட்டுள்ள பார் கோடு எனப்படும் சங்கேதக் குறியீட்டை ஸ்கேன் செய்து, அதன் அடிப்படையில் இத்தகைய தகவல்களை அந்த சமயோஜித கையுறைகள் தொழிலாளர்களுக்குத் தெரிவிக்கும்.
ஒலி எழுப்பியோ அல்லது அதிர்வுகளை (வைப்ரேசன்) உருவாக்கியோ, தகவல் அளிக்கும் வகையில் அந்த டிஜிட்டல் சாதனம் உருவாக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் தொழிலாளர்களின் வேலைகள் எளிமையாவதுடன், பணி நேரமும் குறையும் என்று தெரிவிக்கின்றனர் ஸ்கோடா நிர்வாகிகள்.
தொழிலாளர்களின் நண்பன் என்று இந்த கையுறைகளுக்குப் பெயரிட்டுள்ளனர் (ப்ரோ க்ளவ்ஸ்). கார் விற்பனையில் சர்வதேச அளவில் முன்னணியில் இருக்கும் ஸ்கோடா நிறுவனம், பணிச் சூழலில் இதுபோன்ற புதுமைகளைப் புகுத்தி, தொழிலாளர்களின் நலன் காப்பதிலும் முதலிடத்தில் உள்ளது.
இத்தகைய புதிய முயற்சிகள் வெற்றி பெற்று, மேலும் பல தொழில்நுட்ப வசதிகள் அனைத்து இடங்களிலும் வியாபிக்க வேண்டும் என்பதே மக்களின் விருப்பம்...
-
இங்கே வெயில் பொளக்குது... துபாயில் செம மழை!! வறண்டு கிடக்கும் இண்டர்நேஷ்னல் ஏர்போர்ட்டை இப்போது பாருங்க!
-
இந்தியாவே காத்துகிடந்த 4 சூப்பர் பைக்குகளை அறிமுகம் செய்த அப்ரிலியா! பிராண்ட் அம்பாஸிட்டரான ஹிந்தி நடிகர்!
-
வெறும் ரூ150க்கு விமான டிக்கெட் விற்பனையாகுது! இது ஆஃபர் எல்லாம் இல்லை உண்மையான கட்டணமே இவ்வளவு தான்!