Just In
- 1 hr ago உலகின் தலை சிறந்த கார் எது தெரியுமா? விருதை தட்டி சென்ற கியா தயாரிப்பு! சும்மா ஒன்னும் இதை தூக்கி கொடுத்திடல..
- 1 hr ago மேட்-இன் தமிழ்நாடு... தரத்தில் எந்த குறையும் இருக்காது!! மொத்தமும் எலக்ட்ரிக் தான்!
- 2 hrs ago பிரசார வேனை சொகுசு பங்களா போல செட்டப் செய்த கமலஹாசன்! இதை பார்க்கவே கூட்டம் குவியுமே!
- 4 hrs ago கண்ண மூடிட்டு ஹோண்டா டூவீலர்களை வாங்கும் இந்தியர்கள்! இந்த விஷயம் தெரிஞ்சா விடிஞ்சதும் ஷோரூம்லதான் இருப்பீங்க!
Don't Miss!
- News பொத்தென விழுந்த மேற்கூரை.. 3 பேரை அமுக்கி கொன்ற சென்னை பப் விபத்து பற்றி காவல்துறை விளக்கம்
- Sports ரிஷப் பண்ட்க்கு 2 முறையும் லக் இல்ல.. தொடர்ந்து 2வது வெற்றியை பெற்ற ராஜஸ்தான்.. ரியான்,ஆவேஷ் அபாரம்
- Lifestyle வரப்போகிற சூரிய கிரகணம் இந்த 4 ராசிக்காரங்களுக்கு பெரிய துரதிர்ஷ்டத்தை தரப்போகுதாம்..ரொம்ப ஜாக்கிரதையா இருங்க!
- Movies Cooku with comali 5: புது கோமாளிகளுடன் களமிறங்கும் குக் வித் கோமாளி 5 -ஆங்கர் ரக்ஷன் சம்பளம் இவ்வளவா
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
- Technology குறைஞ்சது 4 -5 நாள் ஆகும்.. கடைசி நேரத்துல அலையாதீங்க.. Voter ID-க்கான முக்கிய வேலை.. உடனே செஞ்சிடுங்க!
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
சுத்தம் செய்வதற்காக கார் சாவியை கொடுத்த தந்தைக்கு அதிர்ச்சியளித்த சிறுவன்..!!
சுத்தம் செய்வதற்காக கார் சாவியை கொடுத்த தந்தைக்கு அதிர்ச்சியளித்த சிறுவன்..!!
15 வயது மகனிடம் காரை சுத்தம் செய்வதற்காக சாவியை கொடுத்து அனுப்பிய தந்தைக்கு கடும் அதிர்ச்சியளித்துள்ளான் மகன் ஒருவன்.
குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள நாரான்புரா பகுதியைச் சேர்ந்த ஒருவர் அவரின் காரை சுத்தம் செய்யுமாறு கூறி தன் 15 வயது மகனிடம் சாவியை கொடுத்து அனுப்பியுள்ளார்.
வீட்டின் வெளியே பார்க்கிங் செய்யப்பட்டிருந்த காரை சுத்தம் செய்த சிறுவனுக்கு, பின்னர் அந்தக்காரை ஓட்டிப்பார்க்க ஆசை ஏற்பட்டுள்ளது.
ஹூண்டாய் சாண்ட்ரோ காரை ஸ்டார்ட் செய்த 15 வயது சிறுவன் கட்டுப்பாடு இல்லாமல் ஓட்டிச் சென்று அருகில் நிறுத்தப்பட்டிருந்த 5 கார்கள் மற்றும் 5 இருசக்கர வாகனங்கள் மீதும் பலமாக மோதி சேதம் ஏற்படுத்தியுள்ளான்.
இதில் யாருக்கும் எந்த விதமான காயமும் ஏற்படவில்லை என்றாலும், மோதிய வாகனங்கள் பலமாக சேதமடைந்தன.
சம்பவம் குறித்து அறிந்து அங்கு கூடிய வாகன உரிமையாளர்கள் தங்கள் வாகனங்கள் மீது மோதிய காரின் கண்ணாடிகளை உடைத்து தங்களது ஆத்திரத்தை வெளிப்படுத்தினர்.
சம்பவம் குறித்து கேள்விப்பட்டு அங்கு காவல்துறையினர் வந்த போதிலும், இது குறித்து வழக்குப்பதிவு ஏதும் செய்யப்படவில்லை.
சாண்ட்ரோ காரின் உரிமையாளர் சேதமடைந்த வாகனங்களுக்கான இழப்பீட்டை தருவதாக ஒப்புக்கொண்டதால் விஷயம் அத்துடன் முடிவுக்கு வந்தது.
கார்/ பைக் என எதுவாயினும் ஆட்டோமொபைல் என்பது எப்போதும் ஆபத்து வாய்ந்தது என்பதை அறியாத சிறுவர்களிடத்தில் அவை கிடைத்தால் இது போன்ற விபரீதம் ஏற்படுவதை தவிர்க்க முடியாது.
உரிய வயதை அடையாத சிறுவர்களிடத்தில் கார்/பைக் குறித்த போதிய விழிப்புணர்வை ஏற்படுத்தவேண்டியது பெற்றோர்களின் கடமையாகும்.
சில நேரங்களில் அவர்கள் ஆர்வமிகுதியால் வீட்டில் பெரியவர்கள் இல்லாத நேரத்தில் நண்பர்களுடன் இணைந்து சாகசங்களில் ஈடுபடவும் வாய்ப்பு உள்ளது என்பதை நினைவில் கொண்டு கார் சாவிகளை அவர்களிடம் இருந்து பாதுகாத்துக் கொள்வது நல்லது.