Just In
- 4 hrs ago டிவிஎஸ் அப்பாச்சி பைக்குகள் ஓரங்கட்ட படுகிறதா? சேல்ஸ் குறைஞ்சிக்கிட்டே வருது... பஜாஜ் ஹாப்பி!!
- 4 hrs ago மாருதி, டாடா, ஹூண்டாய் நிறுவனங்களை ஒரு கை பார்க்க வரும் நிஸான் கார்... போட்டி அனல் பறக்க போகுது...
- 5 hrs ago இந்த காரை எல்லாம் நாம கண்ணால நேர்ல பார்த்தாலே அது நம்ம செஞ்ச புண்ணியம் தான்! காரோட ரேட் அப்படி!
- 6 hrs ago 5 வருஷத்துக்கு எந்தவொரு பிரச்சனையும் இல்லாமல் ஓட்டலாம்!! வாரண்டியை வாரி வழங்கும் இவி நிறுவனம்!
Don't Miss!
- News "ஒழுங்கா சொத்தை பிரிச்சு கொடு.." தந்தையை மிக கொடூரமாக தாக்கிய மகன்.. பதைபதைக்க வைக்கும் சம்பவம்
- Sports வாழ்க்கைன்னா ஒரு சில அடிகள் விழத்தான் செய்யும்.. எல்லா போட்டியிலும் வெல்ல முடியாது.. பாட் கம்மின்ஸ்
- Lifestyle 100 ஆண்டுகளுக்கு பின் உருவாகியுள்ள திரிகிரக யோகம்: அடுத்த 5 நாட்கள் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டமா இருக்கும்..
- Movies Actor Dhanush: ஜூலை மாதத்திற்கு தள்ளிப்போகும் தனுஷின் ராயன் பட ரிலீஸ்.. கமல்தான் காரணமா?
- Technology BSNL தான்யா டாப்பு.. Jio-வுக்கும் Airtel-லுக்கும் ஆப்பு.. 200 ரூபாய்க்குள் 70 நாள் வேலிடிட்டி.. எந்த திட்டம்?
- Finance 6 மாதங்களில் 73% வளர்ச்சி.. ஜியோ ஃபைனான்சியல் சர்வீசஸ் பங்குகள் அள்ளிக் கொடுத்த லாபம்..!
- Travel இந்தியாவில் உள்ள புனிதமான காடுகள் – வாழ்வில் ஒரு முறையேனும் இந்த காடுகளுக்கு செல்ல வேண்டும்!
- Education சென்னை ஏர்போர்ட்டில் பணிபுரிய ஆசையா...!
சீவி சிங்காரித்து சிலிர்த்துக்கொண்டு போன தேஜஸ் எக்ஸ்பிரஸ்...நாரி நசநசத்துபோய் திரும்பி வந்த கதை..!
தேஜஸ் எக்ஸ்பிரஸில் காணாமல் போன ஹெட்ஃபோன்கள், உடைக்கப்பட்ட எ.ல்.சி.டி திரை, நாறிப்போன கழிவறை.
மும்பை-கோவா இடையே கடந்த சில தினங்களுக்கு முன்பு பயணத்தை துவக்கிய தேஜஸ் எக்ஸ்பிரஸ் மீண்டும் மும்பை வந்ததை பார்த்து இரயில்வே ஊழியர்கள் அதிர்ச்சியில் உறைந்துபோய் உள்ளனர்.
நாட்டின் அதிவேக இரயில்சேவையாக கடந்த சில தினங்களுக்கு முன்பு இந்திய ரயில்வே நிர்வாகம் தேஜஸ் எக்ஸ்பிரஸ் இரயிலை மும்பை - கோவா இடையே அறிமுகப்படுத்தியது.
தானியங்கி கதவுகள், தாராள இடம் தரும் இருக்கைகள், எல்.சி.டி திரைகள், வைஃபை வசதி, பாதுகாப்பிற்கு சி.சி.டி.வி கேமரா என ஆடம்பர பயணத்திற்கான சகல வசதிகளும் இதில் உள்ளன.
அசத்தலான உட்புற கட்டமைப்பை பெற்றுள்ள தேஜஸ் எக்ஸ்பிரஸ் மிகுந்த எதிர்பார்ப்பிற்கிடையில் கடந்த 22ம் தேதி தனது முதல் பயணத்தை மும்பை முதல் கோவா வரை தொடங்கியது.
20 பெட்டிகள் கொண்ட இந்த இரயிலில் உயர் வகுப்புக்கான எக்ஸ்கியூட்டிவ் கிளாஸ், மற்றும் சாதாரண வகுப்பாக சேர் கிளாஸ் என இரண்டு பிரிவுகள் உள்ளன.
பயணிகளுக்கு எந்தவித குறையுமின்றி பயணிக்கவைக்கும் தேஜஸ் எக்ஸ்பிரஸ் மணிக்கு சுமார் 200 கிலோ மீட்டர் வேகத்தில் தண்டவாளங்களில் பறக்கும் அதிவேக இரயிலாகும்.
கடந்த 22ம் தேதி கோவாவில் இருந்து தனது முதல் பயணத்தை முடித்துக்கொண்டு மும்பை திரும்பிய தேஜஸ் எக்ஸ்பிரஸை பார்த்த இரயில்வே ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
எல்.சி.டி திரைகள் உடைக்கப்பட்டு இருந்தது, அதில் பொருத்தப்பட்டு இருந்த ஹெட்ஃபோன்கள் பல திருடப்பட்டு இருந்தன.
கழிவறைகள் முகம் சுழிக்கவைக்கம் அளவிற்கு அசுத்தம் செய்யப்பட்டு இருந்தன. மொத்தமாக இரயிலே சிதறடிக்கப்பட்டு இருந்தது.
ரயிலில் பயணம் செய்த பயணிகளிடமிருந்த வந்த புகாரை அடுத்து, தேஜஸ் இரயில் ஏற்பட்டுள்ள இந்த சம்பவத்தை இரயில்வே துறை நிர்வாகம் தெரிந்துக்கொண்டனர்.
மேலும், பயணிகள் பலர், இரயிலில் தரமற்ற உணவு விநியோகிக்கப்பட்டதாக புகார் தெரிவித்துள்ளனர். வைஃபை வசதிகளும் சரியாக இல்லை என அவர்கள் கூறியுள்ளனர்.
ஆடம்பர இரயில்களுக்கு இதுபோன்ற சம்பவங்கள் நேருவது இந்தியாவில் புதிதல்ல. ஏற்கனவே 2016ல் வாரணாசிக்கு விடப்பட்ட ’மாஹாமன எக்ஸ்பிரஸ்’ இரயிலுக்கும் இதே கதி தான் ஏற்பட்டது.
மும்பை - கோவா இடையே வாரம் ஒருமுறை இயக்கப்படும் தேஜஸ் எக்ஸ்பிரஸில் பயணம் செய்ய பலரும் காத்திருக்கின்றனர்.
தற்போது ஏற்பட்டுள்ள இந்த சம்பவத்தால், தேஜஸ் இரயிலில் பயணிக்க ஆர்வமுடன் காத்திருந்தவர்கள் அதிருப்தியில் உள்ளனர்.
தேஜஸ் எக்ஸ்பிரஸின் தற்போதைய நிலைக்கு காரணம் பயணிகள் தான் எனவும். அதற்கு அவர்கள் பொறுப்பேற்றுக்கொள்ள வேண்டும் என இணையதளங்களில் பலர் கருத்து பதிவிட்டு வருகின்றனர்.
தேஜஸ் எக்ஸ்பிரஸ் இரயிலில் நடைபெற்றுள்ள இந்த சம்பவம் இனி நடைபெறாத வகையில் இந்திய ரயில்வே துறை பாதுகாப்பு அம்சங்களை அதிகரிக்கவேண்டும் என்பதும் பலரது கோரிக்கையாக உள்ளது.
-
ஹீரோ நிறுவனம் அமைதியாக பல தரமான சம்பவங்களை செஞ்சிட்டு வருகிறது!! டாப்-10 லிஸ்ட்டில் 4 இடங்களில் ஹீரோ 2-வீலர்ஸ்
-
உலக அரங்கில் இந்திய தயாரிப்புகளுக்கு ஓர் தலைக்குனிவு!! மேட்-இன்-இந்தியா ஹோண்டா கார் மொத்தமா சொதப்பிடுச்சு!
-
குடும்பத்தோட போகலாம்னு சொல்றாங்களே இந்த கார் பாதுகாப்பானதா இருக்குமா? மோதல் ஆய்வுல வச்சு செஞ்சிருக்காங்க!