Just In
- 17 min ago 140 பேர் தான் இந்த ஸ்கூட்டரை வாங்க முடியும்! அதுக்கு மேல எவ்வளவு கோடி குடுத்தாலும் கிடைக்காது!
- 1 hr ago இன்டிகாவையே விற்பனையில் மிஞ்சிய டாடா பஞ்ச்! பலாபழத்தில் மொய்க்கும் ஈக்களைவிட மோசமாக மக்கள் மொய்க்குறாங்க!
- 2 hrs ago சாதாரணமாவே இந்த மாருதி காரை வீட்டுக்கு மளிகை சாமான் வாங்குற மாதிரி வாங்கிட்டு இருக்காங்க.. இதுல இது வேறையா!
- 8 hrs ago இந்தியாவில் விவசாயம் பார்ப்பவர்கள் அதிகமாகி விட்டார்களா என்ன? மஹிந்திரா டிராக்டர்ஸ் சேல்ஸ் டாப் கியரில்!!
Don't Miss!
- News 7 மணிக்கு வாக்குப்பதிவு 72%.. நள்ளிரவில் அப்டேட் 69%.. தேர்தல் ஆணையம் வெளியிட்ட தகவலால் குழப்பம்!
- Sports அமுக்கு டுமுக்கு அமால் டுமால்.. தல கொஞ்சம் தள்ளி நில்லுங்க.. சிஎஸ்கேவை வெளுக்கும் தரமான மீம்ஸ்!
- Lifestyle Today Rasi Palan 20 April 2024: இன்று இந்த ராசிக்காரர்கள் பண விஷயத்தில் யோசித்து முடிவெடுப்பது நல்லது...
- Technology சுந்தர் பிச்சையின் இன்னொரு முகம்.. Ad Blocker ஆப்களுக்கு ஆப்பு அடிச்ச Google.. யூசர்களுக்கு Warning.. இனிமேல்?
- Finance 9 GB டேட்டா ரூ. 1.20 கோடியா.. அதிர்ச்சியில் புளோரிடா தம்பதி!
- Movies Actor Vijay Sethupathi: மூதாட்டியுடன் செல்ஃபி எடுத்து மகிழ்ந்த விஜய் சேதுபதி.. க்யூட்!
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
தெலங்கானா முதல்வர் சந்திரசேகரராவுக்கு ரூ.7 கோடியில் குண்டு துளைக்காத பஸ்!
தெலங்கானா முதல்வர் சந்திரசேகரராவுக்கு ரூ.7 கோடியில் குண்டு துளைக்காத பஸ்!
தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவுக்காக ரூ.7 கோடி மதிப்பில் குண்டு துளைக்காத வசதியுடன் புதிய ஆடம்பர பஸ் வாங்கப்பட இருக்கிறது.
அடுத்த ஆண்டு தெலுங்கானாவில் சட்டசபை தேர்தல் நடைபெற இருக்கிறது. இதற்காக மாநிலம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்ய சந்திரசேகர ராவ் திட்டமிட்டுள்ளார் இந்த நிலையில், மாவோயிஸ்ட் தீவிரவாதிகளால் சந்திரசேகர ராவ் உயிருக்கு ஆபத்து இருப்பதாக தெலங்கானா பாதுகாப்புத் துறை கருதுகிறது.
இதனையடுத்து, அவரது பயன்பாட்டிற்காக முழுவதும் குண்டுதுளைக்காத வசதி கொண்ட புதிய ஆடம்பர பஸ் ஒன்றை வாங்குவதற்கு தெலங்கானா போக்குவரத்துத் துறை முடிவு செய்துள்ளது. அம்மாநில தலைமை செயலாளர் சுனில் ஷர்மா தலைமையில் இதற்காக குழு அமைக்கப்பட்டு இருக்கிறது.
சந்திரசேகரராவ் பஸ்சில் இடம்பெற வேண்டிய பாதுகாப்பு மற்றும் இதர வசதிகள் குறித்து இந்த குழு முடிவு செய்யும். இரண்டு முதல் மூன்று மாதங்களில் இந்த பஸ் தயாராகிவிடும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
துப்பாக்கிச் சூடு மற்றும் கண்ணி வெடி தாக்குதல்களிலிருந்து பயணிகளை பாதுகாக்கும் வசதிகளுடன் இந்த புதிய ஆடம்பர பஸ் உருவாக்கப்பட இருக்கிறது. இதற்காக இந்த பஸ்சில் விசேஷ அ்டிச்சட்டம், தரைத்தளம் மற்றும் கண்ணாடி ஜன்னல்கள் பயன்படுத்தப்பட இருக்கின்றன.
இதுதவிர, குளிர்சாதன வசதி, ஓய்வு அறை, சிறிய ஆலோசனை கூடம், உடன் வருபவர்களுக்கான இருக்கைகள் மற்றும் கழிவறை வசதியுடன் இந்த பஸ் தயாரிக்கப்பட இருக்கிறது.
தேர்தல் பிரச்சாரம் செய்வதற்கு ஏதுவாக, திறந்து மூடும் கூரை அமைப்பு, ஹைட்ராலிக் நுட்பத்தில் இயங்கும் மேடை, விளக்குகள் மற்றும் மைக் செட் போன்றவற்றுடன் இந்த பஸ் சந்திரசேகர ராவுக்காக கஸ்டமைஸ் செய்யப்பட இருக்கிறது.
மெர்சிடிஸ் பென்ஸ் பஸ்சை கஸ்டமைஸ் செய்து வாங்க இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த பஸ்சின் மதிப்பு ரூ.7 கோடியாக தெரிவிக்கப்படுகிறது.
கடந்த 2015ம் ஆண்டில் சந்திரசேகர ராவுக்காக ரூ.5 கோடியில் குண்டு துளைக்காத மெர்சிடிஸ் பென்ஸ் ஆடம்பர பஸ் ஒன்று வாங்கப்பட்டது. இந்த நிலையில், கூடுதல் பாதுகாப்பு அம்சங்களுடன் இந்த புதிய பஸ் வாங்கப்பட இருப்பதாக அம்மாநில அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
-
ஐபிஎல்-இல் வேண்டுமாயின் கதை வேறயாக இருக்கலாம்!! இந்த விஷயத்தில் சென்னையை விட பெங்களூர் தான் டாப்!
-
சுஸுகி பைக்குகளில் இது தனி ரகம்!! இந்தியாவில் விலையை கேட்டால் மயக்கமே வந்துவிடும்!
-
ஒருத்தர், ரெண்டு பேர் இல்ல, ஒரு குடும்பத்தையே ஏற்றி செல்லலாம்!! ரூ.11.40 லட்சத்தில் கிடைக்கும் பொலேரோ கார்...