Just In
- 18 min ago இப்பவே 13,000த்த தொட்ருச்சா! இந்தியால இருந்து கொண்டு வந்த காருக்கு பேராதரவு வழங்கும் ஜப்பானியர்கள்!
- 1 hr ago சாதாரணமா பஸ்ஸில் பயணம் செய்தது இவ்ளோ பெரிய ஆளா... முகத்தை நல்லா உத்து பார்த்ததும் ஷாக் ஆன மக்கள்...
- 1 hr ago சிட்ரோன், ஜீப் காரை வாங்கப்போறீங்களா? இப்ப போன பணத்தை மிச்சம் பண்ணலாம்! ஏப்30க்கு பிறகு காஸ்ட்லியாகிடும்!
- 2 hrs ago இது கார் இல்ல மிதக்கும் கப்பல்!! புதுசா வாங்கியிருக்கும் இந்த நடிகர் யாரென்று தெரிகிறதா?
Don't Miss!
- News அடேங்கப்பா.. நம்ப முடியாத வகையில் இந்தியாவின் உள்கட்டமைப்பு! மோடியை பாராட்டிய அமெரிக்க வங்கி சிஇஓ
- Movies சுடர் மீது புகார் கொடுத்த எழில்.. கண்கலங்கிய அஞ்சலி நினைத்தேன் வந்தாய்.. இன்றைய எபிசோட் அப்டேட்!
- Finance ரூ.12,500 முதலீடு செஞ்சா ரூ. 1 கோடி கிடைக்குமா.. செம சான்ஸ்..! சூப்பர் திட்டம்.. மிஸ் பண்ணிடாதீங்க!
- Lifestyle கத்திரிக்காயை இந்த மாதிரி ஒருமுறை பொரியல் செய்யுங்க.. பிடிக்காதவங்களும் கேட்டு விரும்பி சாப்பிடுவாங்க...
- Technology அள்ளி தரும் BSNL.. வெறும் ரூ.299 போதும்.. தினமும் 3GB டேட்டா.. வாய்ஸ் கால்கள்.. எத்தனை நாள் வேலிடிட்டி?
- Sports IPL 2024: வெட்கத்தை விட்டு சொல்றேன்.. சிஎஸ்கே அணியால் இதை கூட செய்ய முடியலை.. புலம்பிய பிளெம்மிங்
- Education இலவச கட்டணத்துடன் தனியார் சுயநிதி பள்ளிகளில் சேர வேண்டுமா...ஆன்-லைனில் அப்ளை பண்ணுங்க....!!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
வாழ்நாளில் ஒரு முறையேனும் பயணிக்க வேண்டிய தென்காசி - கொல்லம் ரயில் பயணம்
நீங்கள் ரசிக்க வேண்டிய பல இடங்கள் இருக்கிறது. இந்த இடத்தில் தற்போது புதிதாக இணைந்திருப்பது தான் தென்காசி - கொல்லம் ரயில் பாதை
ஒவ்வொரு முறை பயணத்தின் போதும் ஒவ்வொரு புது பயண அனுபவம் கிடைப்பது ரயில் பயணத்தில் தான். வாழ்வில் ரசனையே இல்லாதவர்கள் ரயிலில் பயணம் செய்தால் ரசிக்க துவங்கி விடுவர்.
இப்படி பட்ட ரயில் பயணத்தில் நீங்கள் ரசிக்க வேண்டிய பல இடங்கள் இருக்கிறது. இந்த இடத்தில் தற்போது புதிதாக இணைந்திருப்பது தான் தென்காசி - கொல்லம் ரயில் பாதை
இந்த பெயரை நீங்கள் இப்பொழுதுதான் கேள்வி பட்டிருக்கலாம். ஆனால் இந்த இடத்தை நீங்கள் பார்த்திக்க அதிக வாய்ப்பு உண்டு, திருடா திருடா படத்தில் குகைக்குள் வைத்து ரயிலில் சண்டை போடும் காட்சி
இடம் கற்றது தமிழ் படத்தில் கதாநாயகனும், நாயகியும் சிறுவயதில் தங்கள நாயை தொலைத்து, கிளைமேக்ஸில் தாங்களே ரயில் குகைக்குள் சென்று உயிரை விடும் காட்சி என தமிழ் சினிமாவில் பேசப்படும் பல படங்களில் காட்சிகள் இங்கு படமாக்கப்பட்டிருந்தன.
இது பாதையை இந்தியாவில் பிரிட்டிஷ் காரர்கள்ஆட்சி செய்தபோது கட்டப்பட்டது. 1888ம் ஆண்டு இதற்கு திட்டம் போடப்பட்டு 1900வது ஆண்டு இந்த பாதையை அமைக்க துவங்கினர். இந்த பாதை வழியாக 1902 ம் ஆண்டு முதல் சரக்கு ரயில் சென்றது. 1904 ம் ஆண்டு முதல் பயணிகள் ரயில் சென்றது. அப்பொழுது மீட்டர் கேஜ் ரயில் பாதை பயன்பாட்டில்இருந்து
இந்த பாதை கடந்த 2010ம் ஆண்டு வரை மீட்டர் கேஜ் பாதையாகவே தான் இருந்தது. அதன் பின் அகல ரயில் பாதையாக மாற்றப்பட்டு கடந்த வாரம் தான் பயன்பாட்டிற்கு வந்தது.
சுமார் 45 கி.மீ., ரயில் பாதையை 8 ஆண்டுகளாக போட்டுள்ளது ரயில்வே நிர்வாகம். இவ்வளவு சவாலானது இந்த பாதை. மலைகள் காடுகள் என இந்த பாதை முழுவதும் கரடுமுரடு பகுதிகளால் ஆனாது.
பகவதிபுரம் என்ற ரயில் நிலையத்தில் இருந்து புனலூருக்கு இடையான ரயில் பாதை முழுவதும் மலை மற்றும் காட்டு பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த பாதையில் பயணம் செய்யும் அனுபவமே தனிதான்.
பசுமையாக ஓங்கி உயர்ந்த மரங்கள், மழை காலங்களில் கண்ணுக்கு குளிர்ச்சியூட்டும் பசுமை காட்சிகள், ரயில் சத்தத்திற்கு இடையே பறவைகள் சத்தம் என நீங்கள் இதுவரை பெற்றிறாத அனுபவமாக இது இருக்கும்.
இந்த பாதையில் ஏற்கனவே 2 பெரிய குகை உட்பட 5 குகைகள் இருந்தது. அகல ரயில் பாதை உருவாக்கப்பட்ட பின்பு 1 குகை புதிதாக அமைக்கப்ட்டு தற்போது மொத்தம் 6 குகைகள் உள்ளது.
இந்த பாதையில் உண்ணத அனுபவமே இந்த குகைகள் தான் இந்தியாலேயே மொத்தம் 25 ரயில் பாதைகளில் தான் குகைகள் உள்ளது. இதில் இதுவும் ஒன்று
மேலும் தென் இந்தியாவில் உள்ள குகைகள் உள்ள ஒரே ரயில் பாதையாக இந்த ரயில் பாதை உள்ளது. இது தென்னிந்திய ரயில் பயண ரசனையாளர்களுக்கு ஒரு சிறந்த அனுபவமாகவே இருக்கும்.
இந்த பாதையில் இதுமட்டுமல்லாமல் கேரள மாநிலம் ஆரியங்காவு - தென்மலை இடையே கழித்துருத்தி 13 கண் பாலம் என்ற இடம் இருக்கிறது. அந்த பாலம் அமைந்துள்ள பகுதி மிகவும் ரம்மியான இயற்கை காட்சியுடன் அமைந்திருக்கும்.
சுமார் 108 ஆண்டுகள் பழமையான இந்த பாலம் 102.7 மீட்டர் நீளம் கொண்டது இந்த பாதை முற்றிலும் கல்தூண்களால் கட்டப்பட்டுள்ளது.
இந்த பாலத்திற்கு கீழேயே ரோடும் உள்ளது. இதனால் இந்த பாலத்தில் ரயில் போகும் போது ரோட்டில் செல்லும் வாகனங்களை நிறுத்தி ரயில் செல்லும் அழகை ரசிப்பார்கள் என்றால் பார்த்து கொள்ளுங்கள்.
மொத்தத்தில் இந்த ரயில் பாதை நாம் வாழ்வில் ஒரு முறையாவது சென்று ரசிக்க வேண்டிய பகுதி. உங்களுக்கு வாய்ப்பு கிடைத்தால் நிச்சயம் தவற விட்டு விடாதீர்கள்.
தற்போது சென்னை தாம்பரத்தில் இருந்து கொல்லத்திற்கு சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. அந்த ரயில் இந்த பாதை வழியாகதான் செல்கிறது.
ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் மாலை 5.30க்கு சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் இருந்து இந்த ரயில் புறப்படுகிறது. மறுநாள் காலை 10.30 மணிக்கு கொல்லம் சென்றடைகிறது.
அதேபோல் சனிக்கிழமை மதியம் 1 மணிக்கு கொல்லத்தில் இருந்து புறப்படும் இந்த ரயில் மறுநாள் காலை 05.05க்கு சென்னை எழும்பூர் வந்தடையும் இந்த ரயில் தற்காலிகமாக இயக்கப்பட்டலும். இதை நிரந்தமாக்க ஆலோசிக்கப்பட்டு வருகிறது.
-
ஃபார்ச்சூனரில் தலைவன் பதிப்பை அறிமுகம் செய்த டொயோட்டா.. பேருல மட்டுமல்ல மத்ததுலையும் இது தலைவன்தான்!
-
உபேர் கேப்களில் அதிகம் தொலைக்கப்பட்ட பொருட்கள் இது தான்! எந்த ஊர்ல அதிகம் தெரியுமா?
-
கேரளா கேரளாதான்யா! 100 வயசு கார் டிரைவரை பார்த்து மிரண்டு நிற்கும் மக்கள்! காருக்கே 50 வயசு ஆச்சுங்க!