Just In
- 49 min ago துபாயில் சென்னை விமானத்தை தவறவிட்ட 15 வயது சிறுமி! அடுத்து நடந்த விஷயம் தான் அதிசயம்!
- 1 hr ago சும்மா ஓட்டி பாக்கலாம்னு ஜீப் விராங்களர் காருல ஏறிட்டீங்க திரும்பி இறங்க மனசே வராது! ஆஃப்-ரோடு அரக்கன்! வீடியோ
- 1 hr ago ஃபார்ச்சூனர் கார் என்றாலே நம்ம மக்களுக்கு தனி பிரியம்!! விலை அதிகமா இருந்தாலும் ஷோரூமுக்கு படை எடுக்குறாங்க!
- 2 hrs ago தண்ணீரை சேமிக்க இப்படி ஒரு வழியா? இனி ரயில்களில் 1லிக்கு பதிலாக 500 மிலி தண்ணீர் மட்டும் வழங்க முடிவு!
Don't Miss!
- News சிரித்த முகத்துடன்.. "நெருப்பு குழிக்குள்" அந்த கடைசி நொடி.. சூரிய உதயத்தில் "அஸ்தமனமான" பெண்.. ஐயோ
- Movies Baakiyalakshmi serial: பழனிச்சாமி -பாக்கியா திருமணம்.. செல்வி சொன்ன விஷயம்.. உறைநத பழனிச்சாமி!
- Technology போச்சு! Paytm-ஐ தொடர்ந்து Kotak Mahindra-க்கு ஆப்பு வைத்த RBI.. இனி உங்க Account, Credit Card-லாம் என்ன ஆகும்?
- Lifestyle இந்த உணவுகளை கண்டிப்பாக பிரஷர் குக்கரில் சமைக்கக்கூடாது.. ஏன் தெரியுமா?
- Finance டீ கடையில் கூட இப்ப கிரெடிட் கார்டு பேமெண்ட் தான்.. ரூ.1 லட்சம் கோடியை தாண்டி புதிய சாதனை..!
- Sports தோனியே சரி.. முஸ்தஃபிசுர்-க்கு பதிலாக வரும் ஸ்பின்னர்.. சிஎஸ்கே அணியில் நடக்கப் போகும் மாற்றம்!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
புயலில் இருந்து 8 பேரின் உயிரை அசால்டாக காப்பாற்றிய கார்... எப்படினு தெரிஞ்சா அசந்து போயிருவீங்க!!
புயலில் இருந்து 8 பேரின் உயிரை, பிரபல நிறுவனத்தின் கார் காப்பாற்றியுள்ளது. அது எப்படி? என்பது தெரிந்தால் நீங்க கண்டிப்பா அசந்து போயிருவீங்க!
உலகம் முழுவதும் தற்போது எலெக்ட்ரிக் கார்கள் வேகமாக பிரபலம் அடைந்து வருகின்றன. இருந்த போதும் எலெக்ட்ரிக் கார்கள் மீது ஒரு சில விமர்சனங்களும் இருக்கின்றன. எலெக்ட்ரிக் கார்களின் பேட்டரியை ஒரு முறை முழுமையாக நிரப்பினால் குறைவான தூரமே பயணிக்க முடியும், எலெக்ட்ரிக் கார்களின் பெர்ஃபார்மென்ஸ் சிறப்பாக இருப்பது என்பது போன்ற குற்றச்சாட்டுகள் கூறப்படுகின்றன.
ஆனால் இந்த குற்றச்சாட்டுகள் அனைத்தையும் டெஸ்லா எலெக்ட்ரிக் கார்கள் ஊதி தள்ளி வருகின்றன. உலக அளவில், எலெக்ட்ரிக் கார்களை தயாரிப்பதில், டெஸ்லா நிறுவனம் முன்னணியில் உள்ளது. அதிக தூரம் பயணிக்க கூடிய வகையிலும், பெர்ஃபார்மென்ஸில் சிறந்து விளங்க கூடிய வகையிலும், அதி நவீன எலெக்ட்ரிக் கார்களை டெஸ்லா நிறுவனம் தயாரித்து வருகிறது.
மேலும் பாதுகாப்பிலும் கூட டெஸ்லா நிறுவனத்தின் எலெக்ட்ரிக் கார்கள் அசத்துகின்றன. டெஸ்லா நிறுவன கார்களில், பாதுகாப்பிற்காக வழங்கப்படும் அதி நவீன தொழில்நுட்ப வசதிகள், பயணிகளுக்கு மிகவும் உதவிகரமாக இருந்து வருகின்றன. இதை நிரூபிக்கும் வகையிலான சம்பவம் ஒன்று தற்போது நடைபெற்றுள்ளது.
இங்கிலாந்தின் தெற்கு பகுதியில் நடைபெற்றுள்ள ஒரு சம்பவம் காரணமாக டெஸ்லா நிறுவனத்திற்கு உலகம் முழுவதிலும் இருந்து பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன. ஆம், டெஸ்லா நிறுவனத்தின் 2 கார்கள் 8 பேரின் உயிரை காப்பாற்றியுள்ளன. இதற்கு அந்த கார்களில் வழங்கப்பட்டுள்ள ஒரு அதி நவீன தொழில்நுட்ப வசதியே காரணம்.
இங்கிலாந்தின் பெரும்பாலான பகுதிகளை தற்போது டென்னிஸ் புயல் சூறையாடியுள்ளது. டென்னிஸ் புயல் காரணமாக தற்போது இங்கிலாந்து நிலை குலைந்து போயுள்ளது. இந்த சூழலில் புயல் வீசி கொண்டிருந்த சமயத்தில், நெடுஞ்சாலை-ஏ31ல் இரண்டு குடும்பத்தினர் 2 டெஸ்லா கார்களில் பயணம் செய்து கொண்டிருந்தனர்.
அவை இரண்டுமே டெஸ்லா மாடல் எக்ஸ் (Tesla Model X) கார்கள்தான். இதில், ஒரு காரில் 5 பயணிகளும், மற்றொரு காரில் 3 பயணிகளும் பயணித்து கொண்டிருந்தனர். 2 கார்களுமே ஆட்டோபைலட் முறையில் இயங்கி கொண்டிருந்தன. இந்த 2 குடும்பத்தினரும் மரத்தின் அடியில் சிக்கி நசுங்கி போவதில் இருந்து ஆட்டோபைலட் காப்பாற்றியுள்ளது.
அதாவது சுமார் 400 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஓக் மரம் ஒன்று சாலையில் விழவிருந்தது. இதனை சரியாக கணித்த ஆட்டோபைலட், எமர்ஜென்ஸி பிரேக்குகளை உடனடியாக போட்டு காரை நிறுத்தியது. இதனால் 8 பேரும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். இந்த பாதுகாப்பு வசதியால் உயிர் தப்பியவர்கள், டெஸ்லா நிறுவனத்திற்கு நன்றி தெரிவித்துள்ளனர்.
இதில், லாரன்ஸ் சாண்டெர்சன் என்பவர் ஒரு டெஸ்லா மாடல் எக்ஸ் காரில், தனது மனைவி மற்றும் மூன்று குழந்தைகளுடன் பயணித்து கொண்டிருந்தார். உயிர் பிழைத்த இந்த நிகழ்வை அதிசயம் என அவர் வர்ணித்துள்ளார். இதேபோன்று மற்றொரு குடும்பமும் விபத்தில் இருந்து அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியுள்ளது.
மற்றொரு டெஸ்லா மாடல் எக்ஸ் காரில், ஜோஸ் வைட்லாக் என்பவர், தனது கேர்ள் பிரண்ட் கேட்டி மற்றும் அவரது தாயாருடன் சென்று கொண்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிகழ்வால் உற்சாகமடைந்த கேட்டி, டெஸ்லா நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி எலான் மஸ்க்கிற்கு டிவிட்டர் மூலம் நன்றி தெரிவித்தார்.
இதில் அவர், ''ஹாய் எலான் மஸ்க். உங்கள் கார் என் உயிரை காப்பாற்றியுள்ளது. மேலும் எனது பாய் பிரண்ட் மற்றும் எனது தாயாரும் காப்பாற்றப்பட்டுள்ளனர். அத்துடன் 5 பேர் கொண்ட மற்றொரு குடும்பமும் காப்பாற்றப்பட்டுள்ள. நன்றி'' என கூறியுள்ளார். இதற்கு எலான் மஸ்க் பதில் அளித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
''நீங்கள் அனைவரும் நலமாக இருப்பதில் மகிழ்ச்சி'' என எலான் மஸ்க் தனது பதிலில் தெரிவித்துள்ளார். இந்த சம்பவம் தற்போது உலகம் முழுக்க கவனம் பெற்றுள்ளது. உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளில் ஆதிக்கம் செலுத்தி வரும் டெஸ்லா நிறுவனம் வெகு விரைவில் இந்திய சந்தையில் கால் பதிக்க இருப்பது குறிப்பிடத்தக்கது.
-
வெறும் 1 ஸ்டார் ரேட்டிங்கை பெற்ற மஹிந்திரா கார்! இந்த காருக்கா இப்படி ஒரு நிலைமை?
-
கியா களமிறக்கும் புது எலெக்ட்ரிக் காரின் விலை இவ்ளோதானா! பெட்டி கடைல கடலை மிட்டாய் விக்கற மாதிரி விக்க போகுது!
-
இந்தியாவை தாண்டினால் டாடா கார்களுக்கு மவுசு கிடையாது!! 5-ஸ்டார் ரேட்டிங் கார்களுக்கு இப்படியொரு நிலைமையா!