கடந்த ஆண்டு இவர் வாங்கிய சம்பளம் இதுதான்... வெளிவந்த உறுதியான தகவலால் ஆச்சரியத்தில் மூழ்கிய உலகம்
டெஸ்லா நிறுவனர் எலான் மஸ்க்கின் சம்பள விபரம் வெளியாகி உலகையே ஆச்சரியத்தில் மூழ்கடித்துள்ளது. இதுதொடர்பான விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள பாலோ ஆல்டோ நகரை தலைமையிடமாக கொண்டு டெஸ்லா (Tesla) நிறுவனம் இயங்கி வருகிறது. எலெக்ட்ரிக் கார் உற்பத்தியில் டெஸ்லா நிறுவனம் நிபுணத்துவம் பெற்று விளங்குகிறது.

அதிநவீன தொழில்நுட்ப வசதிகளுடன் கூடிய எலெக்ட்ரிக் கார்களை உற்பத்தி செய்வதில் டெஸ்லாவிற்கு நிகராக வேறு நிறுவனம் இன்னும் தலையெடுக்கவில்லை. டெஸ்லா நிறுவனத்தின் மாடல் எஸ், மாடல் எக்ஸ் மற்றும் மாடல் 3 உள்ளிட்ட கார்கள் உலகம் முழுவதும் பிரபலமாக திகழ்ந்து வருகின்றன.

டெஸ்லா நிறுவனம் 16 ஆண்டுகளுக்கு முன்பு, அதாவது கடந்த 2003ம் தோற்றுவிக்கப்பட்டது. இதன் நிறுவனர்களில் எலான் மஸ்க்கும் ஒருவர். இவரை பற்றிய அறிமுகமே தேவையில்லை. இன்றைய டெக்னாலஜி இளைஞர்களின் ஆதர்ச நாயகனாக எலான் மஸ்க் திகழ்ந்து வருகிறார்.

டெஸ்லா தவிர ஸ்பேஸ் எக்ஸ் (SpaceX) நிறுவனமும் கூட எலான் மஸ்க்கால் தோற்றுவிக்கப்பட்டதுதான். விண்வெளி ஆராய்ச்சியில் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் புதுப்புது உச்சங்களை தொட்டு வருகிறது. எனவே எலான் மஸ்க் உலகம் முழுக்க அனைவராலும் கவனிக்கப்படும் நபராக இருந்து வருகிறார்.

இந்த சூழலில் உலகம் முழுக்க பிரபலமான டெஸ்லா நிறுவனத்தின் இந்திய வருகை பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. தற்போதைய நிலையில் டெஸ்லா கார்கள் இந்தியாவில் விற்பனை செய்யப்படுவது கிடையாது.

ஆனால் டெஸ்லா மாடல் எக்ஸ் கார்களை ஒரு சில இந்திய வாடிக்கையாளர்கள் இறக்குமதியின் மூலமாக வாங்கி கொண்டுள்ளனர். எனவே டெஸ்லா நிறுவனம் இந்திய மார்க்கெட்டில் எப்போது அதிகாரப்பூர்வமாக காலடி எடுத்து வைக்கும் என்ற கேள்விகள் வாடிக்கையாளர்கள் மனதில் எழுந்து வருகிறது.

முதலில் 2017ம் ஆண்டு டெஸ்லா நிறுவனம் இந்திய மார்க்கெட்டில் தனது முதல் காரை விற்பனைக்கு அறிமுகம் செய்யும் என தகவல்கள் வெளியாகவில்லை. ஆனால் அது நடக்கவில்லை. இதன்பின் 2018ம் ஆண்டு டெஸ்லா நிறுவனம் இந்தியாவிற்கு வரும் என கூறப்பட்டது. ஆனால் அதுவும் நடக்கவில்லை.

இருந்தபோதும் டெஸ்லாவின் இந்திய வருகை தொடர்பான புதிய தகவல் ஒன்று கடந்த மார்ச் மாதம் வெளியானது. அதுவும் எலான் மஸ்க்கிடம் இருந்தே அந்த தகவல் நேரடியாக கிடைத்ததால் இந்திய வாடிக்கையாளர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.

இந்தியாவை சேர்ந்த வாடிக்கையாளர் ஒருவர், டெஸ்லா நிறுவனத்தின் இந்திய வருகை தொடர்பாக எலான் மஸ்க்கிடம் டிவிட்டரில் கேள்வி ஒன்றை எழுப்பினார். இதற்கு பதில் அளித்த எலான் மஸ்க், ''இந்தியாவில் இந்த ஆண்டு (2019) இருக்க வேண்டும் என விரும்புகிறோம்.

ஒருவேளை அது நடக்காவிட்டால், நிச்சயமாக அடுத்த ஆண்டு (2020)'' என தெரிவித்தார். எனவே நடப்பு ஆண்டில் டெஸ்லா நிறுவனம் இந்தியாவிற்கு வந்து விடும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஒருவேளை நடப்பாண்டு இல்லாவிட்டால், அடுத்த ஆண்டு டெஸ்லா இந்தியாவிற்கு வரலாம்.

டெஸ்லா நிறுவனத்தின் அதிநவீன எலெக்ட்ரிக் வாகன டெக்னாலஜி இந்தியாவிற்கு நிச்சயம் பலன் தரும் என்பதில் சந்தேகமே இல்லை. டெஸ்லா நிறுவனம் பல்வேறு கார்களை விற்பனை செய்தாலும் கூட, மாடல் 3 கார்தான் இந்திய மார்க்கெட்டிற்கு ஏற்றதாக இருக்கும் என கருதப்படுகிறது.

ஏனெனில் டெஸ்லா நிறுவனத்தின் மலிவான விலை கொண்ட கார்களில் ஒன்றாக மாடல் 3 திகழ்கிறது. இந்திய மார்க்கெட்டிற்கு ஏற்ப சரியாக விலை நிர்ணயம் செய்யப்பட்டால், டெஸ்லா மாடல் 3 இங்கு வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளன.

இதன் விலை சுமார் 45 ஆயிரம் அமெரிக்க டாலர்கள். இந்திய மதிப்பில் கணக்கிட்டால் தோராயமாக 31 லட்ச ரூபாய். 31 லட்ச ரூபாயா? என அதிர்ச்சியடைய வேண்டாம். டெஸ்லா நிறுவனத்தை பொறுத்தவரை இது குறைவான விலையே. அத்துடன் கொடுக்கும் பணத்திற்கு மதிப்பு வாய்ந்த மாடலாக இது இருக்கும்.

இந்த சூழலில், டெஸ்லாவின் இந்திய வருகை குறித்த எதிர்பார்ப்புகள் எகிறி கொண்டிருக்கும் சூழலில், எலான் மஸ்க்கின் சம்பளம் தொடர்பான தகவல்கள் தற்போது வெளியாகி பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளன.

200 பெரிய நிறுவனங்களின் தலைமை செயல் அதிகாரிகளின் (CEOs) சம்பளம் தொடர்பான ஆய்வு ஒன்றினை தி நியூ யார்க் டைம்ஸ் நடத்தியது. இதில், எலான் மஸ்க் கடந்த ஆண்டு 2.3 பில்லியன் அமெரிக்க டாலர்களை சம்பளமாக வாங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய மதிப்பில் கணக்கிட்டால், கடந்த 2018ம் ஆண்டில் எலான் மஸ்க் 14 ஆயிரம் கோடி ரூபாயை சம்பளமாக வாங்கியுள்ளார்!!! தனது சம்பளத்தை இன்னும் அதிகமாக்க முன்பை காட்டிலும் தற்போது தீவிரமாக உழைக்க தொடங்கியுள்ளார் எலான் மஸ்க்.


Click it and Unblock the Notifications








