Just In
- 36 min ago உலகம் முழுவதும் ராயல் என்ஃபீல்டு பைக்கை வாடகைக்கு எடுக்கலாம்! எப்படி தெரியுமா?
- 2 hrs ago சீன நிறுவனம் கேட்ட முக்கிய சான்றை வழங்கிய இந்தியா! மத்த நாடுகள வளச்சு போட்டதபோல இந்தியாவையும் வளச்சுபோட போகுது
- 4 hrs ago எந்தவொரு பணக்காரருக்கும் இந்த நிலைமை ஏற்பட கூடாது! கடனை திருப்பி செலுத்தாததால் இப்படியெல்லாம் கூட செய்வார்களா?
- 7 hrs ago சுஸுகி 2-வீலர் ஃபேக்ட்ரி நான்-ஸ்டாப்பா ரன் ஆகிட்டு இருக்கு!! ஸ்கூட்டர்களை தயாரிக்கவே நேரம் பத்தல!
Don't Miss!
- Sports என்னை மிரட்டி ஆர்சிபிக்கு விளையாட வைத்தார் கோலி.. உலககோப்பை தோல்வி வலித்தது- கேஎல் ராகுல் பேச்சு
- Technology ரூ.10,000 குள்ள 2.. ரூ.20,000 குள்ள 2.. Redmi-யின் 5 முரட்டு போன்கள் மீது.. வெயிட்டா ரூ.2000 டிஸ்கவுண்ட்!
- Movies கனகாவின் காதலர் இவர்தான்.. போலீஸில் மாட்டிவிட பார்த்தார்.. செய்யாறு பாலு சொன்ன டாப் சீக்ரெட்
- News ஜனநாயக கடமை ஆற்ற முதல் ஆளாக வந்த நடிகர் அஜித்.. 30 நிமிடம் முன்பே வந்து காத்திருந்து ஓட்டு போட்டார்!
- Lifestyle Today Rasi Palan 19 April 2024: இன்று இந்த ராசிக்காரர்கள் நிலுவையிலுள்ள பணிகளை முடிக்க முயற்சிப்பது நல்லது...
- Finance ரோஜா பூவும், பிரியாணியும் மணக்குதே.. செலவும் பிச்சுக்குதே..!!
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
கொரோனா வைரஸால் தவிக்கும் அமெரிக்கா... கடைசியில் சீனாதான் உதவி செய்தது... வெளிவந்த உண்மை...
கொரோனா வைரஸை எதிர்கொள்வதில் உலக வல்லரசான அமெரிக்காவே தடுமாறி வரும் நிலையில், சீனா உதவி செய்துள்ளது.
உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளை கொரோனா வைரஸ் தற்போது ஆட்டிபடைத்து வருகிறது. கொரோனா வகையை சேர்ந்த கோவிட்-19 வைரஸால் உலகம் முழுவதும் தற்போது வரை 22,049 பேர் உயிரிழந்துள்ளனர். அத்துடன் 4,88,055 பேர் கோவிட்-19 வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையும், உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் உயர்ந்து வருகிறது.
எனவே வென்டிலேட்டர் உள்ளிட்ட மருத்துவ உபகரணங்களின் தேவையும் அதிகரித்து வருகிறது. இதனால் ஆட்டோமொபைல் நிறுவனங்களின் உதவியை உலகின் பல்வேறு நாட்டு அரசாங்கங்களும் நாடியுள்ளன. வென்டிலேட்டர் மற்றும் மற்ற மருத்துவ உபகரணங்களை தயாரித்து வழங்கும்படி ஆட்டோமொபைல் நிறுவனங்களை அரசுகள் கேட்டு கொண்டுள்ளன.
நிலைமையின் தீவிரத்தை உணர்ந்து ஆட்டோமொபைல் நிறுவனங்களும் இதற்கு முன்வந்துள்ளன. இதன்படி கனடாவில் வாகன உற்பத்தி தொழிற்சாலைகளில் வென்டிலேட்டர்களின் உற்பத்தி நடக்கவுள்ளது. இதற்காக அந்நிறுவனங்களுக்கு கனடா அரசு உதவி செய்யும் என அந்நாட்டு பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ அறிவித்துள்ளார்.
அத்துடன் ஃபோர்டு, ஜென்ரல் மோட்டார்ஸ் மற்றும் டெஸ்லா உள்ளிட்ட நிறுவனங்களும் வென்டிலேட்டர்களை உற்பத்தி செய்ய முடிவெடுத்துள்ளன. இதில், டெஸ்லா நிறுவனமானது, அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள ஆலையை, வென்டிலேட்டர்களை உற்பத்தி செய்வதற்காக மீண்டும் திறக்கவுள்ளது. கொரோனா வைரஸ் எதிரொலியால் உலகம் முழுவதும் வாகனங்களின் விற்பனை கடுமையாக சரிவடைந்துள்ளது.
எனவே உலகம் முழுவதும் பல்வேறு வாகன உற்பத்தி நிறுவனங்களின் தொழிற்சாலைகள் மூடப்பட்டுள்ளன. கொரோனா வைரஸ் பரவி விடக்கூடாது என்பதும் இதற்கு ஒரு காரணமாக இருக்கிறது. இந்த சூழலில்தான், கொரோனா வைரஸ் நோயாளிகளுக்கு வென்டிலேட்டர்களை தயாரிப்பதற்காக, நியூயார்க் நகரில் உள்ள தொழிற்சாலையை டெஸ்லா நிறுவனம் மீண்டும் திறக்கவுள்ளது.
இதனை அதன் தலைமை செயல் அதிகாரி எலான் மஸ்க் டிவிட்டரில் நேற்று (மார்ச் 25ம் தேதி) அறிவித்தார். முன்னதாக டெஸ்லா நிறுவனம் மருத்துவமனை வென்டிலேட்டர்களை சீனாவில் வாங்கி அவற்றை அமெரிக்காவிற்கு அனுப்பி வைத்தது. இதனை கடந்த செவ்வாய் கிழமையன்றுதான் எலான் மஸ்க் கூறியிருந்தார்.
கோவிட்-19 வைரஸ் உலகம் முழுவதும் பரவியது தொடர்பாக அமெரிக்கா மற்றும் சீனா அதிகாரிகள் ஒரு சில சர்ச்சையான குற்றச்சாட்டுகளை தெரிவித்து கொண்டனர். இந்த சூழலில், அமெரிக்காவிற்கும் சீனா உதவி செய்துள்ளது. சீனாவின் வுஹான் நகரம்தான் கோவிட்-19 வைரஸின் தாயகமாக கருதப்படுகிறது. வுஹான் உள்பட சீனா முழுவதும் தற்போது நிலைமை ஓரளவிற்கு மேம்பட தொடங்கியுள்ளது.
எனவே கோவிட்-19 வைரஸை எதிர்கொள்வதில் அனுபவம் பெற்ற சீனா தற்போது உலக நாடுகளுக்கு உதவி செய்ய தொடங்கியுள்ளது. சீனாவை காட்டிலும் கோவிட்-19 வைரஸால் மிக கடுமையாக பாதிக்கப்பட்ட இத்தாலிக்கும் கூட சீனா உதவி செய்திருப்பது குறிப்பிடத்தக்கது. போட்டிகளை மறந்து உலக நாடுகள் ஒன்றிணைந்து செயல்பட்டால் மட்டுமே கோவிட்-19 வைரஸை ஒழிக்க முடியும் என தெரிகிறது.
இந்தியாவை பொறுத்தவரை, மத்திய, மாநில அரசுகளின் தீவிரமான முயற்சிகள் காரணமாக தற்போது வரை நிலைமை ஓரளவிற்கு கட்டுக்குள் உள்ளது. ஆனால் இங்கும் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை உயர தொடங்கியுள்ளது. எனவே இந்தியாவில் தற்போது 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு கடைபிடிக்கப்பட்டு வருகிறது.
இந்தியாவை சேர்ந்த மஹிந்திரா நிறுவனம் வென்டிலேட்டர்களை தயாரிக்க முடிவு செய்துள்ளது. மஹிந்திரா குழும தொழிற்சாலைகளில் வென்டிலேட்டர்களின் உற்பத்தியை உடனே தொடங்கும்படி, அதன் தலைவர் ஆனந்த் மஹிந்திரா உத்தரவிட்டுள்ளார். இந்த இடைக்கால உயிர்காக்கும் கருவிகளின் விலை 7,500 ரூபாய் என்ற அளவில் மட்டுமே இருக்கும் என தெரிகிறது.
-
நாசாவே அசந்து போகும் முக்கிய கருவியை உருவாக்கிய இஸ்ரோ! இனி உலகமே நம்ம கிட்ட தான் இந்த ஐடியாவை கேட்கும்!
-
இங்கே வெயில் பொளக்குது... துபாயில் செம மழை!! வறண்டு கிடக்கும் இண்டர்நேஷ்னல் ஏர்போர்ட்டை இப்போது பாருங்க!
-
இந்தியாவே காத்துகிடந்த 4 சூப்பர் பைக்குகளை அறிமுகம் செய்த அப்ரிலியா! பிராண்ட் அம்பாஸிட்டரான ஹிந்தி நடிகர்!