ஃபெராரி கார் ஆசையை துறந்து ஜெயின் மத துறவியான 12 வயது சிறுவன்
சிறு வயது முதல் தனது ஃபெராரி கார் ஆசையை துறந்து ஜெயின் மத துறவியாகியுள்ளார் குஜராத் மாநிலத்தை சேர்ந்த 12வயது சிறுவன் . இச்சம்பவம் சமூகவலைதளங்களில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
சிறு வயது முதல் தனது ஃபெராரி கார் ஆசையை துறந்து ஜெயின் மத துறவியாகியுள்ளார் குஜராத் மாநிலத்தை சேர்ந்த 12வயது சிறுவன் . இச்சம்பவம் சமூகவலைதளங்களில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

குஜராத் மாநிலம் சூரத்தில் வைர வியாபாரம் செய்து வருபவர் திபிஷ் ஷா இவருக்கு மூன்று மகன்கள் உள்ளனர். இவர்கள் ஜெயின் மத குடும்பத்தை சார்ந்தவர்கள். அந்த மத நடவடிக்கையில் தவீர நாட்டம் கொண்டவர்கள்.

திபிஷ் ஷா அவரது மகன்களுக்கு சிறு வயதில் இருந்தே ஜெயின் மத நம்பிக்கைகளையும், வாழ்க்கை முறைகளையும் சொல்லிக்கொடுத்துவளர்த்துள்ளார்.

இந்நிலையில் அவரது இரண்டாவது மகனு பவ்யாவுக்கு ஃபெராரி காரில் போக வேண்டும் என சிறு வயதில் இருந்து ஆசை இருந்துள்ளது. இந்நிலையில் ஜெயின் மதத்தில் துறவு வாழக்கையை கடை பிடிக்க திபிஷ் ஷாவின் இரண்டு மகன்கள் கடை பிடித்தனர்.

திபிஷ் ஷா ஃபெராரி காரை வாங்கு அளவிற்கு வசதி படைத்திருந்தாலும் அவர் எளிமையான வாழ்கையே வாழ விரும்புனார். அதனால் அதை அவர் மகனுக்காக கூட வாங்கவில்லை.

இந்நிலையில் கடந்த மாதம் திபிஷ்ஷாவின் இரண்டு மகன்களும் துறவு வாழக்கையத மேற்கொள்ள முடிவெடுத்தனர். இதற்கான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டது.

துறவு வாழ்கையில் ஆசைகளை துறந்தவர்களாக இருக்க வேண்டும் என்பதால் பவ்யாவின் சிறு வயது ஆசையான ஃபெராரி காரில் செல்ல வேண்டும் என்ற ஆசையை கடந்த மாதமே அவரது தந்தை நிறைவேற்றி தந்தார்.

அதற்காக அவர் தனது நண்பரிடம் உள்ள ஃபெராரி காரை வாங்கி அதில் பவ்யாவை பயணிக்க வைத்தார். தொடர்ந்து பவ்யாவில் துறவுக்கு முன் அவருக்கு ராஜஅலங்காரம் செய்யப்பட்டு பாகுபலி படத்தில் வரும் ரதம் போல ஒரு ரதம் தயார் செய்யப்பட்டு ஊர்வலமாக அழைத்து செல்லப்பட்டான்.

தொடர்ந்து மறுநாளே திபிஷ் ஷா வின் 2 மகன்களும் 300 மதகுருமார்கள், மற்றும் ஆயிரக்கண்கான ஜெயின் மத மக்கள் முன்னிலையில் தீட்சை பெற்று ஜெயின் மத துறவியாகினர்.

இது குறித்து திபிஷ் ஷா கூறும் போது : "எனது இரண்டு மகன்கள் துறவு செல்வதாக முடிவு எடுத்தில எனக்கு எந்த விருத்தமும் இல்லை, அவர்களுக்கான முடிவை அவர்கள் எடுத்துள்ளனர்.

எனது மூன்றாவது மகன் துறவு செல்ல விரும்பவில்லை. அது அவரது தனிப்பட்ட விருப்பம். மனது மனைவி தான் துறவு செல்வதை நினைத்து வருந்துகிறாள். ஆனால் பொதுவாக பார்த்தால் எங்களுக்கு சந்தோஷம் தான். " என கூறினார்.

பெரியவர்களான நம்மளுக்கே ரோட்டில் விலை உயர்ந்த கார் சென்றாலே நாம் அதில் ஒருமுறையாவது சென்று விட மாட்டோமாக என தோன்றும்.

ஆனால் தான் ஆசைப்பட்ட ஃபெராரி காரையே வாங்க வசதி இருந்தும் அந்த ஆசையை துறந்து இந்த சிறுவன் துறவு செல்வதாக எடுத்த முடிவு சமூகவலைதளங்களில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்ட செய்திகள்:


Click it and Unblock the Notifications