Just In
- 2 hrs ago ஓட்டு போட வந்த பிரபலங்கள் எந்த கார்களில் வந்தார்கள் தெரியுமா? பாதிபேர் ஒரே மாதிரி கார்ல வந்திருக்காங்க!
- 3 hrs ago விமானம் தரையிறங்கும் முன் எரிபொருளை விமானிகள் வேண்டுமென்றே திறந்துவிடுவார்கள்.. நாடுவானில் ஏன் இத செய்யுறாங்க?
- 3 hrs ago லியோ படத்தில் விஜய்யுடன் நடிச்சாரு, இப்போது விலையுயர்ந்த டொயோட்டா காரில்!! கேரள நடிகையின் புது கார்!
- 6 hrs ago போன தடவ சிவப்பு நிற சைக்கிள்.. இந்த முறை இன்னோவா கார்.. இந்த கார் வாயிலாக அவர் என்ன சொல்லியிருக்கார்?
Don't Miss!
- Movies Actor Vijay Sethupathi: மூதாட்டியுடன் செல்ஃபி எடுத்து மகிழ்ந்த விஜய் சேதுபதி.. க்யூட்!
- Lifestyle சப்பாத்திக்கு ஒருடைம் உருளைக்கிழங்கு வெச்சு இப்படி கிரேவி செஞ்சு பாருங்க.. டேஸ்ட் சும்மா அள்ளும்...
- Sports அடுத்தடுத்து வீழ்ந்த 2 வீரர்கள்.. சிஎஸ்கே பேட்டிங் வரிசையில் நடந்த மாற்றம்.. ஜடேஜா களமிறங்கியது ஏன்?
- News தமிழகத்தில் 72% வாக்குப்பதிவு! 2019இல் தேர்தலில் பதிவான வாக்குகள் எவ்வளவு - தொகுதி வாரியான விவரம்
- Technology ஆத்தாடி.. ஒரே போனை வைத்து.. இந்தியாவில் சம்பவம் செய்ய பார்க்கும் Samsung.. பட்ஜெட்ல அறிமுகமாகும் புது Mobile..
- Finance தூத்துக்குடி நிறுவனத்தை அலேக்கா வாங்கிய அதானி.. மாஸ்டர் பிளான் உடன் களமிறங்கிய கௌதம் அதானி..!!
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
டேங்கர் லாரியில் 45 லட்ச ரூபாய் மதிப்புள்ள எரிபொருள் கொள்ளை... எப்படி நடந்துச்சுனு தெரிஞ்சா ஆடிப்போயிருவீங்க!
டேங்கர் லாரியில் இருந்து 45 லட்ச ரூபாய் மதிப்புள்ள எரிபொருள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்த தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.
உலகில் பெட்ரோல், டீசல் மிகவும் அதிக விலையில் விற்பனை செய்யப்படும் நாடுகளில் ஒன்றாக இந்தியா இருக்கிறது. பெட்ரோல், டீசல் மீது விதிக்கப்படும் அதிகப்படியான வரிகள்தான் இதற்கு காரணம். இதனை கிண்டலடிக்கும் விதமாக திருமண மேடைகளில் மணமக்களுக்கு பெட்ரோல், டீசலை பரிசாக வழங்கும் வினோத சம்பவங்கள் இந்தியாவில் நடைபெறுவதுண்டு.
இந்த நிகழ்வுகள் தலைப்பு செய்திகளாக மாறும். அதேபோல் விலை உயரும்போதெல்லாம், பெட்ரோல், டீசல் திருட்டு தொடர்பான செய்திகளும் அதிக கவனம் பெறும். இந்தியாவை போல் இங்கிலாந்திலும் தற்போது எரிபொருள் திருட்டு சம்பந்தமான செய்தி ஒன்று கவனம் ஈர்த்துள்ளது. இந்த செய்தி கடல் கடந்து உலகின் பல்வேறு நாடுகளையும் சென்றடைந்துள்ளது.
மிகவும் வினோதமான முறையில் இந்த சம்பவம் நிகழ்ந்திருப்பதுதான் இதற்கு காரணம். இங்கிலாந்தில் தற்போது எரிபொருளுக்கு கடுமையான தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. எரிபொருளை கொண்டு செல்லும் டேங்கர் லாரிகளுக்கு போதுமான அளவில் டிரைவர்கள் இல்லாததுதான் இதற்கு காரணமாக சொல்லப்படுகிறது.
டிரைவர்கள் இல்லாததால் சப்ளை கடுமையாக பாதிக்கப்பட்டு, எரிபொருளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் இங்கிலாந்தில் உள்ள பெட்ரோல் பங்க்குகள் முன்பு தற்போது மிகவும் நீண்ட வரிசையை பார்க்க முடிகிறது. அத்துடன் வாகன ஓட்டிகளுக்கு இடையே வாக்குவாதம், சண்டை என பல்வேறு பிரச்னைகள் ஏற்பட்டு வருகின்றன.
இப்படிப்பட்ட சூழலில்தான் இங்கிலாந்தில் வினோதமான எரிபொருள் திருட்டு சம்பவம் நடைபெற்றுள்ளது. இங்கிலாந்தின் போர்ட்ஸ்மவுத் என்ற நகரில் லாரிகளை நிறுத்தி வைக்கும் இடம் ஒன்று இருக்கிறது. இங்கு லாரிகளை சர்வீஸ் செய்து கொள்ளலாம். எரிபொருள் நிரப்பி கொள்ளலாம். லாரி டிரைவர்கள் ஓய்வு எடுப்பதற்கும் இந்த இடத்தை பயன்படுத்தி கொள்ளலாம்.
இங்கு எரிபொருளுடன் நிறுத்தப்பட்டிருந்த ஒரு டேங்கர் லாரிதான் கொள்ளையர்களுக்கு இரையாகியுள்ளது. கொள்ளையர்கள் டேங்கர் லாரியின் மீறு ஏறி, அதில் இருந்த எரிபொருளை பைப் மூலம் கொள்ளையடித்து சென்று விட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கொள்ளையடிக்கப்பட்ட எரிபொருள் அளவு மிகவும் பெரியது.
சம்பந்தப்பட்ட டேங்கர் லாரி 43 ஆயிரம் லிட்டர் எரிபொருளுடன் புறப்பட்டதாக கூறப்படுகிறது. ஆனால் அந்த டேங்கர் லாரி கடைசியில் வெறும் 13 ஆயிரம் லிட்டர் எரிபொருளுடன்தான் சென்று சேர வேண்டிய இடத்தை சென்றடைந்துள்ளது. அதாவது சுமார் 30 ஆயிரம் லிட்டர் எரிபொருளை கொள்ளையர்கள் திருடி சென்றுள்ளனர்.
இங்கிலாந்தில் கொள்ளையடிக்கப்பட்ட எரிபொருளின் இந்திய மதிப்பு சுமார் 45 லட்ச ரூபாய் இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இவ்வளவு அதிகமான மதிப்புடைய எரிபொருள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளதால், இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இங்கிலாந்தில் தற்போது ஏராளமான பெட்ரோல் பங்க்குகள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன.
டிரைவர்கள் பற்றாக்குறையால் எரிபொருள் கிடைக்காததே இதற்கு காரணம். எரிபொருளுக்கு கடுமையான தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால், இந்த கொள்ளை சம்பவம் நிகழ்ந்திருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. இது தொடர்பாக இங்கிலாந்து காவல் துறை அதிகாரிகள் தற்போது தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
இங்கிலாந்தில் தற்போது எலெக்ட்ரிக் வாகனங்களின் பயன்பாடு அதிகரித்து வருகிறது. எலெக்ட்ரிக் வாகனம் வைத்திருப்பவர்கள், எரிபொருள் தட்டுப்பாடு பிரச்னையில் இருந்து தப்பி விட்டனர். ஆனால் ஐசி இன்ஜின் வாகனங்களை வைத்திருப்பவர்களின் நிலைமை மோசமடைந்துள்ளது. இந்தியாவிலும் ஐசி இன்ஜினில் இயங்க கூடிய வாகனங்களை வைத்திருப்பவர்களின் நிலைமை பரிதாபமாகதான் உள்ளது.
பெட்ரோல் மற்றும் டீசலின் மிக அதிகப்படியான விலைதான் இதற்கு காரணம். எனவே இங்கிலாந்தை போல், இந்திய மக்களும் தற்போது எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு அதிக முக்கியத்துவம் வழங்கி வருகின்றனர். இதன் காரணமாக வரும் காலங்களில் இங்கிலாந்தை போன்று இந்தியாவிலும் எலெக்ட்ரிக் வாகனங்களின் பயன்பாடு பெரிய அளவில் அதிகரிக்கும் என அனைவராலும் எதிர்பார்க்கப்படுகிறது.
Note: Images used are for representational purpose only.
-
என்னதான் பைக் காதலரா இருந்தாலும் இதெல்லாம் ஓவருங்க.. நடிகர் ஜான் ஆபிரகாம் வாங்கிய இந்த பைக்கின் விலை இவ்வளவா!!
-
குடும்பத்தோட போறதுக்கு சூப்பர் கார்! ஆஃபரும் அள்ளி குடுக்குறாங்க! ஆனால் சேல்ஸ் சுத்தமா இல்லை ஏன் தெரியுமா
-
கோவையில் இருந்து கேரளாவுக்கு இந்த ரயில்ல போங்க.. எக்ஸ்பீரியன்ஸ் இன்னும் செம்மையா இருக்கும்! அப்படி என்ன ரயில்?