Just In
- 1 hr ago இந்தியாவே இந்த ஸ்கோடா காருக்காக தான் வெயிட்டிங்! விலையை கேட்டா ஆச்சரியப்படுவீங்க!
- 2 hrs ago வெறும் 1 மணி நேரத்தில் சென்னைல இருந்து பெங்களூர் போயிரலாம்! உலகையே மிரள வைக்கும் புல்லட் ரயில் சீறி பாய போகுது
- 2 hrs ago பெட்ரோல் போடுவதை போல ஹைட்ரஜனை நிரப்பிட்டா 3,000 கிமீ நிற்காம போகும்! உலக சாதனை படைத்த ரயில்!
- 4 hrs ago பைக் வாங்கும்போது நம்ம பசங்க தப்பு பண்றது இதில்தான்!! கேடிஎம் பைக்கின் விலையில் கிடைக்கும் 6 பவர்ஃபுல் பைக்ஸ்!
Don't Miss!
- News செ.கு. தமிழரசன் வந்துட்டாரு.. முதல் குறியே பாஜக + நிர்மலா சீதாராமன்தான்.. எடப்பாடி பழனிசாமிக்கு குஷி
- Movies அபிராமியை தீர்த்து கட்ட தயாராகும் ஐஸ்வர்யா.. கார்த்திகை தீபம் இன்றைய எபிசோட்!
- Finance புதிய துறையில் அடியெடுத்து வைத்த கௌதம் அதானி.. இதுவும் குஜராத்துக்கு தான்..!!
- Sports அவங்க 2 பேரும் பேசிட்டு இருந்தாங்க.. நான் குடுகுடுனு பேட்டிங் இறங்கிட்டேன்.. அஸ்வினால் ஷாக்கான RR
- Lifestyle 150 ஆண்டுகளுக்கு முன்னாடியே இந்தியாவின் முதல் செல்பியை தனது மனைவியுடன் எடுத்தது இந்த ராஜாதானாம்..போட்டோ உள்ளே!
- Technology வாவ்.. சும்மா அள்ளுது.. 6000எம்ஏஎச் பேட்டரி.. 50எம்பி கேமரா.. 128ஜிபி மெமரி.. எந்த மாடல்?
- Education சென்னையின் பெருமைமிகு கல்லூரிகளில் ஒன்றாகத் திகழும் டி.ஜி.வைஷ்ணவ் கல்லூரி...!!
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
விவசாயிகளின் நலனிற்காக மாணவர்கள் காட்டிய பெருந்தன்மை... என்னவென்று தெரிந்தால் பெருமைப்படுவீர்கள்...
ஏழை விவசாயிகளின் நலனை காப்பதற்காக நமது மாணவர்கள் பெருந்தன்மை காட்டியுள்ளனர். அது என்னவென்று தெரிந்தால் நீங்கள் பெருமைப்படக்கூடும்.
இந்தியாவின் முதுகெலும்பு விவசாயம்தான் என பெருமை பேசி கொண்டிருக்கிறோம். ஆனால் தற்போதைய நிலையில் நம் நாட்டு விவசாயிகள் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகி கொண்டிருக்கின்றனர். வாழ்க்கை நடத்துவதற்கு தேவையான வருமானம் விவசாயத்தின் மூலம் கிடைக்காததே இதற்கு காரணம்.
விவசாயிகள் சந்திக்கும் முக்கியமான பிரச்னைகளில் ஒன்று பூச்சி தாக்குதல். விவசாய பயிர்களை பூச்சிகள் தாக்குவதால், மகசூல் வெகுவாக குறைந்து விடுகிறது. இதன் காரணமாக போட்ட முதலீடு கூட கிடைக்காமல் விவசாயிகள் நஷ்டத்தை சந்திக்க நேரிடுகிறது.
நமது விவசாயிகள் சந்திக்கும் மற்றொரு பிரச்னை களை. பயிர்களுக்கு இடையே வளரும் வேண்டத்தகாத செடிகள்தான் களை என அழைக்கப்படுகின்றன. பூச்சிகளின் தாக்குதலால் ஏற்படும் நஷ்டத்தை விட களைகளால் ஏற்படும் நஷ்டம்தான் அதிகம் என வேளாண் வல்லுனர்கள் கூறுகின்றனர்.
இதில், முதலாவது பிரச்னையால் பாதிப்பு ஏற்படாமல் இருக்க வேண்டுமானால் பயிர்களுக்கு பூச்சிக்கொல்லி மருந்து தெளிக்க வேண்டும். இரண்டாவது பிரச்னையால் நஷ்டம் அடையாமல் இருக்க களைகளை கண்டறிந்து அகற்ற வேண்டும்.
இதற்கு போதிய அளவிற்கு வேலை ஆட்கள் தேவை. ஆனால் இன்றைய சூழலில் விவசாய பணிகளுக்கு வேலை ஆட்கள் கிடைப்பது என்பது சவாலான காரியமாக உள்ளது. அப்படியே கிடைத்தாலும், முன்பை காட்டிலும் அவர்களுக்கு அதிக சம்பளம் கொடுக்க வேண்டியுள்ளது.
ஏற்கனவே நஷ்டத்தை சந்தித்து வரும் விவசாயிகளால், பணியாளர்களுக்கு அதிகப்படியான சம்பளம் கொடுக்க முடிவதில்லை. இந்த சூழலில் விவசாயிகளின் இந்த பிரச்னைக்கு, நம் நாட்டு மாணவர்கள் அதிநவீன முறையில் தீர்வு கண்டுள்ளனர்.
பஞ்சாப் மாநிலம் ஜலந்தர் நகரில், லவ்லி புரொபஷனல் யுனிவர்சிட்டி (LPU- Lovely Professional University) செயல்பட்டு கொண்டுள்ளது. இப்பல்கலைகழகத்தை சேர்ந்த 45 மாணவர்கள் ஒருங்கிணைந்து, பறக்கும் ட்ரோன் (Drone) ஒன்றை வடிவமைத்துள்ளனர்.
இதற்கு 'பறக்கும் விவசாயி' (Flying Farmer) என பெயரிட்டுள்ளனர். இந்த பறக்கும் ட்ரோனில் உள்ள பல்வேறு வசதிகள் விவசாயிகளின் பிரச்னைக்கு தீர்வாக அமைந்துள்ளன. இந்த ட்ரோன் பயிர்களுக்கு பூச்சிக்கொல்லி மருந்துகளை தெளிக்கும் திறன் வாய்ந்தது.
எங்கெங்கு பூச்சிக்கொல்லி மருந்துகளை தெளிக்க வேண்டும் என்பதை இந்த ட்ரோன் கண்டறிந்து விடும். அத்துடன் பூச்சிக்கொல்லி மருந்துகளையும் சரியாக தெளித்து விடும். இந்த பணியில் மனிதர்களை ஈடுபடுத்தினால், பூச்சிக்கொல்லி மருந்துகள் வீணாவதற்கான வாய்ப்புகள் உள்ளன.
ஆனால் ட்ரோன்கள் ஒரு துளி பூச்சிக்கொல்லி மருந்தை கூட வீணடிக்காது. எவ்வளவு தெளிக்க வேண்டுமோ, அதை மட்டும் சரியாக தெளித்து விடும். இதன்மூலம் பூச்சிக்கொல்லி மருந்துகள் விரயமாவது தடுக்கப்பட்டு, விவசாயிகளுக்கு நன்மை ஏற்படும்.
அத்துடன் பூச்சிக்கொல்லி மருந்து சரியான இடங்களில் தெளிக்கப்படுவதால், மகசூலும் அதிகரிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. இதுதவிர மனிதர்களால் சில சமயங்களில் களைகளை சரியாக கண்டறிய முடியாமல் போய் விடுகிறது.
ஆனால் மாணவர்கள் கண்டறிந்துள்ள இந்த ட்ரோன், கம்ப்யூட்டர் முறையில் ப்ரோகிராம் செய்யப்பட்டது. இதில் உள்ள இன்ஃப்ராரெட் சென்சார்கள் (Infrared Sensors), களைகள் உள்ள இடத்தை மிக துல்லியமாக கண்டறிந்து விடக்கூடிய திறன் வாய்ந்தவை.
இதுதவிர மண்ணின் ஊட்டச்சத்து விகிதத்தை மிக துல்லியமாக கணக்கிட்டு, மகசூலை அதிகரிக்க இந்த ட்ரோன் உதவி செய்யும். அத்துடன் பயிர்கள் சேதாரமாவதை தடுப்பதற்கான வேலைகளையும் இந்த வயர்லெஸ் சென்சார் டிவைஸ் மேற்கொள்ளும் என்பது குறிப்பிடத்தக்கது.
பறக்கும் விவசாயி என பெயர் சூட்டப்பட்டுள்ள இந்த ட்ரோன் ஒரு முறை முழுமையாக சார்ஜ் செய்தால் 25 நிமிடங்கள் இடைவிடாமல் பறக்க கூடிய திறன் வாய்ந்தது. இதன் விலை ரூ.10 ஆயிரம்-ரூ.15 ஆயிரத்திற்குள்தான் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
லவ்லி புரொபஷனல் யுனிவர்சிட்டியின் எலெக்ட்ரானிக்ஸ், மெக்கானிக்கல் மற்றும் வேளாண் பொறியியல் ஆகிய துறைகளை சேர்ந்த 45 மாணவர்கள் ஒருங்கிணைந்து இந்த ட்ரோனை வடிவமைத்துள்ளனர். இதில், மற்றொரு குறிப்பிடத்தகுந்த விஷயமும் அடங்கியுள்ளது.
இந்த ட்ரோனுக்கு காப்புரிமை கோர வேண்டாம் என மாணவர்களும், பல்கலைக்கழக நிர்வாகமும் பெருந்தன்மையுடன் முடிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. விவசாயிகள் யார் வேண்டுமானாலும், மிக குறைவான செலவில் இந்த தொழில்நுட்பத்தை பயன்படுத்தி கொள்ள இது உதவும்.
-
ஒரு புறாவுக்கு இவ்வளவு பெரிய அக்கப்போரா!! இலவச பஸ் டிக்கெட் இருந்தும் பெரிய தொகையை செலவழித்த பாட்டி - பேத்தி!
-
ரிசர்வ் பெட்டியில் கூட்டமா ஏறி டார்ச்சர் பண்ணுறாங்களா? இதை பண்ண சொல்லி ரயில்வே நிர்வாகமே சொல்லிடுச்சு
-
ரோட்டோர ஒர்க் ஷாப்பில் 8 கோடி ரூபாய் ரோல்ஸ் ராய்ஸ் கார்! வாங்கறது பெருசு இல்ல! மெயின்டெயின் பண்றதுதான் பெருசு!