துபாயில், ஆண்டுதோறும் 3,000 சொகுசு கார்கள் அனாதையாக்கப்படும் அவலம்... நடப்பது என்ன?

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் செல்வ வளம் கொழிக்கும் துபாயில், சொகுசு கார்களுக்கான வரவேற்பு உலகறிந்த விஷயம். மேலும், சொகுசு கார்களை தயாரிக்கும் நிறுவனங்களும் துபாய் வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்புகளை மையப்படுத்தியே கார் வடிவமைப்புக்கும், வசதிகளுக்கும் முக்கியத்துவம் கொடுக்கின்றனர்.

அங்கு சாதாரண கார்களைவிட சொகுசு கார்களின் எண்ணிக்கை அதிகமாக இருப்பதும் அதன் செல்வ வளமைக்கு அத்தாட்சி. இந்த செல்வ வளமையினால்தான் சொகுசு கார்களை அலட்சியமாக கைவிடுகிறார்களோ என்று எண்ண தோன்றுகிறது. ஆனால், உண்மை வேறு மாதிரியாக இருக்கிறது.

வாடிக்கையான நிகழ்வு

வாடிக்கையான நிகழ்வு

துபாய் விமான நிலையத்தின் பார்க்கிங் வளாகம் மற்றும் அதனை சுற்றியுள்ள சாலைகளில்தான் அதிகளவில் கார்கள் அனாதையாக விடப்படும் சம்பவங்கள் நடக்கின்றன. கடந்த 5 ஆண்டுகளில் சாலைகளில் அனாதையாக கைவிடப்படும் கார்களின் எண்ணிக்கை வெகுவாக அதிகரித்துவிட்டதாம்.

எக்கச்சக்க கார்கள்...

எக்கச்சக்க கார்கள்...

ஆண்டுக்கு 3,000 சொகுசு கார்கள் வரை சாலைகளில் அனாதையாக விடப்படுகிறதாம். இந்த பிரச்னை துபாய் போலீசாருக்கு தலைவலியை ஏற்படுத்தியுள்ளது.

ஃபெராரியும், போர்ஷேவும்...

ஃபெராரியும், போர்ஷேவும்...

பிஎம்டபிள்யூ, பென்ஸ் மாத்திரமல்ல, போர்ஷே, ஃபெராரி, ரோல்ஸ்ராய்ஸ் போன்ற பெரும் பணக்கார கார்கள் பல சாலைகளில் உரிமையாளர்களால் அனாதையாக விட்டுச் செல்லப்படுகிறது.

மில்லியன் டாலர் கார்

மில்லியன் டாலர் கார்

துபாய் விமான நிலையத்தின் பார்க்கிங் வளாகத்தில் ஒரு மில்லியன் டாலர் மதிப்புடைய ஃபெராரி என்ஸோ கார் கூட அனாதையாக விடப்பட்டு கேட்பாரற்று கிடந்துள்ளது.

காரணம்...

காரணம்...

துபாயில் பின்பற்றப்படும் கடுமையான ஷரியா சட்டம்தான் கார்கள் இவ்வாறு அனாதையாக்கப்படுவதற்கு காரணமாகியிருக்கிறது. ஷரியா சட்டத்திற்கும், கார் அனாதையாக்கப்படுவதற்கும் என்ன தொடர்பு இருக்கிறது. அடுத்த ஸ்லைடில் காணலாம்.

ஜெயில் தண்டனை

ஜெயில் தண்டனை

சொகுசு கார்களை வாங்கும் பலரால் அதற்கான கடனை சரியாக திருப்பி செலுத்த இயலுவதில்லை. ஷரியா சட்டத்தின்படி, கடனை திருப்பி செலுத்தாதவர்களுக்கு சிறை தண்டனை உண்டு. நம்ம ஊர் போன்று கோர்ட்டில் போட்டு இழுத்தடித்துக் கொண்டிருக்க முடியாது.

ஓட்டம்

ஓட்டம்

சொகுசு கார்களை ஆசையாக வாங்கும் சிலரால் அந்த கடனை கட்ட முடியாத நிலை ஏற்படும்போது, சிறை தண்டனைக்கு பயந்து அந்த நாட்டை விட்டே ஓட்டம் பிடித்துவிடுகின்றனராம். இதில், துபாய் வாசிகள் மட்டுமில்லை. அதிக அளவில் வெளிநாட்டுக்காரர்களும் கார் கடனுக்காக ஜெயிலுக்கு போக பயந்து நாட்டை விட்டு எஸ்கேப் ஆகின்றனர். அவ்வாறு எஸ்கேப் ஆகும்போதுதான், விமான நிலையம் அருகில் கார்களை நிறுத்திவிட்டு மாயமாகிவிடுகின்றனர்.

போலீஸ் நோட்டீஸ்

போலீஸ் நோட்டீஸ்

அனாதையாக கிடக்கும் கார் குறித்து போலீசாருக்கு தெரிய வந்தால் உரிமையாளருக்கு நோட்டீஸ் அனுப்பப்படும். சம்பந்தப்பட்ட உரிமையாளர் 15 நாட்களுக்குள் திரும்ப வந்து காரை பெற்றுக் கொள்ள வேண்டும். இல்லையென்றால் காருக்கு ஜெயில்...

கார் ஜெயில்

கார் ஜெயில்

சம்பந்தப்பட்ட உரிமையாளர் 15 நாட்களுக்குள் காரை பெற்றுக் கொள்ளாவிட்டால், நம்மூரில் இருக்கும் ஆடுகளுக்கு பட்டி இருப்பது போன்று, கார்களுக்கான ஜெயில் ஒன்றை வைத்துள்ளனர். அதில் கொண்டுபோய் காரை நிறுத்திவிடுவர். கார் ஜெயிலுக்கு வந்து காரை பெற்றுக் கொள்ளும் வாடிக்கையாளர்கள் வெகு சொற்பமாக தெரிவிக்கப்படுகிறது.

ஏலம்

ஏலம்

கார் ஜெயிலில் இருக்கும் கார்களை குறிப்பிட்ட காலம் வரை உரிமையாளர் பெறவில்லை எனில், ஏலம் விடப்பட்டுவிடும். அப்படி ஏலம் விடப்படும்போது, சில சொகுசு கார்கள் அடிமாட்டு விலைக்கு கூட ஏலம் போகுமாம்.

போலீசாரால் சின்னாபின்னமாகி வரும் கோஹ்லியின் சொகுசு கார்... நடந்தது தெரிந்தால் அதிர்ச்சியடைவீர்கள்...

துபாயில் ஆண்டுதோறும் 3,000 சொகுசு கார்கள் வீணாகி வரும் நிலையில், இந்தியாவில் நட்சத்திர கிரிக்கெட் வீரர் விராட் கோஹ்லியின் சொகுசு கார் ஒன்று போலீசாரால் சின்னாபின்னமாகி வருகிறது. இதன் பின்னணியில் என்ன நடந்தது என தெரிந்தால் நீங்கள் அதிர்ச்சியடைவீர்கள். இதுகுறித்த விரிவான தகவல்களை தொடர்ந்து பார்க்கலாம்.

போலீசாரால் சின்னாபின்னமாகி வரும் கோஹ்லியின் சொகுசு கார்... நடந்தது தெரிந்தால் அதிர்ச்சியடைவீர்கள்...

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோஹ்லி, விலை உயர்ந்த கார்கள் மீது அதிக ஈடுபாடு காட்ட கூடியவர் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒரு விஷயம்தான். ''லக்ஸரி மற்றும் ஸ்போர்ட்ஸ் கார்களுக்கு நான் மிகப்பெரிய ரசிகன்'' என விராட் கோஹ்லியே பல முறை கூறியுள்ளார்.

போலீசாரால் சின்னாபின்னமாகி வரும் கோஹ்லியின் சொகுசு கார்... நடந்தது தெரிந்தால் அதிர்ச்சியடைவீர்கள்...

லக்ஸரி கார்களை உற்பத்தி செய்து வரும் ஆடி நிறுவனத்தின் பிராண்ட் அம்பாஸிடராக விராட் கோஹ்லி உள்ளார். இதன் காரணமாக ஏராளமான ஆடி கார்களை விராட் கோஹ்லி வைத்துள்ளார். இதில், ஆடி ஆர்எஸ்5 (Audi RS5) மற்றும் ஆடி ஆர்எஸ்6 (Audi RS6) ஆகியவை குறிப்பிடத்தகுந்தவை.

போலீசாரால் சின்னாபின்னமாகி வரும் கோஹ்லியின் சொகுசு கார்... நடந்தது தெரிந்தால் அதிர்ச்சியடைவீர்கள்...

அத்துடன் ஆடி ஏ8 எல் (Audi A8 L) மற்றும் ஆடி க்யூ7 (Audi Q7) ஆகிய கார்களும் விராட் கோஹ்லி வசம் உள்ளன. ஆனால் இவை எல்லாவற்றுக்கும் மேலாக, விராட் கோஹ்லியின் அன்புக்குரிய காராக இருந்து வந்தது ஆடி ஆர்8 வி10 (Audi R8 V10) கார்தான். இது 2012ம் ஆண்டு மாடல் கார் ஆகும்.

போலீசாரால் சின்னாபின்னமாகி வரும் கோஹ்லியின் சொகுசு கார்... நடந்தது தெரிந்தால் அதிர்ச்சியடைவீர்கள்...

வெள்ளை நிற ஆடி ஆர்8 வி10 காரில், விராட் கோஹ்லி வலம் வந்ததை பல முறை பார்க்க முடிந்திருக்கிறது. விராட் கோஹ்லியும், வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் வீரர் கிறிஸ் கெய்லும், ஐபிஎல் போட்டிகளில், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்காக ஒன்றாக விளையாடியவர்கள்.

போலீசாரால் சின்னாபின்னமாகி வரும் கோஹ்லியின் சொகுசு கார்... நடந்தது தெரிந்தால் அதிர்ச்சியடைவீர்கள்...

நெருங்கிய நண்பர்களான இருவரும் ஆடி ஆர்8 வி10 காரில் ஒரு முறை டெல்லி நகர சாலைகளில் வலம் வந்து ஆச்சரியத்தை ஏற்படுத்தினர். இது விராட் கோஹ்லியின் கார்தான். கிறிஸ் கெய்லை ஏற்றிக்கொண்டு, விராட் கோஹ்லிதான் காரையும் ஓட்டி சென்றார். அந்த வீடியோவை நீங்கள் கீழே காணலாம்.

இதுதவிர ரேஸ் டிராக்குகளுக்கும் கூட தனது ஆடி ஆர்8 வி10 காரை விராட் கோஹ்லி எடுத்து சென்றுள்ளார். உத்தர பிரதேச மாநிலம் கிரேட்டர் நொய்டாவில் உள்ள புத்தா இன்டர்நேஷனல் சர்க்யூட்டிற்கு (BIC-Buddh International Circuit) ஒரு முறை தனது ஆடி ஆர்8 வி10 காரில் விராட் கோஹ்லி வந்தார்.

போலீசாரால் சின்னாபின்னமாகி வரும் கோஹ்லியின் சொகுசு கார்... நடந்தது தெரிந்தால் அதிர்ச்சியடைவீர்கள்...

தற்போது இந்தியாவில் இருக்கும் ஒரே ஒரு பார்முலா 1 (Formula One) ரேஸ் டிராக் இது மட்டும்தான் என்பது குறிப்பிடத்தக்கது. அப்போது விராட் கோஹ்லி மற்றும் அவரது அன்புக்குரிய ஆடி ஆர்8 வி10 காரின் புகைப்படங்கள் சமூக வலை தளங்களில் வைரலாக பரவின.

போலீசாரால் சின்னாபின்னமாகி வரும் கோஹ்லியின் சொகுசு கார்... நடந்தது தெரிந்தால் அதிர்ச்சியடைவீர்கள்...

ஆனால் விராட் கோஹ்லி பயன்படுத்திய ஆடி ஆர்8 வி10 கார், மும்பையில் உள்ள போலீஸ் ஸ்டேஷன் ஒன்றில் நின்று கொண்டிருக்கும் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. அங்கு தூசு படிந்து, பார்ப்பதற்கே பரிதாபகரமான நிலையில் நின்று கொண்டிருக்கிறது விராட் கோஹ்லியின் ஆடி ஆர்8 வி10 கார்.

போலீசாரால் சின்னாபின்னமாகி வரும் கோஹ்லியின் சொகுசு கார்... நடந்தது தெரிந்தால் அதிர்ச்சியடைவீர்கள்...

நடந்தது இதுதான். விராட் கோஹ்லி தனது ஆடி ஆர்8 வி10 காரை, புரோக்கர் ஒருவர் மூலமாக, சாஹர் தாக்கர் எனும் ஷாஹி என்பவருக்கு, கடந்த 2016ம் ஆண்டு விற்பனை செய்தார். இந்த காரின் உண்மையான விலை சுமார் 2.5 கோடி ரூபாய். ஆனால் 60 லட்ச ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.

போலீசாரால் சின்னாபின்னமாகி வரும் கோஹ்லியின் சொகுசு கார்... நடந்தது தெரிந்தால் அதிர்ச்சியடைவீர்கள்...

விராட் கோஹ்லியிடம் இருந்து காரை வாங்கி சாஹர் தாக்கர், தனது காதலிக்கு பிறந்த நாள் அன்பளிப்பாக வழங்கினார். ஆனால் பின்நாட்களில் இந்தியா முழுக்க பெரும் புயலை கிளப்பிய கால் சென்டர் முறைகேடு குற்றச்சாட்டு ஒன்றில் சாஹர் தாக்கர் சிக்கினார்.

போலீசாரால் சின்னாபின்னமாகி வரும் கோஹ்லியின் சொகுசு கார்... நடந்தது தெரிந்தால் அதிர்ச்சியடைவீர்கள்...

இந்த வழக்கு தொடர்பான விசாரணையின் போது, ஆடி ஆர்8 வி10 கார் மும்பை போலீசாரால் அதிரடியாக பறிமுதல் செய்யப்பட்டது. போலீசாரால் கார் பறிமுதல் செய்யப்பட்ட சமயத்தில், ஓனர்ஷிப் மாற்றம் செய்யப்படாமல் விராட் கோஹ்லியின் பெயரில் இருந்தது பரபரப்பை கூட்டியது.

போலீசாரால் சின்னாபின்னமாகி வரும் கோஹ்லியின் சொகுசு கார்... நடந்தது தெரிந்தால் அதிர்ச்சியடைவீர்கள்...

எனவே விராட் கோஹ்லியும் சர்ச்சையில் சிக்கினார். ஆனால் விராட் கோஹ்லி தனது ஆடி ஆர்8 வி10 காரை சாஹர் தாக்கருக்கு விற்பனை செய்ததும், அதன் பெயர் மாற்றம் செய்யப்படாமலேயே பயன்படுத்தப்பட்டு வந்ததும், போலீசாரின் விசாரணையில் கண்டறியப்பட்டது.

போலீசாரால் சின்னாபின்னமாகி வரும் கோஹ்லியின் சொகுசு கார்... நடந்தது தெரிந்தால் அதிர்ச்சியடைவீர்கள்...

விசாரணை முடிவில், சாஹர் தாக்கரின் மோசமான நடவடிக்கைகள் எதையும் விராட் கோஹ்லி அறிந்து வைத்திருக்கவில்லை என்பதை மும்பை போலீசார் கண்டறிந்து அறிவித்தனர்.

போலீசாரால் சின்னாபின்னமாகி வரும் கோஹ்லியின் சொகுசு கார்... நடந்தது தெரிந்தால் அதிர்ச்சியடைவீர்கள்...

முன்னதாக போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்ட ஆடி ஆர்8 வி10 கார், போலீஸ் ஸ்டேஷனுக்கு கொண்டு செல்லப்பட்டது. தற்போது வரை அந்த கார் அங்கேயேதான் உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தனக்கு உரிய அழகை இழந்து கவலைக்கிடமான நிலையில் நின்று கொண்டிருக்கிறது அந்த கார்.

போலீசாரால் சின்னாபின்னமாகி வரும் கோஹ்லியின் சொகுசு கார்... நடந்தது தெரிந்தால் அதிர்ச்சியடைவீர்கள்...

ஆடி ஆர்8 வி10 போன்ற ஒரு அருமையான ஸ்போர்ட்ஸ் கார், போலீஸ் ஸ்டேஷனில் வீணாகி வருவது ஆட்டோமொபைல் ஆர்வலர்களுக்கு கவலையை ஏற்படுத்தியுள்ளது. இப்படி ஒரு காட்சியை காண்பது என்பது ஆட்டோமொபைல் ஆர்வலர்களை பொறுத்தவரை கொடுமையானது.

போலீசாரால் சின்னாபின்னமாகி வரும் கோஹ்லியின் சொகுசு கார்... நடந்தது தெரிந்தால் அதிர்ச்சியடைவீர்கள்...

அப்படி இருக்கையில் அதனை கண்ணும் கருத்துமாக கவனித்து வந்த விராட் கோஹ்லியும் நிச்சயம் கவலை அடைந்திருப்பார். கிறிஸ் கெய்ல் உடன் டெல்லியில் நகர் வலம், புத்தா சர்வதேச சர்க்யூட் பயணம் என இந்த கார் கொடுத்த நினைவுகளை விராட் கோஹ்லியால் அவ்வளவு எளிதாக மறந்து விட முடியாது.

போலீசாரால் சின்னாபின்னமாகி வரும் கோஹ்லியின் சொகுசு கார்... நடந்தது தெரிந்தால் அதிர்ச்சியடைவீர்கள்...

இந்தியாவில் பல்வேறு காரணங்களுக்காக பறிமுதல் செய்யப்படும் வாகனங்கள், போலீஸ் ஸ்டேஷன்களுக்கு கொண்டு சென்று நிறுத்தப்படுகின்றன. ஆனால் அவை அங்கு யாருக்கும் பயன்படாமல் சிதிலமடைந்து விடுகின்றன. இதில், விலை உயர்ந்த வாகனங்களும் அடக்கம்.

எனவே இப்படிப்பட்ட வாகனங்கள் எதையும் வீணாக விடாமல், உடனடியாக ஏலம் மூலம் விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கலாம். இதன்மூலம் காவல் துறைக்கும் கணிசமான வருமானம் கிடைக்கும். அத்துடன் ஆட்டோமொபைல் ஆர்வலர்களுக்கு குறைந்த விலையில் நல்ல வாகனமும் கிடைக்கும்.

Source: Business Insider

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #offbeat
English summary
Police have been finding thousands of cars over the last five plus years abandoned at airports, streets and other areas near by the airport in Dubai. So why are people leaving their luxury cars at the airports in Dubai?
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X