Just In
- 40 min ago பைக் வாங்கும்போது நம்ம பசங்க தப்பு பண்றது இதில்தான்!! கேடிஎம் பைக்கின் விலையில் கிடைக்கும் 6 பவர்ஃபுல் பைக்ஸ்!
- 1 hr ago ரூ2.11 லட்சம் செலவு செய்தது கணவன் முகத்துல இதை பார்க்க தான்! கல்யாணத்தன்று மணப்பெண் செய்த சம்பவம்!
- 2 hrs ago 20ஆண்டுகள் கழித்து தன்னுடைய அடையாளத்தை மாற்றிய லம்போர்கினி! இந்த லோகோவோட அழகுக்கே நிறையபேரு காரை வாங்க போறாங்க
- 4 hrs ago கார் வாங்குவதிலும் ஆணுக்கு இணையாக பெண்கள்!! புள்ளி விபரம் என்ன சொல்லுது? எந்த ஊரில் அதிகம்?
Don't Miss!
- News மாமியாரை ஒரே எத்து.. அலேக்கா "தூக்கி" குப்பை தொட்டியில் போட்டாச்சு.. அந்த மகராசியின் பெயர் "லட்சுமி"
- Finance தங்கம் விலை ஓரே நாளில் 1400 ரூபாய் உயர்வு.. முதல் முறையாக ரூ.51000 தொட என்ன காரணம்..?
- Lifestyle ஆப்பிள் சீடர் வினிகருடன் இந்த ஒரு பொருளை கலந்து குடிச்சா மாரடைப்பும் வராது.. இதய அடைப்பும் சரியாகும் தெரியுமா?
- Education சென்னையின் பெருமைமிகு கல்லூரிகளில் ஒன்றாகத் திகழும் டி.ஜி.வைஷ்ணவ் கல்லூரி...!!
- Movies சச்சின் டெண்டுல்கர் மகளுக்கே அல்லு அர்ஜுனை புடிச்சிருக்கே.. மெழுகு சிலை போட்டோவுடன் வெளியான போஸ்ட்!
- Technology அம்மா வாங்க.. ஐயா வாங்க! கிட்டத்தட்ட பாதி விலை டிஸ்கவுண்ட்.. Amazon-ல் கூவிக்கூவி விற்கப்படும் ஐந்து 4K TVகள்!
- Sports முட்டாள்தனம்.. என்னையா டீமை விட்டு விரட்டி விட்டீங்க.. ஐபிஎல் அணியை கதற விட்ட ஆவேஷ் கான்
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
திபெத்தில் முதல் புல்லட் ரெயில் சேவையை துவங்கி அழகு பார்க்கும் சீனா!! அருணாச்சல பிரதேசத்திற்கு அருகாமையில்
திபெத்தில் முதல் புல்லட் ரெயில் சேவையை சீனா கொண்டுவந்துள்ளது. நமது அருணாச்சல பிரதேசத்திற்கு மிக அருகில் கட்டமைக்கப்பட்டுள்ள இந்த புல்லட் ரெயில் சேவையை பற்றி இந்த செய்தியில் பார்ப்போம்.
இந்தியா- சீனா இடையே ஏற்கனவே எல்லை பிரச்சனை இருப்பது உங்கள் எல்லோர்க்குமே நன்றாகவே தெரியும். சீனாவுடன் நாம் பகிர்ந்துள்ள எல்லை சிறியது தான், என்றாலும் நமக்கு வடகிழக்கில் எல்லை நாடுகளாக உள்ளவைகளை சீனா தானே தனது கட்டுப்பாட்டில் வைத்துள்ளது.
அவ்வாறு சீனாவின் கட்டுப்பாட்டில் உள்ள திபெத் நாட்டில் புல்லட் ரெயில் சேவை நாட்டிலேயே முதல்முறையாக துவங்கப்பட்டுள்ளது. இந்த ரெயில் சேவையை துவங்கி வைத்திருப்பதும் சீனா தான்.
திபெத் தலைநகர் லாசாவையும், எல்லை நகரமான யிங்சியையும் இணைக்கும் விதத்தில் இந்த புல்லட் ரெயில் சேவை வடிவமைக்கப்பட்டுள்ளது. சுமார் 435.5 கிமீ தொலைவிலான இந்த புல்லட் ரெயில் வழிதடத்தில் சேவை நேற்று (ஜூன் 25) முதல் துவங்கப்பட்டுள்ளது.
சீனாவில் ஆளுங்கட்சியாக இருக்கும் கம்யூனிஸ்ட் கட்சியின் நூறாண்டு நிறைவு வருகிற ஜூலை 1ஆம் தேதி வெகு விமர்சையாக கொண்டாடப்பட உள்ளது. இந்த கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாகவே தற்போது திபெத்தில் இந்த புல்லட் ரெயில் சேவை துவங்கப்பட்டுள்ளது.
இத்துடன் சீனா தனது கொண்டாட்டத்தை நிறுத்தி கொள்ள போவதில்லை. அதிபர் ஜி ஜின்பிங் சீனாவின் முக்கிய வர்த்தக நகரமான சிசுவான் பகுதியில் இருந்து திபெத்தின் யிங்சி நகர் வரையிலான புல்லட் ரெயில் திட்ட பணிகளை விரைந்து முடிக்கும்படி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.
சீனாவின் சிசுவான் மாகாணத்தின் தலைநகரமான செங்சூடு நகரத்தில் இருந்து துவங்கவுள்ள இந்த புதிய புல்லட் ரெயில் திட்டம், யான் மற்றும் காம்டோ வழியாக திபெத் நாட்டிற்குள் நுழைந்து லாசா வரை செல்கிறது. இதன் மூலம் செங்குடு- லாசா வரையிலான பயணம் 48 மணிநேரத்தில் இருந்து 13 மணிநேரமாக குறையும்.
எல்லை உரிமைகளை பாதுகாப்பதில் இந்த புதிய ரெயில் பாதை முக்கிய பங்கு வகிக்கும் எனவும் சீன அதிபர் தெரிவித்துள்ளார். தற்போது புல்லட் ரெயில் சேவை துவங்கப்பட்டுள்ள யிங்சி பகுதி, இந்திய எல்லை மாநிலமான அருணாச்சலப் பிரதேச எல்லையை ஒட்டி உள்ள நகரம் ஆகும்.
சீனா, திபெத் நாட்டில் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தி வருவதுடன், எல்லை நகரங்களில் உட்கட்டமைப்பை மேம்படுத்தி வருகிறது. இந்தியா -சீனா இடையில் ஏற்கனவே சில பிரச்சனைகள் உள்ளதால், இந்த புல்லட் ரெயில் சேவையை சீனா துவங்கியிருப்பது பல்வேறு சந்தேகங்களை கிளப்பியுள்ளது.
-
ரோட்டோர ஒர்க் ஷாப்பில் 8 கோடி ரூபாய் ரோல்ஸ் ராய்ஸ் கார்! வாங்கறது பெருசு இல்ல! மெயின்டெயின் பண்றதுதான் பெருசு!
-
இந்த விமான நிலையம் மும்பை நகரத்தை விட பெருசு... எங்கு அமைந்துள்ளது? அதன் அளவு என்ன?
-
தேர்தல் அதிகாரி சோதனை செய்யாமல் விட்ட எம்எல்ஏ காரில் சட்டவிரோதமாக இவ்வளவு விஷயங்கள் இருந்ததா?