Just In
- 1 hr ago அன்-ரிசர்வ் இரயில் பெட்டியை எல்லாம் அகற்ற வேண்டிய நேரம் வரும்!! பிரதமர் உறுதியா கூறியிருக்காரு!
- 2 hrs ago இந்தியாவிலேயே இப்படி ஒரு இடம் கிடையாது! 15 மாடி கார் பார்க்கிங் ரெடி!
- 4 hrs ago இனிமே விமானத்தில் பறக்கும்போது போரடிக்காது.. புதிய சேவையை பயன்பாட்டுக்கு கொண்டு வரும் இன்டிகோ!
- 10 hrs ago பஜாஜ் நிறுவனத்தை உலகமே திரும்பி பாக்க போகுது! இப்படி ஒரு டூவீலரை இதுக்கு முன்னாடி யாருமே கொண்டு வந்தது இல்ல!
Don't Miss!
- News ஏசி ராத்திரியெல்லாம் ஓடுதா? நீங்க AC யூஸ் பண்ணும்போது, இந்த 5 மேட்டரை நோட் பண்ணுங்க.. பெஸ்ட் டிப்ஸ்
- Technology TDS முழுசா வேணுமா? அப்போ உங்க PAN கார்டுல இது முக்கியம்.. உடனே செஞ்சிடுங்க.. Income Tax-ன் திடீர் உத்தரவு!
- Movies டெய்லர் ஸ்விஃப்டுடன் கச்சேரி நடத்தப் போகிறாரா ஏ.ஆர். ரஹ்மான்?.. அந்த விருது வேற கிடைச்சிருக்கே!
- Lifestyle தோசை மாவு இல்லையா? வேர்க்கடலையை வெச்சு இப்படி தோசை சுடுங்க.. வேற லெவல் டேஸ்ட்ல இருக்கும்..
- Sports தோனி கிடையாது! இந்த 28 வயது வீரர் தான் மிகவும் அபாயகரமான வீரர்.. மேத்தீவ் ஹைடன் கருத்து
- Finance சிங்கம் போல் களமிறங்குகிறது BSNL.. டிசிஎஸ் உடன் மாஸ் திட்டம்..!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
கொரோனா தீவிரத்திலும் அதிரடி வேட்டை.. 11 ஆயிரம் பேருக்கு ஆப்பு வைத்த தமிழக காவல்துறை...
கொரோனா வைரஸின் தீவிரம் உச்சமடைந்து வரும் நிலையிலும் தமிழக போலீஸார் தங்களின் அதிரடி வேட்டையைத் தொடர்ச்சியாக மேற்கொண்டு வருகின்றனர். இதுகுறித்த கூடுதல் தகவலை இந்த பதிவில் காணலாம்.
கொரோனா வைரஸ் அச்சத்தின் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு (144 தடை) உத்தரவு அமலுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது. இது வருகின்ற 14ம் தேதி வரை செயல்பாட்டில் இருக்கும். இந்த நேரத்தில் அத்தியாவசிய தேவையைகளைத் தவிர்த்து வேறெதற்காகவும் வெளியே வரக்கூடாது என மத்திய மற்றும் மாநில அரசுகள் அறிவித்துள்ளன. இதனால், பலர் பணிக்கு செல்ல முடியாமல் வீட்டுக்குள்ளேயே முடங்கிக் கிடக்கும் சூழல் ஏற்பட்டிருக்கின்றது.
மக்களை கொரோனாவிடம் இருந்து காக்கும் நோக்கிலேயே இந்த தேசிய ஊரடங்கு உத்தரவை அரசு அமல்படுத்தியுள்ளது. இருப்பினும், ஒரு சிலர் சாலையில் சுற்றித் திரிந்த வண்ணமே இருக்கின்றனர். இதனால், அரசின் நோக்கம் கேள்விக்குறியாகி இருக்கின்றது. குறிப்பாக, கொரோனாவின் தீவிரத்தை உணராத சிலர் மட்டுமே இத்தகைய செயலில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையே நாட்டின் அனைத்து மாநிலங்களும் தற்போது அரங்கேறி வருகின்றது.
ஆகையால், விதிமீறுவோர்மீது அந்தந்த மாநில காவல்துறையினர் அதிரடி நடவடிக்கையை மேற்கொண்டு வருகின்றனர்.
நடவடிக்கை மட்டுமின்றி கொரோனா குறித்த விழிப்புணர்வு பிரச்சாரங்களையும் அவர்கள் செய்து வருகின்றனர். அந்தவகையில், தமிழக காவல்துறையினர் தேசிய ஊரடங்கு முடியும் வரை மக்கள் வெளியே வரவேக் கூடாது என்ற நோக்கில் சில கடுமையான நடிவடிக்கைகளை மேற்கொள்ள ஆரம்பித்துள்ளனர்.
அதன்படி, தேவையற்ற நிலையில் வெளியே சுற்றி திரிபவர்கள்மீது வழக்கு பதிவு செய்தல் மற்றும் வாகனங்களைப் பறிமுதல் செய்தல் உள்ளிட்ட பல்வேறு கடுமையான நடவடிக்கைகளை தமிழக காவல்துறை எடுத்து வருகின்றது.
அந்தவகையில், தேசிய ஊரடங்கு அறிவிக்கப்பட்ட நான்கு நாட்களில் மட்டும் 17,668 பேர்மீது தடை மீறி வெளியேச் சுற்றித் திரிந்ததாக தமிழக போலீஸ் கைது செய்திருக்கின்றது.
தொடர்ந்து, இதுவரை 11,565 வாகனங்களைப் போலீஸார் பறிமுதல் செய்துள்ளனர். மேலும், 14,815 பேர் மீது பல்வேறு பிரிவுகளின் வழக்கு பதிவு செய்துள்ளனர். இந்த புள்ளி விவரங்கள் வரும் காலங்களில் அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இதுமட்டுமின்றி இந்த தேசிய ஊரடங்கு நாட்களில் பொதுமக்களிடம் அபராதமாக ரூ. 4.8 லட்சம் வரை வசூலித்திருப்பதாக தமிழக காவல்துறை அறிவித்துள்ளது.
மேற்கூறியவற்றில், சென்னையில் மட்டும் 307 வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன. மேலும், 218 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இத்துடன், சில இடங்களில் போலீஸார் வீணாக சுற்றி திரியும் இளைஞர்கள் மீது சரமாரி தாக்குதல் மேற்கொண்டு வருகின்றனர். இந்த நடவடிக்கையில் சில நேரங்களில் பணி முடித்து வீடு திரும்பும் மருத்துவர்கள் மற்றும் அத்தியாவசிய தேவைக்காக வெளியே செல்லும் பொதுமக்களும் சிக்கி விடுகின்றனர்.
ஏற்கனவே கொரோனாவின் தீவிரம் ஒரு பக்கம் மக்களை அச்சுறுத்தி வருகின்ற வேலையில், மறுபக்கம் போலீஸாரின் அதிரடி நடவடிக்கைகள் மேலும் கூடுதல் அச்சத்தையும், கவலையையும் ஏற்படுத்தியிருக்கின்றது.
இதற்கு விளக்குமளிக்கும் போலீஸார், "இளைஞர்கள் பலர் தேசிய ஊரடங்கை மீறும் வகையில் சுற்றி திரிந்த காரணத்தினாலயே இத்தகைய நடவடிக்கைகள் மேற்கொண்டிருப்பதாக" தெரிவிக்கின்றனர்.
அதேசமயம், பெரும்பாலான வாகன ஓட்டிகளிடம் போலீஸார் எந்தவொரு கேள்வியையும் எழுப்பாமலே உடனடியாக அபராதம் மற்றும் தாக்குதல் போன்ற நடவடிக்கையில் இறங்கிவிடுவதாக வாகன ஓட்டிகள் தரப்பில் புகார்கள் எழுந்த வண்ணமும் இருக்கின்றது.
இதே நடவடிக்கையில்தான் நாடு முழுவதும் உள்ள காவல்துறையினர் கையாண்டு வருவதாக பரவலாக புகார்கள் எழுந்த வண்ணம் இருக்கின்றது. அந்தவகையில், சமீபத்தில் சென்னை புளியந்தோப்பு பகுதியில் அத்தியாவசிய பணிக்காக வெளியேச் சென்று திரும்பிய இளைஞரை போலீஸார் இடை மறித்து தாக்கிய சம்பவம் அரங்கேறியிருந்தது.
இதன் பின்னர் போலீஸார் அந்நபரை தனியாக வரவழைத்து மன்னிப்பு கேட்டு வீடியோ வெளியிட்டிருந்தனர். மேலும், வெளியேச் செல்லும்போது பாதுகாப்பு செல்லும்படி அறிவுறுத்தி அவருக்கு கிருமி நாசினி மற்றும் முகமூடிகளை காவலர்கள் வழங்கினர். இதுகுறித்த வீடியோ சமூக வலைதள பக்கத்தில் தற்போது வைரலாகி வருகின்றது.
போலீஸாரின் இந்த கடுமையான நடவடிக்கையின் காரணமாக மக்கள் தற்போது வெளியே வரவே அஞ்சுகின்றனர். சிலர் தங்களின் அத்தியாவசிய தேவைகளைக்கு கூட வெளியே வர தயங்குகின்றனர்.
-
கியா களமிறக்கும் புது எலெக்ட்ரிக் காரின் விலை இவ்ளோதானா! பெட்டி கடைல கடலை மிட்டாய் விக்கற மாதிரி விக்க போகுது!
-
இந்தியாவை தாண்டினால் டாடா கார்களுக்கு மவுசு கிடையாது!! 5-ஸ்டார் ரேட்டிங் கார்களுக்கு இப்படியொரு நிலைமையா!
-
இந்தியால ஒரு ஃபோக்ஸ்வேகன் கார் இந்தளவிற்கு சேல்ஸ் ஆகுதா! மாருதிக்குலாம் இந்நேரம் குளிர் காச்சலே வந்திருக்கும்!