Just In
- 1 hr ago போன தடவ சிவப்பு நிற சைக்கிள்.. இந்த முறை இன்னோவா கார்.. இந்த கார் வாயிலாக அவர் என்ன சொல்லியிருக்கார்?
- 1 hr ago ஹெல்மெட் போடாமல் பைக்கில் போன விஜய் சேதுபதி! ஓட்டு போட வந்த இடத்தில் மானமே போச்சு!
- 2 hrs ago நடிகர் தனுஷ் ஓட்டு போட வந்த காரின் விலை என்ன தெரியுமா? இவ்வளவு காஸ்ட்லியான காரா இது?
- 3 hrs ago இந்திய நிறுவனம் தயாரிச்ச வண்டியா இது? முழுக்க முழுக்க மின்சாரத்தில் இயங்கும்! ஹல்க்கைவிட அதிக எடையை சுமக்கும்!
Don't Miss!
- Movies இந்த ஒற்றுமையை நோட் பண்ணீங்களா?.. ஸ்டார் நடிகர்கள் ஒரே மாதிரி வந்து ஓட்டுப் போட்டு இருக்காங்களே!
- Finance AC வாங்கப் போறிங்களா? இந்த தவறை பண்ணிடாதீங்க.. முதல்ல இதை நோட் பண்ணுங்க!
- News சென்னைக்கு வரப்போகும் புல்லட் ரயிலை விடுங்க.. அதைவிட சிறப்பான சூப்பர் சம்பவம் இருக்கு.. இதை பாருங்க
- Sports இதுதான் கிரிக்கெட்.. அஷுதோஷ் சர்மாவிடம் கற்றுக் கொள்ள ஆவலாக உள்ளேன்.. சூர்யகுமாரே சொல்லிட்டாரு!
- Lifestyle இந்தியாவில் இன்றும் ராஜவாழ்க்கை வாழும் அரச குடும்பங்கள்..இவங்களுக்கு எங்க இருந்து இவ்வளவு பணம் வருது தெரியுமா?
- Technology புது ரூல்ஸ்.. தேர்தல் முடிந்ததும் அமல்.. இனி 24 மணி நேரம் தான்.. ரயில் டிக்கெட் சேவையில் 2 பெரிய மாற்றங்கள்!
- Travel சென்னையிலிருந்து சம்மர் ஸ்பெஷல் வந்தே பாரத் ரயில்கள் – திருச்சி, மதுரை, நாகர்கோவில்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
வாகன சோதனையில் தகாத முறையில் பேசிய காவலர்? வெளுத்து வாங்கிய இளைஞர் - வைரல் வீடியோ..!!
வாகன சோதனையில் தகாத முறையில் பேசிய காவலர்? வெளுத்து வாங்கிய இளைஞர் - வைரல் வீடியோ..!!
இருசக்கர வாகன ஓட்டிகளுக்கும், காவல்துறையினருக்கும் எப்போதும் ஏழாம் பொருத்தம் தான். வாகன சோதனையின் போது ஆங்காங்கே உரசல்களும், சர்ச்சைகளும் எழுவது வாடிக்கையாக நடந்து வருகிறது.
காரில் பயணிப்போரைக்காட்டிலும் இருசக்கர வாகனங்களில் செல்வோரே காவல்துறையினருக்கு இலக்காகி வருகின்றனர் என்ற கருத்து முன்வைக்கப்படுகிறது.
மேலும் வாகனத்தணிக்கை என்ற பெயரில் காவல்துறையினர் அப்பாவி பொதுமக்களிடம் அடாவடியாக நடந்துகொள்கின்றனர் என்றும் கையூட்டு பெருகின்றனர் என்றும் பரவலான குற்றச்சாட்டு கூறப்படுகிறது.
தமிழகம் உட்பட இந்தியா முழுவதும் இதே நிலை தான். வாகன தனிக்கையின் போது விபரீதமான சில சம்பவங்களும் சமீபகாலத்தில் நிகழ்ந்துள்ளது நினைவுகூறத்தக்கது.
கடந்த ஆண்டு சென்னை கே.கே.நகர் பகுதியில் வாகன தனிக்கையின் போது பைக்கில் சென்ற இளைஞர்களை மறிப்பதற்காக காவல் அதிகாரி ஒருவர் ஓட்டுநரை லத்தியால் அடித்ததில் நிலைதடுமாரி செண்டர்மீடியனில் இருந்த கம்பி மீது விழுந்ததில் இளைஞர் ஒருவர் குடல் சரிந்து பலியானார்.
இதனைக் கண்டித்து அங்கு சாலைமறியல் செய்யப்பட்டது, சம்பவத்தில் ஈடுபட்ட காவல் அதிகாரி பொதுமக்களால் தாக்கப்பட்டார். இச்சம்பவம், காவல்துறையினர் மீதான கொந்தளிப்பை வெளிக்காட்டுவதாக இருந்தது.
பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து தற்போது காவல்துறையினர் மீதான வெறுப்புணர்வை வெளிப்படுத்தும் வகையில் மற்றொரு சம்பவம் அரங்கேறியுள்ளது.
காவல்துறையின் அடாவடியை வெளிப்படுத்தும் வகையில் முகநூலில் பகிரப்பட்டுள்ளது ஒரு வீடியோ. அதில் இளைஞர் ஒருவர் காவலர் ஒருவரை சரமாரியான வார்த்தைகளால் துளைத்து எடுக்கிறார்.
பொள்ளாச்சி அருகே நடந்ததாக சித்தரிக்கப்படும் இந்த வீடியோவில், வாகன ஓட்டி ஒருவருக்கு காவலர்கள் 100 ரூபாய் அபராதம் விதித்ததாகவும், அதனைத் தொடர்ந்து காவலர் ஒருவர் அந்த வாகன ஓட்டியிடம் மரியாதை குறைவான வார்த்தைகளை பிரயோகித்ததாகவும் தெரியவருகிறது.
உதவி-ஆய்வாளர் மற்றும் காவலர்கள் சூழ்ந்த அந்த இடத்தில் பொதுமக்கள் முன்னிலையில், அந்த இளைஞர் காவலர் ஒருவரை வெளுத்து வாங்கியுள்ளார். அருகில் இருந்த ஒருவர் இந்த சம்பவத்தை மொபைலில் படம்பிடித்த பேஸ்புக்கில் பதிவேற்றியுள்ளார்.
தவறு காவலர்கள் மீதா? அல்லது அந்த இளைஞர் மீதா என தெளிவான தகவல் இல்லாத நிலையில் தற்போது இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.
இச்சம்பவம் குறித்து அதிகாரப்பூர்வ தகவல்கள் டிரைவ் ஸ்பார்க் தளத்தில் விரைவில் வெளிக்கொண்டுவரப்படும். சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ள அந்த வீடியோவை மேலே உள்ள ஸ்லைடரில் காணுங்கள்.
-
ஒருத்தர், ரெண்டு பேர் இல்ல, ஒரு குடும்பத்தையே ஏற்றி செல்லலாம்!! ரூ.11.40 லட்சத்தில் கிடைக்கும் பொலேரோ கார்...
-
பெத்த குழந்தையை நடுரோட்டில் இப்படியா செய்வது? கொஞ்சம் மிஸ் ஆகினால் எல்லாமே காலி!!
-
மஹிந்திராவோட இந்த புதிய காரை எல்லாரும் லட்டு மாதிரி அள்ளிட்டு போக போறாங்க.. புதிய டீசர் என்ன சொல்லுது?..