Just In
- 1 hr ago உலகின் தலை சிறந்த கார் எது தெரியுமா? விருதை தட்டி சென்ற கியா தயாரிப்பு! சும்மா ஒன்னும் இதை தூக்கி கொடுத்திடல..
- 2 hrs ago மேட்-இன் தமிழ்நாடு... தரத்தில் எந்த குறையும் இருக்காது!! மொத்தமும் எலக்ட்ரிக் தான்!
- 3 hrs ago பிரசார வேனை சொகுசு பங்களா போல செட்டப் செய்த கமலஹாசன்! இதை பார்க்கவே கூட்டம் குவியுமே!
- 4 hrs ago கண்ண மூடிட்டு ஹோண்டா டூவீலர்களை வாங்கும் இந்தியர்கள்! இந்த விஷயம் தெரிஞ்சா விடிஞ்சதும் ஷோரூம்லதான் இருப்பீங்க!
Don't Miss!
- News பொத்தென விழுந்த மேற்கூரை.. 3 பேரை அமுக்கி கொன்ற சென்னை பப் விபத்து பற்றி காவல்துறை விளக்கம்
- Sports ரிஷப் பண்ட்க்கு 2 முறையும் லக் இல்ல.. தொடர்ந்து 2வது வெற்றியை பெற்ற ராஜஸ்தான்.. ரியான்,ஆவேஷ் அபாரம்
- Lifestyle வரப்போகிற சூரிய கிரகணம் இந்த 4 ராசிக்காரங்களுக்கு பெரிய துரதிர்ஷ்டத்தை தரப்போகுதாம்..ரொம்ப ஜாக்கிரதையா இருங்க!
- Movies Cooku with comali 5: புது கோமாளிகளுடன் களமிறங்கும் குக் வித் கோமாளி 5 -ஆங்கர் ரக்ஷன் சம்பளம் இவ்வளவா
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
- Technology குறைஞ்சது 4 -5 நாள் ஆகும்.. கடைசி நேரத்துல அலையாதீங்க.. Voter ID-க்கான முக்கிய வேலை.. உடனே செஞ்சிடுங்க!
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
உரிய ஆவணம் இன்றி இயங்கிய டேக்ஸி பைக்குகள் பறிமுதல்: சென்னையில் காவல்துறை அதிரடி!
சென்னையில் உட்பட பல்வேறு பகுதிகளில் உரிய ஆவணங்கள் இன்றி இயங்கி வந்த 18க்கும் மேற்பட்ட கால் டேக்ஸி பைக்குகளை போக்குவரத்துறையினர் பறிமுதல் செய்தனர்.
சென்னை உட்பட பல்வேறு முக்கிய நகரங்களில் கால் டேக்ஸி சேவை இயக்கப்பட்டு வருகின்றது. இந்த சேவை மூலம் விரும்பிய இடத்திற்கு பயணம் செய்ய, ஆன்லைன் அல்லது மொபைல் ஆப் மூலம் வாகனங்களை புக் செய்து கொள்ளலாம். அதன்படி, நாம் இருக்கும் இடத்திற்கே வந்து வாகனங்கள் நம்மை பிக்அப் செய்துகொள்ளும்.
இந்த சேவையில் கார், ஆட்டோ உள்ளிட்ட சில வாகனங்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இந்த நிலையில், தற்போது இரு சக்கர வாகனங்களும் இதில் பயன்டுத்தப்பட்டு வருகின்றன. கார் கால் டேக்ஸியைக் காட்டிலும் மிகவும் குறைந்த கட்டணத்தில் இந்த சேவை இயக்கப்படுவதால், பெரும்பாலான மக்கள் இதனை பயன்படுத்த ஆரம்பித்துள்ளனர்.
குறுக்கு, நெடுக்கு என அனைத்து பாதையிலும் பைக் புகுந்து செல்வதால், குறைவான நேரமே டிராப் செய்ய எடுத்துக் கொள்ளப்படுகிறது. இதனால், பெரும்பாலான பயணிகள் இந்த சேவையை அதிகம் பயன்படுத்த ஆரம்பித்துள்ளனர்.
பைக் கால் டேக்ஸி சேவையினால் கார் கால் டேக்ஸி பெரிய அளவில் பாதிப்பைச் சந்தித்திருப்பதாக கால் டேக்ஸி ஓட்டுநர்கள் புகார் தெரிவித்துள்ளனர். மேலும், இந்தச் சேவையை எதிர்த்து அண்மையில் போராட்டத்திலும் ஈடுபட்டனர். பின்னர், இதுகுறித்து நடவடிக்கை எடுக்கும்படி கால் டேக்ஸி ஓட்டுநர்கள் சார்பாக போக்குவரத்து இணை ஆணையர் கிருஷ்ணமூர்த்தியிடம் புகார் கொடுக்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து, இதுகுறித்து நடவடிக்கை மேற்கொள்ளும்படி, வட்டார போக்குவரத்து அதிகாரிகளுக்கு அவர் உத்தரவிட்டார். இதனடிப்படையில், கேகே நகர் ஆர்டிஓ அலுவலக அதிகாரிகள் வாடிக்கையாளர்களைப் போல் பைக் டேக்ஸியை புக் செய்தனர். அப்போது, பிக்அப்புக்காக வந்த பைக் டேக்ஸியைப் பறிமுதல் செய்து சோதனையைச் செய்தனர்.
பொதுச் சேவையில் ஈடுபடும் வாகனங்கள் மஞ்சள் நிற நம்பர் பிளேட்டைக் கொண்டதாக இருக்க வேண்டும். அதேபோல், பின்னால் அமர்பவர்களுக்கென தனி காப்பீடு, சனி சாலை வரி, இரண்டு ஆண்டுக்கு ஒரு முறை வாகன காப்புச் சான்றிதழ் பெறுவது உள்ளிட்ட பல நடைமுறைகள் உள்ளன. ஆனால், இதில் எந்த விதியையும் கடைப்பிடிக்காமல் தனியார் வாகனங்கள் இதில் பயன்படுத்தப்படுத்துவது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து, அந்த பைக் செய்த பறிமுதல் செய்த போலீஸார் இதுகுறித்து வழக்குப் பதிவு செய்தனர்.
அதேபோல், இந்திய மோட்டார் வாகனச் சட்டப்படி பைக்குகளை டேக்ஸியாக இயக்குவது குற்றம் எனக் கூறப்படுகிறது. இதனை மீறி சமீபகாலமாக தமிழகத்தின் தலைநகரான சென்னை உட்பட பல்வேறு நகரங்களில் இருசக்கர வாகன டேக்ஸி சேவை இயக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், பெங்களூருவை மையமாகக் கொண்டு இயங்கும் பைக் டேக்ஸி நிறுவனம், அதன் சேவையை சில நாட்களுக்கு முன்பு சென்னையில் அறிமுகம் செய்தது. இதில், வேலையில்லாமல் சுற்றித் திரிந்த பல பட்டதாரி இளைஞர்கள் தற்காலிக பிழைப்பிற்காக தங்களை இணைத்துக் கொண்டனர்.
அதில், பலர் உரிய ஆவணம் இன்றி தங்களது பைக்குகளை டேக்ஸியாகப் பயன்படுத்தி வருகின்றனர். இதனடிப்படையில், நடத்தப்பட்ட ஆய்வில் கேக நகர் மற்றும் வெஸ்ட் சென்னையில் மட்டும் நேற்று ஒரே நாளில் 18க்கும் மேற்பட்ட பைக்குகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.