Just In
- 5 min ago குடும்பத்தோட போகலாம்னு சொல்றாங்களே இந்த கார் பாதுகாப்பானதா இருக்குமா? மோதல் ஆய்வுல வச்சு செஞ்சிருக்காங்க!
- 53 min ago வெறும் 1 ஸ்டார் ரேட்டிங்கை பெற்ற மஹிந்திரா கார்! இந்த காருக்கா இப்படி ஒரு நிலைமை?
- 1 hr ago பிரம்மாண்டத்துக்கு மறுபெயர் இதுதான்!! ஏர் இந்தியாவில் இனி இப்படியொரு பிளைட்டில் போக முடியாது!
- 2 hrs ago ராயல் என்பீல்டு, ஹோண்டா பைக்கை ஓட்டி ஓட்டி போரடிச்சு போச்சா.. இந்தியாவில் கால் தடம் பதிக்கிறது புதிய பிராண்டு!
Don't Miss!
- News படுக்கையறையில் ஷோபா.. அந்த கோலத்தை கண்டு கதறிய மகள்.. மீண்டும் மீண்டும் டார்ச்சர்.. கொடுமையை பாருங்க
- Movies Actor Vikram: விக்ரம் படத்தில் இணைந்த பிரபல மலையாள நடிகர்.. அறிவித்த படக்குழு!
- Technology Aadhaar Update Cost: இனி ஆதார் அட்டையில் பெயர், முகவரி, போட்டோ மாற்ற கட்டணம்.. எவ்வளவு தெரியுமா?
- Sports LSG v CSK-சிஎஸ்கேக்கு பாதகமாக விழுந்த டாஸ்..பிளேயிங் லெவனில் அதிரடி மாற்றம்..பேட்டிங்கிலும் சர்பரைஸ்
- Finance நீங்க கிரெடிட் கார்டு வச்சிருக்கீங்களா.. ஆன்லைன் மோசடியில் இருந்து தப்பிக்க நச்சுனு 4 டிப்ஸ்!
- Lifestyle உங்களுக்கு இந்த அறிகுறிகள் அதிகம் தெரியுதா? அப்ப உடம்புல தண்ணீர் ரொம்ப கம்மியா இருக்கு-ன்னு அர்த்தம்... உஷார்.
- Education புதுச்சேரியில் பிஎஸ்சி நர்சிங் படிப்பதற்கு நுழைவுத் தேர்வு...!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
ஜம்மு-ஸ்ரீநகர் இடையில் கட்டப்பட்டு வரும் புதிய சுரங்கம்! சுரங்கம் பற்றி அறியவேண்டிய 5 முக்கியமான தகவல்கள் இதோ!
ஜம்மு-ஸ்ரீநகர் இடையில் புதிதாக கட்டப்பட்டு வரும் சுரங்கம் பற்றி அறிந்துக் கொள்ள 5 முக்கிய தகவல்களை இப்பதிவில் தொகுத்து வழங்கியுள்ளோம். வாருங்கள் இதுகுறித்த தகவலைக் கீழே காணலாம்.
உலகின் நீளமான சுரங்கப்பாதை 'அடல் சுரங்கம்' கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் பயன்பாட்டிற்குக் கொண்டு வரப்பட்டது. இதனை பிரதமர் மோடி திறந்து வைத்தார். மணாலி-லடாக்கை இணைக்கும் வகையில் சுமார் 8.8 கிமீ தூரம் நீளத்தில் இந்த சுரங்கம் அமைக்கப்பட்டிருக்கின்றது.
இந்த நிலையில் இதேபோன்று ஓர் புதிய சுரங்கம் மீண்டும் உருவாக்கப்பட்டு வருகின்றது. இது ஜம்மு மற்றும் ஸ்ரீநகரை இணைக்கும் வகையில் உருவாக்கப்பட்டு வருகிறது. இந்த சுரங்கம் பற்றிய சுவாரஷ்யமான ஐந்து தகவல்களையே இப்பதிவில் நாம் பார்க்க இருக்கின்றோம். வாருங்கள் பதிவிற்குள் போகலாம்.
ஜம்மு மற்றும் ஸ்ரீநகர் இணைப்பு:
புதிதாக உருவாகி வரும் சுரங்கம் கஷ்மீர் மற்றும் ஜம்முவை இணைக்கும் வகையில் கட்டமைக்கப்பட்டு வருகின்றது. இது பனிஹல் மற்றும் தென் காஷ்மீரின் காஸிகுண்ட் பகுதிகளுக்கு இடையில் அமைய இருக்கின்றது. இது பயன்பாட்டிற்கு வந்தால் தங்கு தடையில்லா போக்குவரத்து உருவாகும்.
இப்போது, கால நிலைக்கு ஏற்ப சில நேரங்களில் பனிஹல் மற்றும் தென் காஷ்மீரை இணைக்கும் பாதை மூட்படுவதுண்டு. ஆனால், புதிய சுரங்கம் பயன்பாட்டிற்கு வந்தால் இந்த நிலை ஏற்படாது. குறிப்பாக, அதிக பனி மற்றும் நிலச்சரிவால் ஏற்படும் தடை முழுமையாக இந்த சுரங்கத்தால் தவிர்க்கப்பட இருக்கின்றது.
Image Courtesy: Basit Zargar/Twitter
பயண நேரம் குறையும்
புதிய சுரங்கம் பயன்பாட்டிற்கு வந்தால் பயண நேரம் பெருமளவில் குறையும் என கூறப்படுகின்றது. அதாவது, ஜம்மு-ஸ்ரீநகர் பயணிக்க 1 முதல் 1.5 மணி நேரங்கள் வரை மட்டுமே எடுத்துக் கொள்ளும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், தற்போது இருப்பதை விட 16 கிமீ குறையவும் வாய்ப்பு உருவாகும்.
எவ்வளவு செலவில் சுரங்கம் அமைக்கப்பட்டு வருகின்றது?
8.5 கிமீ நீளத்தில் புதிய சுரங்கம் உருவாக்கப்பட்டு வருகின்றது. இதற்காக ரூ. 2,100 கோடி ஒதுக்கி வைக்கப்பட்டுள்ளது. இதன் கட்டுமானப் பணிகள் 2011ம் ஆண்டில் தொடங்கப்பட்டது. மிக விரைவில் முடிவடையும் என எதிர்பார்க்கப்படுகின்றது. தற்போது நிலவி வரும் கொரோனா வைரஸ் இக்கட்டான சூழ்நிலையில் லேசான கால தாமதம் ஏற்பட்டிருக்கின்றது. இத்துடன் இன்னும் சில தடங்கல்களும் ஏற்பட்டதாகக் கூறப்படுகின்றது.
சுமூகமான போக்குவரத்து வசதி:
சுமூகமான போக்குவரத்து வசதிக்காக சுரங்கத்தை கட்டமைப்பு, செயல்பாடு மற்றும் பரிமாற்றம் ஆகியவற்றின் அடிப்படையில் உருவாக்கப்பட்டு வருகின்றது. சுரங்கப்பாதையின் உள்ளே 124 ஜெட் மின் விசிறிகள், 234 சிசிடிவி கேமிராக்கள் மற்றும் தீ விபத்தை எதிர்க்கும் தொழில்நுட்பம் உள்ளிட்டவை இடம்பெற இருக்கின்றது.
மேலும், 500 மீட்டர் இடைவெளிக்கு ஒரு முறை ஒரு அவசர கால வெளியேறும் பாதையும் இடம்பெற இருக்கின்றது. ஆகையால், இடையில் ஏதேனும் சிக்கல் ஏற்பட்டால் இந்த அவசர கால பாதைகளின் வாயிலாக பிற வாகனங்களால் சுலபமாக வெளியேற முடியும்.
ஜவஹர் டனலுக்கு 400மீட்டர் கீழே இது அமைகின்றது:
ஜவஹர் டனலுக்கு 400மீட்டர் கீழே புதிய சுரங்க வழி அமைகின்றது. மேலும், இப்புதிய சுரங்கம் கடல் மட்டத்தில் இருந்தது 2,194 மீட்டர் உயரத்தில் அமைந்திருப்பதாக கூறப்படுகிறது.
குறிப்பு: முதல் ஐந்து படங்களை மற்ற அனைத்தும் உதாரணத்திற்கு வழங்கப்பட்டவை.
-
ஹீரோ ஸ்பிளெண்டர் பைக்கிற்கு டிமாண்ட் அதிகமாகிட்டே போகுது!! இந்தியாவின் தேசிய பைக் என சொல்லலாம்!
-
கலாநிதி மாறன் மகள் காவ்யா வைத்திருக்கும் இந்த காரோட விலை 12கோடியா! ஒற்றை குடும்பத்திடம் மட்டும் இவ்ளோ கார்களா!
-
7 பேர் வரை ஒன்னா போகலாம்! 26 கி.மீ மைலேஜூம் தரும் ஆனா இந்த எர்டிகா கார் பத்தி இது யாருக்கும் தெரியாது!