Just In
- 11 min ago மஹிந்திரா ஸ்கார்பியோ, பெயருக்கே காரை வாங்க கூட்டம் குவியுது!! டாடா நிறுவனத்தால் கிட்ட கூட நெருங்க முடியல!
- 28 min ago இப்ப மீட் பண்ணா தேர்தல்ல மோடி ஜெயிச்சிருவாரு! எலான் மஸ்க் - மோடி சந்திப்பு தள்ளி வைப்பு!
- 47 min ago பைக்க விட அதிக மைலேஜ் தரும் ஹூண்டாய் கார்.. பொய் சொல்லல.. ஸ்ட்ராங்கான ஆதாரத்தோடதான் சொல்றாங்க!
- 1 hr ago வெறும் 136 பேர் தான் இந்த காரை வாங்கியிருக்காங்க! நல்ல காரா இருந்தாலும் மக்கள் வெறுக்க காரணம் இது தான்!
Don't Miss!
- Sports கே எல் ராகுல் செய்த செயல்.. எச்சரித்த தோனி.. ருதுராஜ் கெய்க்வாட்டுக்கு கிடைத்த தண்டனை
- News மாலை 71%.. இரவு 12 மணிக்கு 64% ! ஏறி இறங்கிய வாக்குச் சதவீதம்! நம்ம ஊருக்கு என்னதான் ஆச்சு?
- Technology திடீர் பணம் தேவையா.. தனிநபர் கடன் வழங்கும் Google Pay.. எவ்வளவு கிடைக்கும்? எப்படி வாங்குவது?
- Movies கவினுடன் கிளாஷ் விடும் சந்தானம்.. யாரு கிங்குன்னு மே 10ம் தேதி தெரியும் என கலாய்க்கும் ரசிகர்கள்!
- Lifestyle 11 வயது சிறுமியை அம்மாவும்-மகனும் சேர்ந்து கடத்திய வினோதம்... எதுக்காக கடத்துனாங்க தெரியுமா?
- Education தினமும் 9 மணி நேரம் படித்து யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி பெற்ற லிந்தியா...!!
- Finance எலான் மஸ்க் முடிவால்.. முக்கிய நிகழ்ச்சி ரத்து.. ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் சோகம்..!!
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
தவறான பாதையில் வந்த காரை மடக்கிய போலீஸாருக்கு காத்திருந்த அதிர்ச்சி தகவல்... முழு விபரம் உள்ளே...!
தவறான பாதையில் வந்த காரை மடக்கியதில் அதிர்ச்சியான தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்த தகவலை இந்த பதிவில் காணலாம்.
தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் உள்ள மியாபூர் என்னும் பகுதியில் அந்த மாநிலத்தின் முக்கியப் பகுதிகளை இணைக்கும் சாலை இருந்து செயல்பட்டு வருகிறது. இந்த முக்கிய சாலையில் நாள்தோறும் ஆயிரம் கணக்கான வாகனங்கள் பயணித்து வருகின்றன.
இந்நிலையில், மஹிந்திரா நிறுவனத்தின் தயாரிப்பில் விற்பனையாகி வரும் எக்ஸ்யூவி500 என்ற மாடல் கார் தவறான பாதையில் போக்குவரத்து விதிமுறைகளை மீறி வேகமாக வந்துள்ளது. அப்போது, அங்கு போக்குவரத்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீஸார் அந்த காரை மடக்கி பிடித்து விசாரணை நடத்தியுள்ளார்.
அந்த விசாரணையில், கார் குறித்த அதிர்ச்சி தகவல்கள் அவருக்கு தெரியவந்துள்ளது. இதைத்தொடர்ந்து, அந்த காரை அவரது கைப்பேசி மூலம் செல்ஃபி எடுத்து சமூகவலைதளத்தில் பதிவிட்டார்.
போக்குவரத்து போலீஸாரை அதிர்ச்சிக்குள்ளாக்கும் அந்த தகவல் இ-செல்லான் மூலம் அவருக்கு தெரியவந்துள்ளது. இ-செல்லான் என்பது சில வருடங்களுக்கு முன்புதான் நடைமுறையில் அமலுக்கு கொண்டுவரப்பட்டது.
இது, போக்குவரத்து விதிமீறலில் ஈடுபடும் வாகன ஓட்டிகளுக்கு அளிக்கப்படும் அபராதத்தொகை ரசீதாகும். இந்த புதிய நடைமுறையானது, போலீஸாருக்கும் வாகன ஓட்டிகளுக்கும் இடையே ஏற்படும் மோதலை தவிர்க்க கொண்டுவரப்பட்டது. மேலும், போலீஸார் செய்யும் முறைகேட்டினை தவிர்க்கவும் இந்த இ-செல்லான் உதவி வருகிறது.
அந்த வகையில், தவறான பாதையில் வந்த மஹிந்திரா எக்ஸ்யூவி500 காரை போக்குவரத்து போலீஸார் மடக்கியுள்ளார். பின்னர், காரின் பதிவெண்ணைக்கொண்டு இ-செல்லான் மெஷினில் பதிவிட்டுள்ளார். அவ்வாறு, பதிவிடும்போது, அந்த கார் முன்னதாக பல்வேறு விதிமுறை மீறல்களில் ஈடுபட்டிருந்தது தெரியவந்தது.
அவ்வாறு, அந்த கார் மீது இதுவரை 35 ஆயிரத்து 760 ரூபாய் அபராதத் தொகை நிலுவையில் இருப்பது தெரியவந்தது. இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த போக்குவரத்து போலீஸார், அவரது ஸ்மார்ட்போன் மூலம் அந்த காருடன் செல்ஃபி எடுத்து சைபராபாத் டிராஃபிக் போலீஸ் என்ற முகப்புத்தக பக்கத்தில் பதிவிட்டார்.
அவரின் பதிவிற்கு பல்வேறு முகப்புத்தக பயனர்கள் வரவேற்பு அளித்துள்ளனர். மேலும், இதுபோன்று தவறான பாதையில் வரும் வாகனங்கள்மீது கடுமையான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்ற கோரிக்கை முன் வைத்துள்ளனர்.
மஹிந்திரா நிறுவனம் எஸ்யூவியின் ஃபேஸ்லிஃப்ட் மாடலில் இந்த எக்ஸ்யூவி500 காரை விற்பனைச் செய்துவருகிறது. இந்த கார் பெட்ரோல் மற்றும் டீசல் வேரியண்டில் விற்பனைக்கு கிடைக்கிறது.
இதில், பெட்ரோல் வேரியண்டில் 2.2 லிட்டர் எம்ஹவாக் டர்போசார்ஜ்டு இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இது, 140 பிஎச்பி பவரையும், 320 என்எம் டார்க் திறனையும் வழங்கும். இதன் விலை 15.5 லட்ச ரூபாய் (எக்ஸ் ஷோரூம், டெல்லி). இதேபோன்று, டீசல் வேரியண்டில், 2.2 லிட்டர் எம்ஹவாக் டர்போசார்ஜ்டு டீசல் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இது, 155 பிஎச்பி பவரையும், 360 என்எம் டார்க் திறனையும் வழங்கக்கூடியது. மேலும், 6 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் அல்லது ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் ஆப்ஷன்களில் கிடைக்கிறது.
இந்த மாடலில் பெட்ரோல் வேரியண்டைக் காட்டிலும் டீசல் வேரியண்ட் தான் அதிகம் விற்பனையாகி வருவது குறிப்பிடத்தக்கது. இது எக்ஸ்-ஷோரூமில் மும்பை மதிப்பில் ரூ. 17.88 லட்சம் என்ற விலையில் விற்பனைக்கு கிடைக்கிறது.
Source: Cyberabad Traffic Police
-
100 சதவீதம் வாக்குப்பதிவு கேட்கும் அரசு இதையெல்லாம் கவனிக்க மாட்டாங்களா? விமானங்களின் டிக்கெட் விலை உயர்வு!
-
டாடாவுக்கு நெருக்கடி கொடுக்க அவசரம் காட்டும் வின்ஃபாஸ்ட்.. தூத்துக்குடில உற்பத்திக்கான பணிகள் தீவிரம்!
-
ரூ1.5 லட்சம் தள்ளுபடி விலையில் குடும்பத்துடன் பயணிக்கும் எக்ஸ்யூவி 700 காரை வாங்கலாம்! வெயிட்டிங் டைமும் கம்மி