Just In
- 1 hr ago பைக் வாங்கும்போது நம்ம பசங்க தப்பு பண்றது இதில்தான்!! கேடிஎம் பைக்கின் விலையில் கிடைக்கும் 6 பவர்ஃபுல் பைக்ஸ்!
- 1 hr ago ரூ2.11 லட்சம் செலவு செய்தது கணவன் முகத்துல இதை பார்க்க தான்! கல்யாணத்தன்று மணப்பெண் செய்த சம்பவம்!
- 2 hrs ago 20ஆண்டுகள் கழித்து தன்னுடைய அடையாளத்தை மாற்றிய லம்போர்கினி! இந்த லோகோவோட அழகுக்கே நிறையபேரு காரை வாங்க போறாங்க
- 4 hrs ago கார் வாங்குவதிலும் ஆணுக்கு இணையாக பெண்கள்!! புள்ளி விபரம் என்ன சொல்லுது? எந்த ஊரில் அதிகம்?
Don't Miss!
- News டார்க்கெட் திமுக.. தமிழக பாஜக தொண்டர்களுடன் கலந்துரையாடும் பிரதமர் மோடி! ‛மாஸ்டர் பிளான்’
- Sports மும்பை பாணியில் கம்பீர் எடுத்த முடிவு.. 16 சிறுவனை ஒப்பந்தம் செய்த கேகேஆர்.. யாருப்பா அந்த பையன்?
- Movies டல்லடிக்கும் சினிமா வாய்ப்பு?.. அரசியலுக்கு வருகிறாரா அனுஷ்கா?.. இது என்னப்பா புதுசா இருக்கு
- Finance தங்கம் விலை ஓரே நாளில் 1400 ரூபாய் உயர்வு.. முதல் முறையாக ரூ.51000 தொட என்ன காரணம்..?
- Lifestyle ஆப்பிள் சீடர் வினிகருடன் இந்த ஒரு பொருளை கலந்து குடிச்சா மாரடைப்பும் வராது.. இதய அடைப்பும் சரியாகும் தெரியுமா?
- Education சென்னையின் பெருமைமிகு கல்லூரிகளில் ஒன்றாகத் திகழும் டி.ஜி.வைஷ்ணவ் கல்லூரி...!!
- Technology அம்மா வாங்க.. ஐயா வாங்க! கிட்டத்தட்ட பாதி விலை டிஸ்கவுண்ட்.. Amazon-ல் கூவிக்கூவி விற்கப்படும் ஐந்து 4K TVகள்!
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
தான் லஞ்சம் வாங்கியதை வீடியோ எடுத்த இளைஞருக்கு லஞ்சம் வழங்க முயன்ற போலீஸ்!
மும்பையில் பைக் ஓட்டுநரிடம் தான் லஞ்சம் வாங்கிய வீடியோவை எடுத்த இளைஞரிடம் வீடியோவை வெளியிடாமல் இருக்க போலீஸ் ஒருவர் லஞ்சம் வழங்க முயற்சித்துள்ளார். இந்த வீடியோ தற்போது வைரலாக பரவி வருகிறது.
மும்பையில் பைக் ஓட்டுநரிடம் தான் லஞ்சம் வாங்கிய வீடியோவை எடுத்த இளைஞரிடம் வீடியோவை வெளியிடாமல் இருக்க போலீஸ் ஒருவர் லஞ்சம் வழங்க முயற்சித்துள்ளார். இந்த வீடியோ தற்போது வைரலாக பரவி வருகிறது.
டில்லியை சேர்ந்த லக்ஷய் ஆனந்த் என்ற 19 வயது இளைஞர் பைக் பயணம் மீது அலாதி பிரியம் உள்ளவர். இவர் அவ்வப்போது இந்தியாவில் பல்வேறு இடங்களில் பயணம் செய்து பயணத்தை அவ்வப்போது வீடியோ பதிவாக வெளியிட்டு வருகிறார்.
இந்நிலையில் மும்பையில் இருந்து புனேவிற்கு தனது டூவிலரில் பயணம் செய்துள்ளார். வழக்கம் போல தனது பயணத்தை வீடியோவாக பதிவு செய்துள்ளார்.
தற்போது மும்பை - எக்ஸ்பிரஸ் ஹைவேயில் மூன்று மற்றும் இரண்டு சக்கர வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனால் ஒரிரு இடங்களில் மூன்று மற்றும் இரண்டு சக்கர வாகனங்கள் செல்லும் இடங்களில் குழப்பம் உள்ளது.
அந்த குறிப்பிட்ட பகுதியில் பல இரு பைக் ஓட்டிகள் எக்ஸ்பிரஸ் சாலையை சட்ட விதிகளை மீது பயன்படுத்தி வருகின்றனர். அடிக்கடி அந்த வழியாக செல்பவர்கள் எக்ஸ்பிரஸ் சாலையில் உள்ள டோலுக்கு செல்லாமல் வேறு வழியாக சென்று விடுவர்.
ஆனால் புதிதாக செல்வர்கள் எக்ஸ்பிரஸ் டோலை கடக்க வேண்டியது இருக்கும். அந்த பகுதியில் போலீசார் இருப்பர். அவர்கள் அந்த வழியாக வரும் பைக்குகளை பிடித்து அபராதம் விதிப்பர்.
இந்நிலையில் அந்த ரோட்டில் புதிதாக சென்ற லக்ஷய் ஆனந்தும் எக்ஸ்பிரஸ் டோல் கேட் அருகே சென்று போலீசில் சிக்கியுள்ளார். அவரிடம் உள்ள ஆவணங்களை பெற்று விட்டு அவருக்கு அபராதம் விதித்துள்ளனர்.
இதற்கிடையில் லக்ஷய் ஆனந்தை போல் அந்த வழியாக வந்த மற்றொரு பைக் ஓட்டுநரையும் போலீசார் பிடித்துள்ளனர். ஆனால் அந்த பைக் ஓட்டி பேரம் பேசி போலீஸிடம் ரூ100 லஞ்சமாக வழங்கி விட்டு ஆபராத தொகையை செலுத்தாமல் சென்றுவிட்டார்.
இந்த சம்பவம் அனைத்தும் லக்ஷய் ஆனந்த் வைத்திருந்த கேமராவில் பதிவாகியது. பின்னர் லக்ஷய் ஆனந்த் அபாராத தொகையை செலுத்தி ரசீது வாங்கிவிட்டு செல்லும் போது போலீஸிடம் தாங்கள் லஞ்சம் வாங்கிய வீடியோ பதிவாகியுள்ளது. இதை நான் ஆன்லைனில் வெளியிடவுள்ளேன் என கூறிவிட்டு சென்றார்.
இதையடுத்து லஞ்சம் பெற்ற போலீஸ் லக்ஷய் ஆனந்திடம் வந்து சற்று பணிவாக இந்த வீடியோவை ஆன்லைனில் பதிவிடம் வேண்டாம். இங்கே நடந்ததை மறந்துவிடுங்கள் என கூறி லக்ஷய் ஆனந்திற்கு ரூ 500 லஞ்சமாக வழங்க முன் வந்துள்ளார்.
ஆனால் லக்ஷய் ஆனந்த் அதை வாங்காமல் அங்கிருந்து சென்றுவிட்டார். பின்னர் அந்த வீடியோவை லக்ஷய் ஆனந்த் ஆன்லைனில் வெளியிட்டார். அந்த வீடியோவை நீங்கள் கீழே காணலாம்.
இந்த வீடியோ வட இந்தியா முழுவதும் மிகவும் வைரலாக பரவியது. இதையடுத்து இன்ஸ்டாகிராம் என்ற சமூக வலைதளங்த்தில் செயல்படும் அதிகாரபூவர் மற்ற மஹாராஷ்டிரா போலீஸ் என்ற பெரில் உள்ள பக்கம் இந்த விடியோவிற்கு பதில் அளித்துள்ளது.
அதில் போலீஸ் லஞ்சம் வாங்கிய வீடியோவை தைரியாமான பொதுவெளியில் வெளியிட்ட லக்ஷய் ஆனந்த்திற்கு அதில் நன்றி தெரிவிக்கப்பட்டுள்ளது. அது மட்டுமில்லாமல் அந்த போலீஸ் லக்ஷய் ஆனந்திற்கு வழங்கிய ரூ 500 லஞ்சத்தையும் வாங்க மறுத்ததற்காக அவரை பாராட்டியுள்ளது.
அது மட்டுமல்லாமல் இச்சம்பவத்தில் போலீஸ் மீது பெரும் தவறு இருந்தாலும் முதலில் தவறை துவங்கியது. அந்த பைக்கில் வந்து லஞ்சம் வழங்கியவர்கள் தான். அதனால் மக்கள் லஞ்சம் எங்கிருந்து துவங்குகிறது என்பதை சிந்திக்க வேண்டும் என கூறியுள்ளது.
இந்த பக்கம் மஹாராஷ்டிரா போலீஸின் அதிகாரபூர்வ பக்கமாக இல்லாவிட்டாலும், அவர்கள் அளித்த பதில் பதிவு மக்கள் மத்தியில் அதிகமாக பேசப்பட்டது. இந்த பதிவும் வைரலாக பரவி வருகிறது.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்ட செய்திகள்:
-
ரோட்டோர ஒர்க் ஷாப்பில் 8 கோடி ரூபாய் ரோல்ஸ் ராய்ஸ் கார்! வாங்கறது பெருசு இல்ல! மெயின்டெயின் பண்றதுதான் பெருசு!
-
இந்தியாவுக்கு எதாவது பாதிப்பா? ஒரு சின்ன மிஸ்டேக் எங்க கொண்டுவந்து நிறுத்தி இருக்கு!!
-
காருக்குள் பறக்கும் வாகனம்.. சாலையில் ஓட்டிக்கலாம்.. தேவைப்பட்டால் வானிலும் பறந்துக்கலாம்!