என்ன...! இதுக்கெல்லாம அவார்ட் தருவாங்க...? ஹைதராபாத் போலீஸின் குறும்புத்தனத்திற்கு அளவே இல்லையா...!
வாகன ஓட்டிக்கு அவார்ட் வழங்கும் வகையில், புதிய முறையை கையாண்டு இ-செல்லாணை ஹைதராபாத் போலீஸார் வழங்கும் புகைப்படம் இணையத்தில் வரைலாகி வருகிறது. இதுகுறித்த தகவலை இந்த பதிவில் காணலாம்.

வாகனங்களில் பயணிக்கும் ஒவ்வொருவரின் பாதுகாப்பினையும் உறுதிபடுத்தும் வகையில், மத்திய மற்றும் மாநில அரசுகள் சாலை பாதுகாப்பு விதிமுறைகளை இயற்றி வருகின்றன. அவ்வாறு பல்வேறு போக்குவரத்து விதிமுறைகள் அமலில் இருக்கின்றன. இதனை மீறும் வாகன ஓட்டிகளுக்கு போக்குவரத்துச் சட்டத்தின்படி, குறைந்தபட்சம் அபராதம் அல்லது தண்டனை வழங்கப்பட்டு வருகிறது.

வாகனங்களில் பயணிக்கும் ஒவ்வொருவரின் பாதுகாப்பினையும் உறுதிபடுத்தும் வகையில், மத்திய மற்றும் மாநில அரசுகள் சாலை பாதுகாப்பு விதிமுறைகளை இயற்றி வருகின்றன. அவ்வாறு பல்வேறு போக்குவரத்து விதிமுறைகள் அமலில் இருக்கின்றன. இதனை மீறும் வாகன ஓட்டிகளுக்கு போக்குவரத்துச் சட்டத்தின்படி, குறைந்தபட்சம் அபராதம் அல்லது தண்டனை வழங்கப்பட்டு வருகிறது.

மேலும், சிக்னலில் போக்குவரத்தை விதியையும் மீறும் வாகன ஓட்டிகளுக்கு அங்கு பொருத்தப்பட்டிருக்கும் சிசிடிவி கேமிராக்கள் மூலம், வாகன பதிவெண்ணைக் கொண்டு வாகன ஓட்டியின் வீட்டிற்கு இ-செல்லான்களை அனுப்பி வைக்கின்றனர். இதனைப் பெறும் வாகன ஓட்டிகள் குறிப்பிட்ட நாட்களுக்குள் அபராத்திற்கான தொகையைச் செலுத்திட வேண்டும்.

ஆனால், இந்த இ-செல்லானைப் பெறும் வாகன ஓட்டிகள் பலர் முறையாக அபராதத் தொகையை செலுத்துவதில்லை என போக்குவரத்து போலீஸார் தரப்பில் கூறப்படுகிறது. இதனை உறுதிப்படுத்தும் வகையில், அண்மையில் தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் ஓர் சம்பவம் நிகழ்ந்தது.

இந்த சம்பவத்தில், மியாபூர் சாலையில் தவறான பாதையில் வந்த மஹிந்திரா எக்ஸ்யூவி500 மாடல் காரைப் போலீஸார் மடக்கியுள்ளார். மேலும், போக்குவரத்து விதியை மீறி வந்த காரணத்தல், அந்த காருக்கு இ-செல்லான் மிஷின்மூலம் அபராதத் தொகை வழங்க, காரின் பதிவெண்ணை உள்ளிட்டுள்ளார்.

அப்போது, அந்த கார் ஏற்கனவே பல முறை விதிமுறை மீறல்களில் ஈடுபட்டிருப்பதும். அதற்கான நிலுவைத் தொகை 35 ஆயிரத்து 760 ரூபாய் நிலுவையில் இருப்பதும் தெரியவந்தது. இதனால், அதிர்ச்சியடைந்த அந்த போலீஸார், காருக்கு முன்பாக நின்று செல்ஃபி எடுத்தார். இந்த புகைப்படமானது சைபராபாத் போலீஸ் முகப்புத்தக பக்கத்தில் பதிவிடப்பட்டு, வரைலாகியது.

இந்நிலையில், இதேபோன்று மேலும் ஒரு நபரை போலிஸார் பிடித்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்த புகைப்படத்தையும் சைபராபாத் போலீஸ் முகப்புத்தக பக்கத்தில் ஹைதராபாத் போலீஸார் பதிவிட்டுள்ளனர். இந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வரைலாகி வருகிறது.

அவ்வாறு, நேற்று முன்தினம் (ஏப்ரல் 16) மியாபூர் சாலையில் சென்றுக் கொண்டிருந்த ஃபோக்ஸ்வேகன் காரை, ஹைதராபாத் போலீஸார் மடக்கிச் சோதனை செய்துள்ளனர். அதில், அந்த கார் மீது இதுவரை 38 ஆயிரம் ரூபாய் வரை அபராதத்தொகை நிலுவையில் இருப்பது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து, அந்த கார்மீது மேலும் நடவடிக்கை எடுக்கும்விதமாக மிகப்பெரிய ரசீதை அவார்ட் வழங்குவதைப்போல், அந்த காரின் உரிமையாளருக்கு போலீஸார் வழங்கினார்.

அப்போது, அதனை புகைப்படம் எடுத்த அந்த போலீஸார், அந்த புகைப்படத்தை, "ரூ. 38,000 அபராதத்தொகை நிலுவையில் இருக்கும் காரின் உரிமையாளருக்கு செல்லான் வழங்கப்படுகிறது" என்ற கேப்ஷனுடன் பதிவிட்டிருந்தனர். இந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
Source: Cyberabad Traffic police


Click it and Unblock the Notifications








