Just In
- 3 hrs ago உலகின் தலை சிறந்த கார் எது தெரியுமா? விருதை தட்டி சென்ற கியா தயாரிப்பு! சும்மா ஒன்னும் இதை தூக்கி கொடுத்திடல..
- 3 hrs ago மேட்-இன் தமிழ்நாடு... தரத்தில் எந்த குறையும் இருக்காது!! மொத்தமும் எலக்ட்ரிக் தான்!
- 4 hrs ago பிரசார வேனை சொகுசு பங்களா போல செட்டப் செய்த கமலஹாசன்! இதை பார்க்கவே கூட்டம் குவியுமே!
- 5 hrs ago கண்ண மூடிட்டு ஹோண்டா டூவீலர்களை வாங்கும் இந்தியர்கள்! இந்த விஷயம் தெரிஞ்சா விடிஞ்சதும் ஷோரூம்லதான் இருப்பீங்க!
Don't Miss!
- News பொத்தென விழுந்த மேற்கூரை.. 3 பேரை அமுக்கி கொன்ற சென்னை பப் விபத்து பற்றி காவல்துறை விளக்கம்
- Sports ரிஷப் பண்ட்க்கு 2 முறையும் லக் இல்ல.. தொடர்ந்து 2வது வெற்றியை பெற்ற ராஜஸ்தான்.. ரியான்,ஆவேஷ் அபாரம்
- Lifestyle வரப்போகிற சூரிய கிரகணம் இந்த 4 ராசிக்காரங்களுக்கு பெரிய துரதிர்ஷ்டத்தை தரப்போகுதாம்..ரொம்ப ஜாக்கிரதையா இருங்க!
- Movies Cooku with comali 5: புது கோமாளிகளுடன் களமிறங்கும் குக் வித் கோமாளி 5 -ஆங்கர் ரக்ஷன் சம்பளம் இவ்வளவா
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
- Technology குறைஞ்சது 4 -5 நாள் ஆகும்.. கடைசி நேரத்துல அலையாதீங்க.. Voter ID-க்கான முக்கிய வேலை.. உடனே செஞ்சிடுங்க!
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
ஆளில்லாமல் ஓடிய ரயில் எஞ்சினை பைக்கில் துரத்திய டிரைவர்... சினிமா பாணியில் சம்பவம்!
ஆளில்லாமல் ஓடிய ரயில் எஞ்சினை பைக்கில் துரத்தி பிடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஆளில்லாமல் ஓடிய ரயில் எஞ்சினை, அதன் ஓட்டுனர் பைக்கில் துரத்தி சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
சென்னையில் இருந்து மும்பைக்கு மெயில் ஒன்று நேற்று புறப்பட்டது. அந்த ரயில் மாலை 3 மணிக்கு கர்நாடக மாநிலம் வடி ரயில் நிலையத்திற்கு வந்தடைந்தது. அந்த ரயில் நிலையத்துடன் மின்சாரத் தடம் முடிவடைகிறது. வடி- சோலாப்பூர் இடையில் மின்மயமாக்கப்படவில்லை.
அங்கு மின்சார ரயில் எஞ்சின் கழற்றப்பட்டு, டீசல் எஞ்சின் இணைக்கப்பட்டு மும்பை மெயில் புறப்பட்டு சென்றது. இந்த நிலையில், மும்பை மெயில் ரயிலிருந்து கழற்றப்பட்ட மின்சார ரயில் எஞ்சின் மற்றொரு தடத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில், மாலை 3.30 மணியளவில் அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த அந்த மின்சார ரயில் எஞ்சின் திடீரென தானாக ஓடத் துவங்கியது. இதனை பார்த்த ரயில் எஞ்சின் டிரைவரும், ரயில் நிலை அதிகாரிகளும் அதிர்ச்சி அடைந்தனர்.
Recommended Video
ரயில் எஞ்சினை நிறுத்துவதற்காக ரயில் டிரைவர் பைக்கில் துரத்தி சென்றார். இதனிடையே, இந்த சம்பவம் குறித்த ரயில் எஞ்சின் பயணித்த வழித்தடத்தில் இருந்த ரயில் நிலையங்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, அந்த ரயில் தடத்தில் ரயில் போக்குவரத்து தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.
தொடர்புடைய சுவாரஸ்யச் செய்திகள்:
ரயில் எஞ்சினை பைக்கில் துரத்திச் சென்ற டிரைவரால் உடனடியாக ரயில் எஞ்சினை நெருங்க முடியவில்லை. கிட்டத்தட்ட 13 கிமீ தூரம் அந்த ரயில் எஞ்சின் ஆளில்லாமல் ஓடியது. அதன்பிறகு தானாக அந்த ரயில் எஞ்சின் வேகம் குறைய துவங்கியது. அப்போது பாய்ந்து சென்ற ரயில் எஞ்சினில் ஏறிய அதன் டிரைவர் ஒருவழியாக எஞ்சினை நிறுத்தி கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தார்.
முன்கூட்டியே எச்சரிக்கப்பட்டதால், அந்த வழியில் எதிர் திசையில் வந்த ரயில் வேறு தடத்தில் நிறுத்தி வைக்கப்பட்டது. இல்லையெனில் பெரும் அசம்பாவிதம் நிகழ்ந்திருக்கும். ரயில் எஞ்சின் தானாக ஓடியது குறித்து விசாரணை நடக்கிறது.
ரயில் எஞ்சின் இயக்குவதில் பல்வேறு பாதுகாப்பு வழிமுறைகள் கடைபிடிக்கப்படுகின்றன. இந்த நிலையில், ரயில் எஞ்சின் டிரைவர் கட்டுப்பாட்டு இல்லாமல் ஓடியது பல்வேறு சந்தேகங்களை எழுப்பி இருக்கிறது.
சினிமாவில் வருவது போன்ற இந்த சம்பவம் வடி ரயில் நிலையத்தில் நேற்று பெரும் பரபரப்பையும் பதட்டத்தையும் ஏற்படுத்தியது.
தொடர்புடைய சுவாரஸ்யச் செய்திகள்: