Just In
- 58 min ago சாதா கிளாஸ் டிக்கெட்டை வாங்கிட்டு முதல் வகுப்பில் பயணிக்கனுமா!! விமான பணி பெண் சொல்லும் மூன்று ரகசிய வழிகள்!
- 5 hrs ago டிவிஎஸ் அப்பாச்சி பைக்குகள் ஓரங்கட்ட படுகிறதா? சேல்ஸ் குறைஞ்சிக்கிட்டே வருது... பஜாஜ் ஹாப்பி!!
- 6 hrs ago மாருதி, டாடா, ஹூண்டாய் நிறுவனங்களை ஒரு கை பார்க்க வரும் நிஸான் கார்... போட்டி அனல் பறக்க போகுது...
- 6 hrs ago இந்த காரை எல்லாம் நாம கண்ணால நேர்ல பார்த்தாலே அது நம்ம செஞ்ச புண்ணியம் தான்! காரோட ரேட் அப்படி!
Don't Miss!
- News இந்திய எல்லையில் சியாச்சினுக்கு மிக அருகே.. சீனா அமைக்கும் புதிய சாலை! எதற்காக தெரியுமா? பகீர் தகவல்
- Lifestyle Today Rasi Palan 26 April 2024: இன்று இந்த ராசிக்காரர்கள் வேலை மாற்றத்தைப் பற்றி யோசிக்காமல் இருப்பது நல்லது..
- Sports வாழ்க்கைன்னா ஒரு சில அடிகள் விழத்தான் செய்யும்.. எல்லா போட்டியிலும் வெல்ல முடியாது.. பாட் கம்மின்ஸ்
- Movies Actor Dhanush: ஜூலை மாதத்திற்கு தள்ளிப்போகும் தனுஷின் ராயன் பட ரிலீஸ்.. கமல்தான் காரணமா?
- Technology BSNL தான்யா டாப்பு.. Jio-வுக்கும் Airtel-லுக்கும் ஆப்பு.. 200 ரூபாய்க்குள் 70 நாள் வேலிடிட்டி.. எந்த திட்டம்?
- Finance 6 மாதங்களில் 73% வளர்ச்சி.. ஜியோ ஃபைனான்சியல் சர்வீசஸ் பங்குகள் அள்ளிக் கொடுத்த லாபம்..!
- Travel இந்தியாவில் உள்ள புனிதமான காடுகள் – வாழ்வில் ஒரு முறையேனும் இந்த காடுகளுக்கு செல்ல வேண்டும்!
- Education சென்னை ஏர்போர்ட்டில் பணிபுரிய ஆசையா...!
அதிரடியான புதிய உத்தரவுகளை பிறப்பித்த அரசு.. இனி நீங்கள் இதை செய்தால் கடும் சிக்கலில் சிக்க நேரிடும்
அதிரடியான புதிய உத்தரவுகளை அரசு பிறப்பித்துள்ளது. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.
போக்குவரத்து விதிமுறை மீறல்கள் அதிகம் நடைபெறும் நாடுகளில் ஒன்று இந்தியா. இதன் காரணமாக உலகிலேயே சாலை விபத்துக்கள் காரணமாக மிக அதிக உயிர்களை பறிகொடுக்கும் நாடுகளில் ஒன்றாகவும் இந்தியா உள்ளது. செல்போனில் பேசி கொண்டே வாகனம் ஓட்டுவது, குடிபோதையில் வாகனம் ஓட்டுவது என இந்தியாவில் போக்குவரத்து விதிமுறை மீறல்களுக்கு அளவே இல்லாமல் உள்ளது.
எனவே சாலை விபத்துக்களால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையை குறைப்பதற்காக மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. இதன் ஒரு பகுதியாக போக்குவரத்து விதிமுறைகளை மீறும் வாகன ஓட்டிகளுக்கு மிக கடுமையான அபராதம் விதிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இந்த சூழலில் வாகனங்களை மாடிபிகேஷன் செய்யும் வழக்கமும் இந்தியாவில் அதிகரித்து வருகிறது. எனவே வாகனங்களை மாடிபிகேஷன் செய்யக்கூடாது என கடந்த சில மாதங்களுக்கு முன் உச்ச நீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டது. இருந்தபோதும் தொடர்ந்து பலர் தங்களது வாகனங்களை மாடிபிகேஷன் செய்து கொண்டேதான் உள்ளனர்.
குறிப்பாக இரு சக்கர வாகனங்களில்தான் அதிகம் மாடிபிகேஷன்கள் செய்யப்படுகின்றன. இரு சக்கர வாகன உற்பத்தியாளர்கள் வழங்கும் சைலென்சர்களுக்கு பதிலாக வெளி மார்க்கெட்டில் கிடைக்கும் சைலென்சர்களை பொருத்தி கொள்வது, பிரஷர் ஹாரன்களை பொருத்தி கொள்வது ஆகியவை இதற்கு ஒரு சில உதாரணங்கள்.
ஆனால் இவை இரண்டும் ஒலி மாசுபாட்டை ஏற்படுத்துகின்றன. அத்துடன் சாலையில் பயணம் செய்யும் இதர வாகன ஓட்டிகளுக்கும், பாதசாரிகளுக்கும் பாதிப்பை உண்டாக்குகின்றன. எனவே ஆஃப்டர் மார்க்கெட் சைலென்சர்கள் மற்றும் பிரஷர் ஹாரன்கள் பொருத்தப்பட்ட வாகனங்களுக்கு எதிராக போக்குவரத்து துறை அதிகாரிகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.
இந்த சூழலில் ஆஃப்டர் மார்க்கெட் சைலென்சர்கள் மற்றும் பிரஷர் ஹாரன்கள் பொருத்தப்பட்ட வாகனங்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கும்படி மாவட்ட அளவிலான போக்குவரத்து துறை அதிகாரிகளுக்கு பீகார் மாநில போக்குவரத்து துறை தற்போது உத்தரவிட்டுள்ளது. ஒலி மாசுபாட்டை கட்டுபடுத்துவதற்காக இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதுதவிர காரணம் இல்லாமல் ஹாரன்களை ஒலிக்கும் வாகன ஓட்டிகளுக்கு எதிராகவும் கடும் நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இத்தகைய வாகன ஓட்டிகளுக்கு, மோட்டார் வாகன சட்டம், 1988ன் படி போக்குரவரத்து துறை மற்றும் போக்குவரத்து காவல் துறையின் பறக்கும் படை அதிகாரிகள் கடும் அபராதம் விதிக்கவுள்ளனர்.
அதிக ஒலி எழுப்பும் ஆஃப்டர் மார்க்கெட் சைலென்சர்கள் மற்றும் பிரஷர் ஹாரன்கள் பொருத்தப்பட்ட வாகனங்கள் தொடர்பாக புகார் பதிவு செய்யும்படி பொதுமக்களையும் அம்மாநில போக்குவரத்து துறை கேட்டு கொண்டுள்ளது. 120 டெசிபலுக்கும் அதிகமான ஒலி எழுப்புவதால், ஒலி மாசுபாடு விதிகள், 2000ன் படி பிரஷர் ஹாரன்கள் தடை செய்யப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
அதே சமயம் ஆஃப்டர் மார்க்கெட் சைலென்சர்களை பயன்படுத்தும் இரு சக்கர வாகன ஓட்டிகள் மீது, மோட்டார் வாகன விதிகள் செக்ஸன் 190(2)ன் வழக்கு பதிவு செய்யப்படவுள்ளது. இதுகுறித்து போக்குவரத்து துறை அதிகாரிகள் கூறுகையில், ''டூவீலர்களை வாங்கிய உடன் சிலர் சைலென்சர்களை மாற்றி விடுகின்றனர்.
குறிப்பாக புல்லட் மோட்டார்சைக்கிளில்தான் இது அதிகம் செய்யப்படுகிறது. இந்த சைலென்சர்கள் அதிகம் ஒலி எழுப்புகின்றன. இதன் காரணமாக இதர வாகன ஓட்டிகள் மற்றும் பாதசாரிகள் பாதிக்கப்படுகின்றனர். எனவே ஆஃப்டர் மார்க்கெட் சைலென்சர்களை பயன்படுத்தும் வாகன ஓட்டிகளுக்கு முதல் முறை 2,000 ரூபாய் அபராதம் விதிக்கப்படும்.
இரண்டாவது முறையும் அவர்கள் அதே தவறை செய்தால் மோட்டார்சைக்கிள் பறிமுதல் செய்யப்படும். பிரஷர் ஹாரன்கள் மற்றும் ஆஃப்டர் மார்க்கெட் சைலென்சர்களை பயன்படுத்த கூடாது என வாகன ஓட்டிகளுக்கு விழிப்புணர்வும் ஏற்படுத்தப்படும். அதனையும் மீறி பயன்படுத்துவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவுள்ளோம்'' என்றனர்.
Note: Images used are for representational purpose only.
-
7 பேர் போற கார் இவ்ளோ மைலேஜ் குடுக்குமா! விலை அதை விட ஆச்சரியம்! எவ்ளோனு தெரிஞ்சா அடுத்த நிமிஷமே வாங்கீருவீங்க
-
உலக அரங்கில் இந்திய தயாரிப்புகளுக்கு ஓர் தலைக்குனிவு!! மேட்-இன்-இந்தியா ஹோண்டா கார் மொத்தமா சொதப்பிடுச்சு!
-
20கிலோ அரிசி மூட்டையை 4ஏத்திகிட்டு நீங்களும் அமர்ந்து போகலாம்! டெலிவரி சேவைக்கான சூப்பரான இ-சைக்கிள் அறிமுகம்!