ஏப்., 1 வருகிறது ஆப்பு; சுங்கசாவடி கட்டணம் உயர்வு
ஏப்.,1 முதல் தமிழகத்தில் உள்ள 20 சுங்கசாவடிகளில் கட்டணம் உயர்த்தப்படுகிறது. சென்னை வருபவர்களுக்கு பெரும் பாதிப்பு ஏற்பட்டும்.
ஏப்.,1 முதல் தமிழகத்தில் உள்ள 20 சுங்கசாவடிகளில் கட்டணம் உயர்த்தப்படுகிறது. அதில் பெரும்பாலானவைகள் தென் மாவட்டங்களிலும், கொங்கு மண்டலத்திலும் அமைந்திருப்பதால் அந்த பகுதிகளில் இருந்து சென்னை வருபவர்களுக்கு பெரும் பாதிப்பு ஏற்பட்டும்.

இந்திய தேசிய நெடுஞ்சாலைத்துறை நாடு முழுவதும் 461 சுங்க சாவடிகளை அமைத்து காண்ட்ராக்டர்கள் மூலம் நிர்வகித்து வருகிறது. இதில் 42 சுங்க சாவடிகள் தமிழகத்தில் அமைந்துள்ளது.

டபிள்யூ.பி.ஐ., யின் வளர்ச்சிபடி சுங்க சாவடிகளில் கட்டணம் உயர்த்த அனுமதியளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில்
கடந்த 2017 செப்டம்பரிலேயே 22 சுங்கசாவடிகளில் கட்டணங்கள் உயர்த்தப்பட்ட நிலையில் வரும் ஏப். 1ம் தேதி முதல் மற்ற 20 சுங்க சாவடிகளிலும் கட்டணம் உயர்த்தப்படுகிறது.

அதன்படி கார் மற்றும் இலகு ரக வாகனங்களுக்கு 10 சதவீதமும், கனரக வாகனங்களுக்கு 6 சதீவீதமும் விலை உயர்த்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தற்போது கட்டணம் உயர்த்தப்படும் சுங்கசாவடிகள் 6 சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களிலும், மற்ற 14 சேலம், கோவை, கிருஷ்ணகிரி, வேலூர், மதுரை, தூத்துக்குடி, நெல்லை, திருச்சி, சிவகங்கை ஆகிய மாவட்டங்களில் இருக்கிறது.

சென்னைக்கு தினம் வரும் அத்தியாவசிய பொருட்களான பால், காய்கறிகள், பூக்கள் என பல வெளி மாவட்டங்களில் இருந்து வருவதால் அவற்றின் விலை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதே நேரத்தில் தென் மாவட்டங்கள், மற்றும் கொங்கு மண்டல பகுதிகிளில் இருந்து சென்னைக்கு செல்லும் ஆம்னி பஸ்களின் கட்டணமும் இதன் காரணமாக கூட்டப்படாலாம். அரசு பஸ் டிக்கெட்டில் ஏற்கனவே சுங்கச்சாவடி கட்டணம் வசூலிக்கப்படுவதால் அதன் விலை உயராது.

இதற்கிடையில் ஏற்கனவே தமிழகத்தில் தேசிய நெடுஞ்சாலைகள் முறையாக பராமரிக்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டு உள்ளது. குறிப்பாக மதுரையில் இருந்து கன்னியாகுமரி வரை உள்ள ரோடுகள் முழவதும் சேதமடைந்து காணப்படுகிறது. இதனால் பொதுமக்கள் அதிருப்தியில் உள்ள நிலையில் இந்த விலையுயர்வு அமலுக்கு வருகிறது.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்ட செய்திகள்:


Click it and Unblock the Notifications








