மகிழ்ச்சி தரும் அறிவிப்பு: ரயில் பயணிகளே விரைவில் உங்களுக்கு தீபாவளி பரிசு காத்திருக்கிறது..!!
மகிழ்ச்சி தரும் அறிவிப்பு: ரயில் பயணிகளே விரைவில் உங்களுக்கு தீபாவளி பரிசு காத்திருக்கிறது..!!
இந்தியாவில் ரயில் பயணங்களை மேற்கொள்பவர்களுக்கு புதிய மகிழ்ச்சி அறிவிப்பை வெளியிட்டுள்ளது மத்திய ரயில்வேதுறை அமைச்சகம்.

ரயில் பயணம், இதற்கு இந்தியாவில் மிகப்பெரிய கலாச்சாரம் உண்டு. இந்தியாவை பொறுத்தவரை ரயில் பயணங்கள் புதிய உறவை உருவாக்குகின்றன, பலதரப்பட்ட நட்பு வட்டத்தை விரிவாக்கம் செய்கிறது.

நமது சுற்றமும், நட்பும் ரயில் பயணங்களில் புதுமை அடைகின்றன. இந்தியாவில் ரயில் மூலம் கிடைத்த நட்பை காலம் காலமாக காப்பாற்றி வரும் குடும்பங்களும் இன்றும் இருக்கின்றன.
Recommended Video


அதனால் போக்குவரத்து வசதிகளில் இந்தியாவில் பெரும்பாலானவர்களுக்கு ரயில் பயணம் என்பது பிரத்யேகமான ஒன்று.
இந்த உணர்வு முன்னர் இருந்ததை விட இன்னும் மேம்படுத்தப்பட்டு வருகிறது. மோனோ, மெட்ரோ என போக்குவரத்தில் புதுமையும் அமைகிறது.

நீண்ட தூர பயணங்களுக்கு ரயிலில் செல்வதைத்தான் இந்திய மக்கள் விரும்புகின்றனர். முன்னர் காலங்களில் பயணிகள் அனைவரும் சக பயணிகளுடம் உரையாடி பயண நேரத்தை கடத்துவார்கள்.

ஆனால் இன்று காலம் மாறிவிட்டது. பலதரப்பட்ட ரயில் பயணிகள் ஸ்மார்ட் ஃபோன்கள் மற்றும் மடிக்கணினிகளின் மூழ்கி விடுகின்றனர்.
இதனால் அருகில் உட்கார்ந்திருக்கும் மற்ற பயணி யார் என்பதை கூட நம்மில் பலர் தெரிந்துக்கொள்ள தயாராக இல்லை.

ஸ்மார்ட் ஃபோன்கள், லேப்டாப் இல்லாத பயணிகள் உறங்கி விடுகின்றனர். இதனால் முன்னர் போல ரயில் பயணங்கள் சுவாரஸ்யமாக இருப்பதில்லை.

அதனால் இன்றைய காலங்களில் ரயில் பயணிகள் போர் அடிப்பதாக பலரது கருத்தாக உள்ளது. இதை மாற்ற ரயில்வே நிர்வாகம் புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

ஸ்மார்ட்ஃபோன்கள் மற்றும் லேப்டாப்களில் மூழ்கி கிடப்பவர்களை விடுங்கள். மீதமுள்ள ரயில் பயணிகளுக்கு இந்த அறிவிப்பு நிச்சயம் நல்ல ஒரு பொழுதுபோக்காக இருக்கும்.

இந்தியளவில் நெடுந்தூர பயணங்களை மேற்கொள்பவர்களுக்காக பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளை வழங்க பரிந்துரைகள் கோரப்பட்டுள்ளதாக ரயில்வே இணை அமைச்சர் ராஜென்கோஹெய்ன் தெரிவித்துள்ளார்.

பயணிகள் பொழுதுபோக்கு வசதிகளை வேண்டுபவர்கள் ரயில்வே நிர்வாகம் பதிவேற்றம் செய்துள்ள பாடல்கள் மற்றும் படங்களை பதிவிறக்கம் செய்துக்கொள்ளலாம்.

அவற்றை தங்களது ஸ்மார்ட் ஃபோன்கள் மற்றும் லேப்டாப்புகளில் இணைத்து பொழுதை கழிக்கலாம். இதற்கான தகவல்களை மக்களைவியில் எழுத்துப்பூர்வமாக கூறியுள்ளார் ரயில்வே இணை அமைச்சர் ராஜென்கோஹெய்ன் .

சதாப்தி மற்றும் ராஜ்தானி உட்பட மொத்தம் 1300 ரயில் சேவைகளில் பயணிகளுக்கான இந்த பொழுது போக்கு வசதி ஏற்படுத்தி தரவுள்ளது.

இதற்கான பரிந்துரைகள் கடந்த ஜூலை 6ம் தேதி கோரப்பட்டுள்ளது. மேலும் இந்த வசதிக்காக பயணிகளிடம் கூடுதல் கட்டணம் வசூலிக்கவும் வாய்ப்புள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications








