நடுரோட்டில் தீப்பிடித்து எரிந்த சூப்பர் கார்கள்: தாய்லாந்தில் பரபரப்பு
தாய்லாந்து நாட்டில் சூப்பர் கார்களை ஏற்றிச் சென்ற டிரெய்லரில் தீப்பிடித்ததால், பல கோடி மதிப்புடைய கார்கள் தீயில் கருதி நாசமானது. தாய்லாந்து நாட்டிலுள்ள நாகோன் ராட்சசீமா மாகாணத்தில் இந்த விபத்து நிகழ்ந்தது. அந்த டிரெயிலரில் ஃபெராரி 430, லம்போர்கினி மூர்சிலாகோ எல்பி640, பென்ட்லீ கான்டினென்டல் ஃப்ளையிங் ஸ்பர், பிஎம்டபிள்யூ எக்ஸ்6 உள்பட பல விலையுயர்ந்த கார்கள் ஏற்றப்பட்டிருந்தன.
போகும் வழியில் அந்த டிரெய்லரில் திடீரென தீப்பிடித்துக் கொண்டுள்ளது. இதனை பார்த்த டிரைவர் டிரெய்லரை நடுரோட்டிலேயே நிறுத்திவிட்டு இறங்கிவிட்டார். தீ வேகமாக பரவியதை கண்டதும் உடனடியாக தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்துள்ளார்.
அவர்கள் வருவதற்குள் பல கார்கள் தீயில் முற்றிலும் கருகிவிட்டன. இந்த தீ விபத்துக்கான காரணம் இதுவரை தெரியவில்லை. இதுகுறித்து டிரைவரை பிடித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். தீயில் கருகிய கார்களின் மதிப்பு ரூ.18.62 கோடியாக மதிப்பிடப்பட்டுள்ளது.

தீயில் கருகிய சூப்பர் கார்கள்

தீயில் கருகிய சூப்பர் கார்கள்

தீயில் கருகிய சூப்பர் கார்கள்

தீயில் கருகிய சூப்பர் கார்கள்

தீயில் கருகிய சூப்பர் கார்கள்

தீயில் கருகிய சூப்பர் கார்கள்



Click it and Unblock the Notifications








