Just In
- 40 min ago 140 பேர் தான் இந்த ஸ்கூட்டரை வாங்க முடியும்! அதுக்கு மேல எவ்வளவு கோடி குடுத்தாலும் கிடைக்காது!
- 1 hr ago இன்டிகாவையே விற்பனையில் மிஞ்சிய டாடா பஞ்ச்! பலாபழத்தில் மொய்க்கும் ஈக்களைவிட மோசமாக மக்கள் மொய்க்குறாங்க!
- 2 hrs ago சாதாரணமாவே இந்த மாருதி காரை வீட்டுக்கு மளிகை சாமான் வாங்குற மாதிரி வாங்கிட்டு இருக்காங்க.. இதுல இது வேறையா!
- 8 hrs ago இந்தியாவில் விவசாயம் பார்ப்பவர்கள் அதிகமாகி விட்டார்களா என்ன? மஹிந்திரா டிராக்டர்ஸ் சேல்ஸ் டாப் கியரில்!!
Don't Miss!
- News 2 பூட்டுக்கள்.. அடுத்த 45 நாட்கள்.. வாக்குப்பதிவு எந்திரங்கள் எப்படி பாதுகாக்கப்படும்? இதோ விவரம்
- Sports அமுக்கு டுமுக்கு அமால் டுமால்.. தல கொஞ்சம் தள்ளி நில்லுங்க.. சிஎஸ்கேவை வெளுக்கும் தரமான மீம்ஸ்!
- Lifestyle Today Rasi Palan 20 April 2024: இன்று இந்த ராசிக்காரர்கள் பண விஷயத்தில் யோசித்து முடிவெடுப்பது நல்லது...
- Technology சுந்தர் பிச்சையின் இன்னொரு முகம்.. Ad Blocker ஆப்களுக்கு ஆப்பு அடிச்ச Google.. யூசர்களுக்கு Warning.. இனிமேல்?
- Finance 9 GB டேட்டா ரூ. 1.20 கோடியா.. அதிர்ச்சியில் புளோரிடா தம்பதி!
- Movies Actor Vijay Sethupathi: மூதாட்டியுடன் செல்ஃபி எடுத்து மகிழ்ந்த விஜய் சேதுபதி.. க்யூட்!
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
செம்ம... கோவை அரசு மருத்துவமனைக்கு புதியதாக 2 ‘ஆக்ஸிஜன்’ பேருந்துகள்!! 24 பேருக்கு சிகிச்சை தரலாம்...
கோவை அரசு மருத்துவமனையில் ஆக்ஸிஜன் வசதியுடன் கூடிய 2 பேருந்துகள் தயார் நிலையில் நிறுத்தப்பட்டுள்ளன. கோவை சுற்று வட்டார மக்களுக்கு பெரிய நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ள இந்த பேருந்துகளை பற்றி இந்த செய்தியில் பார்ப்போம்.
தமிழகம் முழுவதுமே கொரோனா வைரஸின் இரண்டாவது அலை தீவிரமாக பரவி வருகிறது. இதன் எதிரொலியாக மாநிலத்தில் கிட்டத்தட்ட பெரும்பாலான அரசு மருத்துவமனைகள் நோயாளிகளால் நிரம்பி வழிகின்றன.
எனவே படுக்கைகளுக்கு பஞ்சம் ஏற்பட்டுள்ளது. மக்கள் ஆக்ஸிஜன் வசதியுடன் கூடிய படுக்கைகள் கிடைக்காமல் திண்டாடிவரும் செய்திகளை சமீப நாட்களாக அதிகளவில் பார்த்தும், கேட்டும் வருகின்றோம்.
சிகிச்சைக்கு வரும் தொற்று நோயாளிகள் ஆம்புலன்சிலேயே காத்திருக்க வேண்டிய நிலை உருவாகியுள்ளது. இதில் தொற்று முற்றியவர்கள் ஆம்புலன்ஸிலேயே உயிரிழக்கும் கொடுமையையும் அன்றாடம் பார்க்கின்றோம்.
தமிழகத்தில் சராசரியாக ஒவ்வொரு நாளும் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். அத்தகையவர்களில் பெரும்பான்மையானவர்கள் ஏழைகள் என்பதால் மாவட்டங்களில் உள்ள அரசு பொது மருத்துவமனைகளும் வேகமாக நிரம்பி வருகின்றன.
இதற்கு அரசும், சில தனியார் நிறுவனங்களும் பல்வேறு கட்ட நடவடிக்கைகளை தொடர்ந்து மேற்கொண்ட வண்ணம் உள்ளன. இந்த வகையில் கொரோனா வைரஸின் தாக்கம் அதிகம் உள்ள கோவை மாவட்டத்தின் அரசு மருத்துவமனைக்கு தனியார் நிறுவனங்கள் ஆக்ஸிஜன் வசதியுடன் கூடிய இரு பேருந்துகளை வழங்கியுள்ளன.
கேஜிஐஎஸ்எல் மற்றும் தொழில்முனைவோர் அமைப்பு, சேவா கேஸ் என்ற தனியார் நிறுவனங்கள் தான் இந்த ஆக்ஸிஜன் பேருந்துகளை மக்களின் பயன்பாட்டிற்காக அர்பணித்துள்ளன. ஆக்ஸிஜன் தேவையுடன் வரும் கொரோனா நோயாளிகளுக்கு இந்த பேருந்துகளில் வைத்து சிகிச்சை அளிக்கப்படவுள்ளன.
இதற்காக இந்த பேருந்துகளில் தலா 12 இருக்கைகள், ஆக்ஸிஜன் சிலிண்டர்களுடன் உள்ளன. 7 கன மீட்டர் கொள்ளளவு கொண்ட இந்த சிலிண்டர்கள் பேருந்திற்கு 6 என கொடுக்கப்பட்டுள்ளன. இந்த இரு ஆக்ஸிஜன் பேருந்துகளின் மூலம் மொத்தம் 24 நோயாளிகள் பயன் பெற முடியும்.
24 நோயாளிகளுக்கு ஒரு நாளைக்கு தேவையான ஆக்ஸிஜன் எப்போதும் இந்த பேருந்தில் இருப்பில் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த இரு பஸ்கள் கோவை அரசு மருத்துவமனையை நம்பியிருப்பவர்களுக்கு மிகுந்த நம்பிக்கை தூண்களாக உருவெடுத்துள்ளன.